Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொசொவோ தனிநாட்டுப் பிரகடனமும் - அதிர்வுகளும்

Featured Replies

-தாரகா-

இன்றைய சூழலில் உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் சக்திகளும், அதேவேளை ஒடுக்குமுறைகளை கையாளும் அரசுகளும் மிகவும் ஈடுபாட்டுடன் அவதானிக்கும் விடயம் கொசொவோவின் சுதந்திர அரசு பிரகடனம்தான்.

இன்றைய நவீன அரசியல் என்பது ஒருபுறம் அரச பயங்கரவாதங்களுக்கான விளக்கங்களாலும், மறுபுறம் அதனை எதிர்த்து முயறிடிப்பதற்காக போராடி வரும் விடுதலை சக்திகளின் நியாயங்களாலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த ஒரு தேசம் சுதந்திர நாடாக பரிணமித்திருப்பதானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஒரு வகையில் கொசொவோ அரசு பிரகடனமும், அதனை குறிப்பாக அமெரிக்கா உட்பட ஜரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அங்கிகரித்ததும், அரச பயங்கரவாதங்களை கையாளும் அரசுகளுக்கு ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் விளைவுதான் சிறிலங்கா அரசு அவசர அவசரமாக விடுத்த அறிக்கையாகும். அவ்வறிக்கையில் கொசொவோவின் தன்னிச்சையானதும், பெரும்பான்மை சேர்பியர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காததுமான, தனிநாட்டுப் பிரகடனம் ஏற்புடையதல்ல என்றும், அதனை அங்கிகரித்திருப்பதானது உலகில் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடுமென்றும் சிறிலங்கா தெரிவித்திருந்தது.

சிறிலங்கா அரசின் இந்த அவசரமான அறிவித்தல் ஒருவித அச்சத்தின் வெளிப்பாடுதான். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த சுலோகத்தை தனது அரச பயங்கரவாதத்திற்கு சாதகமாக பயன்படுத்தும் சூட்சுமங்களை கற்றுக்கொண்டிருந்த சிறிலங்கா அரசுக்கு, அமெரிக்காவே இந்த சுதந்திரப் பிரகடனத்தை ஆதரித்திருப்பதானது ஒரு விதமான பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

கொசொவோ பிரகடனத்தைத் தொடர்ந்து தெற்கின் சிங்கள பெரும் தேசியவாதிகள் பல்வேறுபட்ட ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். ஏற்கனவே சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் சிறிலங்கா அரசிற்கு எதிராக வலுவான பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறானதொரு நிகழ்வு மிகுந்த கரிசனைக்குரியது என சிலர் அரசை எச்சரிக்கும் தொனியிலும், வேறு சிலரோ மிலொசிவிச்சிற்கு சமதையான மகிந்த ராஜபக்சவின் தீவிர நிலைப்பாட்டுச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுபவர்களாகவும் தமது ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாய்வுகளில் சற்று விசித்திரமான கருத்துக்களையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. சிங்களத்தின் இலட்சிய இனவாதியாக கருதப்படும் நளின் டி சில்வா, சிங்களவர்களின் ஆரியத் தொன்மக் கதையில் தொடங்கி தமிழர்களுக்கு தனிநாடு கோருவதற்கு தகுதியில்லை என்னும் தனது வழமையான தொல்குடிக் கதையை கூறியிருக்கிறார்.

இவ்வாறு சிங்கள இனவாதிகள் அச்சப்படுமளவிற்கு கொசொவோ என்ன வகையான தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும்?

குறிப்பாக தமிழீழ அரசு என்னும் தமிழர்களின் எதிர்பார்ப்பிற்கு எவ்வகையான வாய்ப்புக்களை அது வழங்க முடியும்?

இவ்வகையான சர்வதேச அரசியல் போக்குகளை நமது நிலை நின்று உணர்ச்சிவசப்படாலும் கற்பனைகளில் மூழ்காமலும் ஆராய்து அதற்கு ஏற்ப நமக்கான அரசியலை திட்டமிடுவதுதான் தற்போதைய தேவையாகும்.

