Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரி அல்லது ஒபாமாவின் வெற்றியை இலங்கை அரசு விரும்பவில்லை.

Featured Replies

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்து சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கபட்டுள்ள அதே வேளை, இலங்கையிலும் இந்த பிரச்சாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றறுள்ளதாக இணையத்தள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது.

'அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை' எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அரசு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் இடம் பெறும் போட்டியில் ஆர்வம் காட்டாத போதிலும், ஜனாதிபதி தேர்தலில் ஜன்நாயகக் கட்சி தோற்க வேண்டுமென்பதே அதன் விருப்பமாக இருக்கலாம் என்பது போல் தோன்றுகிறது.

மஹிந்த அரசில் சேர்ந்த எவரும் வெளிப்படையாக இதனைத் தெரிவிக்காவிட்டாலும் அவர்களது நம்பிக்கைகள் குடியரசுக் கட்சியிலேயே தங்கியுள்ளன.

ஓபாமா, அல்லது ஹிலாரி வெற்றி பெற்றால் அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமென இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை வலியுறுத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடியரசுக்கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன், தாமும் தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரை' தொடர்ந்து நடத்தப் போகிறார் எனத் தெரிவித்துள்ள்மையே அவர்களது இந்தக் கருத்திற்குக் காரணமாகும்.

புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இலங்கை, இந்தியா, பிலிபைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை அதனால் நன்மையடைந்துள்ளது.

2001 செப்படம்பர் 28ம் நாள் ஐ.நா.பாதுகாப்புச் சபை பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கும் சாவதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

குறிப்பிட்ட தீர்மானமும் சர்வதேச சமூகம் ஏனைய நடவடிக்கைகளுமே விடுதலைப்புலிகள், யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்கக் காரணம் எனச் சிலர் கருதுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக சில நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்தன.

இந்த நாடுகளின் நிலைப்பாடு தளர்ச்சியடையத் தொடங்கிய சந்தாப்பங்களில் இலங்கை அரசு பயங்கரவாத்திற்கு எதிரான அவர்களது நிலைப்பாட்டை நினைவுபடுத்தி, புலிகள் மீதான பிடி தொடர்வதை உறுதி செய்தது.

எனினும் அமெரிக்காவின் குடியரசுக்கட்சி போன்று, ஜனநாயகக் கட்சி பயங்கரவாதத்திற்கு எதிரான போரை கடுமையாக முன்னெடுக்காது என்ற அச்சம் இலங்கை அரசின் மத்தியில் காணப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சிகளின் இரு வேட்பாளர்களும் இலங்கை யுத்தத்தை பயங்கரவாத்திற்கு எதிரான போராகக் கருதாததே அதற்குக் காரணம்.

பாரக் ஓபாமா, 'எமது சமூகத்தை சேராதவர்கள் அரவணைக்க மறுப்பதால் உண்டாதே இலங்கை நெருக்கடி' என்றார்.

ஹிலாரி, அரசு சாராத இத்தகைய செயற்பாட்டாளர்களை வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டுமென கோரியதுடன், விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஏனைய பயங்கரவாத அமைப்பிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

அவரின் இந்தக் கருத்திற்கு கிடைத்த ஆதரவே அமெரிக்காவிலுள்ள தமிழ் செல்வந்தர்கள் ஹிலாரியின் பிரசாரத்திற்கு நிதி வழங்கக் காரணம்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த இலங்கை அரசு உடனடியாக தூதுவர்களை சிளின்டனின் பிரசார அலுவலகத்திற்கு அனுப்பியது.

ஒபாமா மற்றும் ஹிலாரியின் அறிக்கைகளுக்கு புலிகளின் ஆதரவு இணைத்தளங்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

விடுதலைப்புலிகள் கொசோவோ குறித்து உன்னிப்பாக அவதானிப்பது அவர்களது தலைவரின் மாவீரர் தின உரை மூலம் புலனாகியது.

இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள், கோசோவோ மற்றும் கிழக்கு திமோரிலிருந்து வேறுபட்டவை என்பது தலைவர் பிரபாகரனிற்கு தெரியாமலில்லை. இப்படி அந்தச் செய்தி ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

இருவரில் ஒருவருக்கு தான் ஜனாதிபதியாகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. புஸ்ஸின் கட்சிக்கு மீண்டும் ஒரு முறை அமெரிக்க மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதாவது ஒரு பற்றேன்(pattern) இங்குண்டு.இரண்டு முறை தான் ஆக கூடியதாக ஒரு கட்சி ஆட்சி செய்யும்.பிறகு மற்ற கட்சிக்கு மாறி மக்கள் வாக்களிப்பர். என்றாலும் எதுவும் நடக்கலாம். யார் நினைத்தது ஜனாதிபதி வேட்பாளராக ஒரு கறுப்பு இனத்தவரோ அல்லது பெண் வருவாரென்று.

எப்படி விரும்பும் ???

" Don't change your struggle for the world.

LET your struggle change the world."

உலகம் சுற்றுவது மாதிரி கொள்கைகளும் சுற்றிச்சுற்றி வரும்... எங்கட நேரம் வரும் வாரை முயற்சித்துக்கொண்டே இருக்கோணும்... சரியான நேரம் வரேக்குள்ள பொயின்ரில அடிக்கவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்த சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ள அதேவேளைஇ இலங்கையிலும் இந்தப்பிரசாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை? எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் பயங்கரவாதப் பட் டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசுஇ அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடுவோர் குறித்து ஆர்வம் காட்டாத போதிலும்இ ஜனாதிபதிக் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோற்க வேண்டுமென்பதே அதன் விருப்பமாக இருக்கலாம் என்பதுபோல் தோன்றுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை அதனால் நன்மையடைந்துள்ளது. 2001 செப்டெம்பர் 28ஆம் திகதி ஐ.நா.பாதுகாப்புச் சபை பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கும் சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக சில நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தன.

இந்த நாடுகளின் நிலைப்பாடு தளர்ச்சியடையத் தொடங்கிய சந்தர்ப்பங்களில் இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களது நிலைப்பாட்டை நினைவுபடுத்திஇ புலிகள் மீதான பிடி தொடர்வதை உறுதி செய்தது.

எனினும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி போன்றுஇ ஜனநாயகக் கட்சி பயங்கரவாதத்திற்கு எதிரான போரை கடுமையாக முன்னெடுக்காது என்ற அச்சம் இலங்கை அரசின் மத்தியில் காணப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சிகளின் இரு வேட்பாளர்களும் இலங்கை யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போராகக் கருதாததே இதற்குக் காரணம்.

விடுதலைப் புலிகள் கொசோவோ குறித்து உன்னிப்பாக அவதானிப்பது அவர்களது தலைவரின் மாவீரர் தின உரை மூலம் புலனாகியது. இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள்இ கொசோவோ மற்றும் கிழக்கு திமோரிலிருந்து வேறுபட்டவை என்பது பிரபாகரனிற்கு தெரியாமலில்லை இப்படி அந்தப் செய்தி ஆய்வில் மேலும் கூறப்பட்டது.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.