Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடம்பனுக்காக உக்கிர மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பனுக்காக உக்கிர மோதல்

2/17/2008 10:05:13 AM

வீரகேசரி வாரவெளியீடு - மன்னார் களமுனையில் அடம்பன் நகரைப் படையினர் கைப்பற்றி விட்டதாகப் பலமுறை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அடம்பன் சந்திக்கு தெற்கே 1.கி.மீ தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும், மேற்கே 800 மீற்றர்வரை முன்னேறியிருப்ப தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அடம்பன் களமுனையின் முக்கியத்துவம், அதன் இன்றையநிலை என்பனவற்றை இந்த வாரம் எடுத்து நோக்குவது பொருத்தமானது.

சிலர் கூறுவதைப் போன்று அடம்பன் ஒன்றும் பெரியநகரம் சார்ந்த பகுதியல்ல. இங்கு இருக்கின்ற ஒரேயொரு பெரியவிடயம் அடம்பன் தள வைத்தியசாலையாகும். மிக அண்மையில்தான் தொண்டர் நிறுவன உதவி யுடன் இது புனரமைக்கப்பட்டது. மன்னாரின் முருங்கன் நகருடன் ஒப்பிடும் போது அடம்பனை நகரம் என்றே சொல்ல முடியாது.

ஆனால் படைத்தரப்பு வெளியிடும் தகவல்களில் அடம்பன் நகர் என்ற சொல்லை அடிக்கடி பயன்படத்துவதற்குக்காரணம் இது பெரும் முக்கியத்துவமான இடம் என்பதை வலியுறுத்துவதற்கேயாகும். நகரம் என்ற ரீதி யில் அடம்பன் பெரும் முக்கியத்துவம் வாய்ந் ததாகக் குறிப்பிட முடியாவிட்டாலும் இதன் அமைவிடம் முக்கியமானது.

மன்னார் நகருக்குக் கிழக்காக படையினரின் தளங்களில் இருந்து சாதாரணமாக 81மி.மீ, 120 மி.மீ மோட்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடிய எல்லைக்குள்தான் அடம்பன் சந்தி இருக்கிறது. வவுனியா மன்னார் வீதிக்கு (அ14) வடக்காகவும், மன்னார் பூநகரி வீதிக்கு (அ 32) கிழக்காகவும் இருக்கின்ற ஒரு முக்கியமான இடம்தான் அடம்பன். கேந்திர ரீதியாக இது முக்கியத்தவம் பெறக் காரணம், இரண்டு முக்கிய வீதிகள் சந்திக்கின்ற ஒரு சந்தியாக இருப்பதும், அடம்பன் ஊடாகவே சில பிரதேசங்களைச் சென்றடைய வேண்டியிருப்பதுமாகும். அ14 வீதியில் உள்ள உயிலங்குளத்தையும் அ32 வீதியில் உள்ள பெரியமடு என்ற இடத்தையும் (மன்னாரில் மற்றொரு பெரியமடு, மடுவுக்கு வடமேற்காக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.) இணைக்கின்ற இரண்டாம்தர வீதி அடம்பன் சந்தி ஊடாகவே செல்கிறது.

அதேவேளை சரித்திர முக்கியத்துவம் பெற்ற மாந்தையில் இருந்து, கிழக்கு நோக்கியதாக மடுவரைக்கும் செல்கின்ற மூன்றாம் தர வீதி அடம்பன் சந்தியைக் கடந்து ஆண்டான்குளம், ஆட்காட்டிவெளி ஊடாகச் செல்கின்றது. ஆட்காட்டிவெளிக்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள அடம்பன் மற்றும் ஆண்

