Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாஹிம் தெரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச்சில் அரசாங்க முக்கியஸ்த்தர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாஹிம் தெரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச்சில் அரசாங்க முக்கியஸ்த்தர் தெரிவிப்பு

2/24/2008 5:38:40 PM

வீரகேசரி நாளேடு - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்துள்ளதாகவும் அடுத்தமாத ஆரம்பத்தில் புதிய பாõளுமன்றம் பதவியேற்கும் சமயத்தில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரும் உப தலைவருமான மக்தூம் அமீன் பாஹிம் (68 வயது) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தனது பெயரை வெளியிடவிரும்பாத அக்கட்சியின் சிரேஷ்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மூடிய அறைக்குள் இடம்பெற்ற கூட்டத்தின் போது கட்சித் தலைமை பீடத்தால் பாஹிம் தெரிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

""எமது கட்சியின் கொள்கையின்படி சிந்து மாகாணத்திலிருந்தே பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் சிரேஷ்ட கட்சி அங்கத்தவரான மஹ்தூம் அமீன் பாஹிம் தெரிவு செய்யப்பட்டார்' என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதேசமயம் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவர் அஸிப் அலி சர்தாரி நவாஸின் பி.எம்.எல்.என். கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முஷாரப்பின் ஆதரவு கட்சியான "எம்.கியூ.எம்' கட்சியின் தலைவர் அல்டப் ஹுஸைனுடன் கூட்டிணைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் திடீர் முடிவு!!!

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008

இஸ்லாமாபாத்: அதிபர் பதவியிலிருந்து விலக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் செய்து விட்டதாக அந்நாட்டு மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் தனது முடிவை அவர் அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் தேர்தலில் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) பெரும் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே பதவி விலக மாட்டேன் என கூறி வந்தார் முஷாரப். இந்த நிலையில், தற்போது பதவி விலக அவர் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு, பெனாசிர் கட்சியும், ஷெரீப் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் முதல் வேலையாக தன்னை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று எண்ணுவதே முக்கிய காரணம்.

அப்படிப் போவதை விட தானாக பதவி விலகி விட முஷாரப் முடிவு செய்துள்ளார். இதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது ராஜினாமா குறித்து தீவிரமாக அவர் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும் என்றும் தெரிகிறது.

நல்ல மரியாதையோடு பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்துள்ளார் என அந்த செய்திகள் கூறுகின்றன.

அடுத்த பிரதமர் அமீன் பகீம்:

இதற்கிடையே பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பெனாசிரின் பாகி்ஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அமீன் பகீம் பதவியேற்பார் என்று தெரிகிறது.

இவரை பிரதமராக ஏற்க ஆட்சிக்கு ஆதரவு தரவுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன் வந்துவிட்டார்.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பகீம்,

புதிய அரசு பதவியேற்றவுடன் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக நம்பிக்கை இல்லா கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றாது என்று கூறியுள்ளார். இப்போது தான் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதற்குள் அதை சீர்குலைக்கும் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்றார்.

ஆனால், அரசு பதவியேற்றவுடன் முதல் வேலையாக முஷாரப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நவாஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனையால் தான் கூட்டணி ஆட்சி அமைவதி்ல் இழுபறி நீடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

thatstamil.oneindia.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.