Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாக். தேர்தல்: எதிர்க்கட்சிகள் வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக். தேர்தல்: எதிர்க்கட்சிகள் வெற்றி

.

Tuesday, 19 February, 2008 10:08 AM

.

இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

.

வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று காலை வெளியான அதிகாரபூர்வமான முடிவுகளின்படி எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக்என் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வெல்லும் நிலையை பெற்றுள்ளதாக தெரிகிறது.

முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கியூ பின்னடைவை சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட முடிவுகளும் இதே நிலையை பிரதிபலிக்கின்றன.

இந்த தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வமான முடிவுகள் வெளியாக நாளை மாலை ஆகலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அதிபர் முஷாரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன.

malaisudar.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் : பெனாசிர், நவாஸ் ஷெரீஃப் கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008( 15:34 IST )

பாகிஸ்தானின் தேச சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், அதிபர் முஷாரஃபை கடுமையாக எதிர்த்து வரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன!

பாகிஸ்தான் தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 269 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பிற்பகல் 2 மணி வரை முடிவுகள் வெளியான 238 தொகுதிகளில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 84 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் முஷாரஃப் மேற்கொண்ட ராணுவப் புரட்சியின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் முஷாரஃப் ஆதரவு பெற்று ஆளுங்கட்சியாக இருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களில் பலரும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

முட்டாஹிடா குவாமி மூமெண்ட் 19 இடங்களிலும், அவாமி தேசிய கட்சி 10 இடங்களிலும், சுயேட்சைகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் தேச சட்டப் பேரவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், இவைகள் இரண்டும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, சுயேட்சைகள் மற்ற இரண்டு கட்சிகளின் துணை கொண்டு முஷார·பிற்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரும் பலத்தையும் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு 40 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தபோதிலும், வாக்காளர்கள் தங்கள் முடிவுகளை தெளிவாகத் தெரிவித்துள்ளது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.

மதவாத அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான முட்டாஹிடா மஜ்லிஸ்-ஈ-அமால் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது மட்டுமின்றி, கட்சிகள் சார்பாக நடத்தப்பட்ட மதவாதிகள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர். இக்கூட்டணியின் தலைவர் மெளலான பஸ்லூர் ரஹ்மான் தோற்கடித்துள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/i...080219042_1.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் புதிய ஆட்சி

Friday, 22 February, 2008 11:53 AM

.

இஸ்லாமாபாத், பிப்.22: பாகிஸ்தானில் மத்தியிலும், மாகாணங்களிலும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைவர் நவாஸ்செரீப்பும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

.

இம்மாதம் 18ந் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டமன்றங்களுக்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (88 இடங்கள்), முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் (66 இடங்கள்) அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றன.

அதிபர் முஷாரப்பின் ஆதரவுப்பெற்ற கட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தமுள்ள 272 இடங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், நேற்று மத்தியிலும், மாகாணங்களிலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைவர் நவாஸ்செரீப்பும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் புதிய ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் சேர்ந்து பணியாற்ற ஒப்புக் கொண்டு உள்ளன. இதற்கான அறிவிப்பை இவ்விரு தலைவர்களும் பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அறிவித்தனர்.

ஆயினும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி, அமைய உள்ள புதிய அரசாங்கத்தில் பங்கேற்குமா? அல்லது வெளியிலிருந்து ஆதரிக்குமா? என்று தெளிவாக தெரியவில்லை.

நீதித்துறையை சீரமைக்க வேண்டும் என்ற விஷயத்தில் இரு கட்சி களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று நவாஸ்செரீப் தெரிவித்தார். தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பை தமது கட்சி மதிப்பதாகவும் அவர் கூறினார்.

புதிய ஆட்சி அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி ஆதரவு வழங்குவதுடன் அது தன் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்வதையும் உறுதி செய்வோம் என்றும் நவாஸ்செரீப் குறிப்பிட்டார்.

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு அதிபர் முஷாரப்புக்கு எதிரானது என்றும், அதனை அவர் விரைவில் ஏற்றுக் கொள்வது அவருக்கு நல்லது என்றும் அவர் கூறினார். தேசிய கருத்தொற்றுமை அடிப்படையில் தமது கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டிருப் பதாக சர்தாரி கூறினார்.

அதிபர் பதவியிலிருந்து முஷாரப்பை பாகிஸ்தான் மக்கள் கட்சி நீக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சர்தாரி அதனை நாடாளுமன்றம் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார். புதிய ஆட்சி அமைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சர்தாரி, அதற்கு முன்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் முடிவு செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறினார்.

"அரசு அமைப்பது மிக முக்கியமான விஷயம். இரண்டு மணி நேர சந்திப்பில் இது பற்றிய எல்லா விஷயங்களையும் முடிவு செய்துவிட முடியாது. நாங்கள் மீண்டும் சந்தித்து பேசுவோம். கொள்கை அளவில் சேர்ந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளோம்' என்று சர்தாரி தெரிவித்தார்.

malaisudar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.