டான்குளம் ஆகிய சந்திகளைக் கைப்பற்றி நிலைகொண்டால், ஆட்காட்டிவெளி முதற்கொண்டு மடு வரையாக உள்ள வீதிக்குத் தெற்குப்புறமாகவும், கட்டுக்கரைக்குளத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும் நிலைகொண்டிருக்கும் புலிகளுக்கான விநியோகங்கள் தடைப்படும். இப்பகுதியில் புலிகள் தொடர்ந்து நிலைகொள்வதானால் மாற்றுவழியில், சிரமம் நிறைந்த மடு வழியாகவோ அல்லது பள்ளமடு பாலம்பிட்டி வீதியில் இருந்தோதான் விநியோகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவேதான் படையினர் அடம்பனைக் குறி வைத்திருக்கின்றனர். அடம்பன் சந்தியைப் படையினர் தற்போது கிட்டத்தட்ட மூன்று முனைகளில் நெருங்கியுள்ளனர். மன்னாருக்கு வடக்காக இருக்கின்ற புலிகளின் பிரதான கடற்படைத் தளங்களில் ஒன்றும், கடல்வழி விநியோகத் தளமுமான விடத்தல்தீவை குறிவைத்திருக்கும் படைத்தரப்புக்கு முதற்கட்டமாக அடம்பன் சந்தியைக் கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அடம்பன் சந்தி கைப்பற்றப்பட்டு விட்டால் புலிகள் விடத்தல்தீவைக் தக்கவைக்கும் திறனை இழந்து விடுவர் என்று படைத்தரப்பு கணிப்பிட்டிருக்கிறது. தற்போது புலிகள் விடத்தல்தீவை ஊடறுத்து இரண்டாவது நிலைக் காப்பரண்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அ14 வீதியில் உள்ள உயிலங்குளத்தில் இருந்து வடக்காக 8 கி.மீ தொலைவில் உள்ள அடம்பன் சந்தியை நோக்கி மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய திசைகளினூடாக படையினர் தாக்குதல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் தலைமையில் கடந்த வருடம் உருவாக்கப்பட்ட 58வது டிவிசன் இப்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் செப்ரெம்பர் 3ஆம் திகதி உயிலங்குளத்தில் இருந்து இந்த புதிய போர் அரங்கு படையினரால் திறக்கப்பட்டது. இதன்பின்னர் அடம்பனை படையினர் நெருங்கி விட்டதாகவும் அடம்பனின் சில பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்த போதும் இப்பத்தி எழுதப்படும் வரையில் அடம்பன்சந்தியும் அதன் சுற்றாடலும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ஜெயசிக்குறு நடவடிக் கையின் போது புளியங்குளம் சந்தியைக் கைப் பற்றுவதற்குப் படையினரும் அதைத் தக்கவைப்பதற்குப் புலிகளும் நடத்தியதைப் போன்ற மூர்க்கமான சண்டை அடம்பன் சந் திக்காக தற்போது நடைபெற்று வருகிறது.

அடம்பனுக்கு கிழக்கு, தென்கிழக்குத் திசையில் முதலாவது களமுனையைப் படையினர் திறந்திருக்கின்றனர். கேணல் சுஜீவவின் தலைமையில் 581 பிரிகேட் உயிலங்குளம் சோதனைச்சாவடி ஊடாக முன்னேறி கட்டுக்கரைக்குளத்தின் மேற்கு மற்றும் வடமேற்குப் பிரதேசம் வழியாக பரப்பாங்கண்டல் வரை முன்னகர்ந்திருக்கிறது.

10ஆவது கஜபா, 8ஆவது கெமுனுவோச், 8வது சிங்க றெஜிமென்ட் என மூன்று காலாற்படை பற்றாலியன் களும் 5ஆவது கவசப்படைப்பிரிவும் இப்பகுதியில் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக் கின்றன. தற்போது அடம்பன் சந்தியில் இருந்து 581 பிரிகேட் துருப்பினர் சுமார் 1.5கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்து அடம்பனை நோக்கி மேற்குத் திசையில் இருந்து கேணல் ஹஷான் சில்வா தலைமையிலான 582 பிரிகேட் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. மாந்தையில் இருந்து தொடங்கப்பட்ட இந்தப் படைநகர்வில் 2ஆவது மற்றும் 3ஆவது கொமாண்டோ றெஜிமென்ட் மற்றும் 9ஆவது கெமுனுவோச் ஆகிய பற்றாலியன்கள் நரிக்குளம், சேற்றுக்குளம், வண்ணாங்குளம் ஆகிய சிறிய கிராமங்களைக் கைப்பற்றியுள்ளன.

இந்தக் களமுனையில் கடந்தமாதம் 29ஆம் திகதி மேஜர் கமல் பின்னவலவின் தலைமையிலான துருப்புக்கள் வியத்தான்குளத்தைக் கைப்பற்றியிருந்தன. அடம்பன் சந்தியில் இருந்து 800மீற்றர் தொலைவில் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமே வியத்தான்குளம் ஆகும். வியத்தான்குளத்தைக் கடந்து அடம்பனைச் சென்றடைவதற்கு படையினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக முற்படுகின்ற போதும் புலிகளின் எதிர்ப்பு கடுமையானதாக இருந்து வருகிறது. பொறிவெடிகளும், மிதிவெடிகளும் புலிகளின் மோட்டார் தாக்குதலும் படையினருக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்துவதால் இந்த முனையில் முன்னேற்றம் தடைப்பட்டிருக்கிறது. அடம்பனை நோக்கிய மூன்றாவது களமுனையும் உயிலங்களத்தில் இருந்தே திறக்கப்பட்டது. அடம்பன் உயிலங்குளம் வீதியை மையப்படுத்தி, தெற்கு வாட்டில் முன்னேறிச் சென்று அடம்பனைக் கைப்பற்றும் வியூகத்துடன் கேணல் சுராஜ் பன்சஜய தலைமையிலான 583 பிரிகேட் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அடம்பன் வீதி வழியாக முன்னேறிச் செல்வதற்குப் புலிகள் கடும் எதிர்ப்புக்காட்டி வருவதால் வீதிக்கு மேற்குப் புறமாக உள்ள நீலாச்சேனை வழி யாக பாலைக்குழிவரை படையினர் முன்னகர்ந்துள்ளனர். அடம்பனுக்குத் தென்மேற்குத் திசையில் சுமார் 2கி.மீ தொலைவில் பாலைக்குழியில்

நிலை கொண்டிருக்கும் 6வது கெமுனுவோச் படையினர் கடந்த பல வாரங்களாக முன்னகர எடுக்கும் முயற்சிகளைப் புலிகள் முறியடித்து வருகின்றனர். பாலைக்குழி கிராமம் அடம்பன் வீதிக்கு மேற்காக சுமார் 1.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தக் களமுனை யில் புலிகளின் உக்கிரமான பதில் தாக்குதல்கள் இடம்பெறுவதாலும் பொறிவெடிகள், மிதிவெடிகள் வைக்கப்பட்டிருப்பதாலும், சினைப்பர் தாக்குதல்களா லும் படையினர் தரப்பு சேதங்கள் அதிகரித்துள்ளன. மூன்று முனைகளில் இருந்தும் நகர்த்தப்படும் ஒரு டிவிசன் துருப்புக்கள் ஒருசில நாட்களில் அடம்பனை இலகுவாகச் சுற்றிளைத்துப் பிடித்துவிடும் என்று படைத்தரப்பு காலஎல்லை நிர்ணயித்துப் பலவாரங்களாகி விட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாகப் படையினரால் இந்தப்பகுதியில் எதிர்பார்த்தளவு வெற்றியை பெறமுடியவில்லை. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அடம்பனைக் கைப்பற்றவது தொடர்பான வியூகங்களை வகுத்துக் கொடுக்க கடந்த ஆறு வாரங்களில் நான்கிற்கும் குறையாத தடவைகள் வன்னிக்குச் சென்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிவிரிச்சானிலும், பாலைக்குழியிலும் இராணுவ நகர்வு முயற்சிகள் முறியடிப்பு

17.02.2008 / நிருபர் எல்லாளன்

இழப்புக்களுடன் படையினர் திரும்பினர்.

மன்னார் பண்டிவிரிச்சானிலும், பாலைக்குழியிலும் நேற்றும் நேற்றுமுன்தினமும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நான்கு முன்னேற்ற முயற்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றனர்.

மன்னார் பண்டிவிரிச்சானில் படையினர் நேற்று மேற்கொண்ட இரு முன்னேற்ற முயற்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு படையினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் ஒன்பது படையினர் காயமடைந்துமுள்ளனர்.

பல்குழல் வெடிகணைகளினதும் ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடனும் இந்த இரு முன்னேற்ற முயற்சிகளையும் படையினர் மேற்கொண்டனர். நேற்றுக்காலை 10.00 மணிக்கு முதலாவது முன்நகர்வும் மாலை 3.20மணிக்கு இரண்டாவது முன்நகர்வும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. இவ்விரு நடவடிக்கைகளும் விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுப் படையினர் தமது நிலைகளிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

முதலாவது முன்னேற்ற முயற்சிக்கு எதிரான சண்மைகள் 12.00மணிவரைக்கும் நீடித்தது. இதில் படையினர் தரப்பில் இரண்டுபேர் கொல்லப்பட்டதுடன் ஐந்து படையினர்காயமடைந்திருந்தனர். இழப்புக்களைச் சந்தித்த படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றனர்.

இதனையடுத்துப் பிற்பகல் 3.20 மணிக்கு அதே பிரதேசத்தின் ஊடாகப் படையினர் இரண்டாவது முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். செறிவான எறிகணைகளின் சூட்டுப்பலத்துடன் கனரக ஆயுதங்களின் பலப்பிரயோகத்துடனும் இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்கொண்ட விடுதலைப்புலிகள் ஒரு மணிநேரம் கடும் சண்டையிட்டனர். இதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதுடன் நான்கு படையினர் காயமடைந்தனர்.

இழப்புக்களை அடுத்து படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றனர். இந்தத் தாக்குதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இதே பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு படையினர் ஒரு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் 6.30 மணிவரைக்கும் சண்டையிட்டனர். இதில் படைத்தரப்பிற்கு இழப்புக்கள் எற்பட்டதையடுத்து படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, மன்னார் பாலைக்குழியில் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழவிடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இழப்புக்களை அடுத்துப் படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச்சென்றுள்ளனர்.

நேற்றுக்காலை 7.00 மணிக்கு ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதாரவுடன் படையினர் முன்நகர்வில் ஈடுபட்டனர். இதனை எதிர்கொண்ட விடுதலைப்புலிகள் சுமார் ஒருமணிநேரம் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்திப் படையினருக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தினர். இதனையடுத்துப் படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச்சென்றனர். பின்வாங்கிச் சென்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் படையினருக்கு மேலும் இழப்புக்கள் ஏற்பட்டன. எனினும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் அடம்பன் பகுதியில் சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை அடுத்து அங்கு கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று 10 மணியளவில் அடம்பன் தெற்குப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் நோக்கி வலிந்த தாக்குதலைத் தொடுக்க வந்த படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை. இருந்து படையினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

மன்னார் பாலைக்குழிப்பகுதியில் இருந்து அடம்பன் நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 படையினர் காயமடைந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.