கொசோவா பிரச்சினையானது பல தசாப்த கால வரலாற்றைக் கொண்டிருப்பினும் விடுதலைப் போராட்டம் என்று பார்த்தால் கொசொவோ இரண்டு தசாப்த கால வரலாற்றைத்தான் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு தசாப்த கால ஆயுதவழிப் போராட்ட வரலாற்றைக் கொண்ட அதிலும் குறிப்பாக எந்தவொரு இன விடுதலைப் போராட்ட சக்திகளுடனும் ஒப்பிட முடியாதளவிலான, மிகவும் தேர்ச்சி மிக்க விடுதலை இராணுவத்தை கொண்டிருக்கும் தமிழர் தேசிய பிரச்சனையுடன் ஒப்பிட்டால் கொசொவோ மிகவும் சாதாரணமான ஒன்றுதான். கொசோவோ ஆயுத வழி விடுதலைப் போராட்டமானது, சேர்பிய - அல்பேனிய இன முரண்பாட்டினால் உருப்பெற்று, பின்னர் படிப்படியாக சேர்பிய அரசுக்கு எதிரான ஆயுதவழி விடுதலைப் போராட்டமாக பரிணமித்தது.

1990-களின் நடுப்பகுதியில் ஒடுக்கப்பட்ட அல்பேர்னியர்களின் விடுதலையை முன்னிறுத்தி கோசோவோ விடுதலை இராணுவம் (Kosovo Liberation Army - UCK, Ushtria Clirimtare e Kosoves) என்னும் ஆயுத வழி விடுதலை அமைப்பு உருக்கொண்டது.

இதுவே பின்னர் கொசோவோ ஜனநாயக கட்சியாக (Democratic parti of Ksovo) மாற்றமடைந்தது. முன்னர் கொசொவோ விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த காசிம் தாசி 2007 இல் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்று தமது கட்சிக்கான மக்கள் ஆதரவை நிரூபித்திருந்தார்.

ஆரம்பத்தில் பரந்த அல்பேனியன் (Grater Albanian) என்ற கருத்தை முன்னிறுத்திய விடுதலை இராணுவம் பின்னர் பரந்த கொசோவோ (Grater Kosovo) என்ற கருத்தை முன்னிறுத்தி தனது போராட்டத்தை முன்னெடுத்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது கொசொவோ தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொசொவோ தற்போது அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கபடுவதன் அரசியல் பின்புலங்கள், அதற்கு பின்னுள்ள மேற்கு சார்ந்த நலன்கள் என்பவை வேறு ஆய்வுக்குரியது. அது தற்போதைய சூழலில் நமக்கு அதிகம் தேவையான ஒன்றாக இருக்கப் போவதில்லை.

அமெரிக்கா 1998கள் வரை கொசொவோ விடுதலை இராணுவத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிட்டிருந்தது.

எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியினதும் ஆதரவு என்பது, அது அமெரிக்காவாக இருக்கலாம் ஜரோப்பிய யூனியனாக இருக்கலாம், எந்தவொரு அன்னிய நாடாகவும் இருக்கலாம், தனது நலன் என்பதை முன்னிறுத்தியதாகவே அதன் எந்தவொரு தலையீடும்; (உதவிகள்) அமைந்திருக்கும். இதனை விளங்கிக் கொள்வதற்கு நம்மில் சிலர் சொல்லிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய அறிவெல்லாம் தேவையில்லை சாதாரணமான அரசியல் அறிவே இதற்கு போதுமானது.

நீண்டகாலமாக மேற்கின் அதிக தலையீடுகளுக்கும் கரிசனைகளுக்கும் உள்ளாகியிருந்த கொசொவோ பிரச்சினையும், தமிழர் தேசத்தின் பிரச்சினையும் அடிப்படையில் பல்வேறு வகையில் வேறுபாடுகளைக் கொண்டது.

இரண்டுக்குமான ஒற்றுமை என்று சொல்வதானால் இரண்டுமே அரச பயங்கரவாத்திற்கு எதிராக போராடிய தேசங்களாக இருப்பதுடன், இரண்டுமே பெருந்தேசியவாத அரசியலை எதிர்கொண்ட தேசங்களாகவும் இருக்கின்றன.

ஆயினும் இரண்டு தேசங்களின் பிரச்சினைகளின் தார்ப்பரியமும் அடிப்படையில் வேறானது. ஆனால் இந்த இடத்தில் தற்போதைய உலக அரசியல் ஒழுங்கில் கொசொவோ என்னும் புதிய தேசம் உருவாகியிருப்பதானது ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டி போராடி வரும் சக்திகளுக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தியிருப்பதைத்தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கொசொவோ தனியரசு பிரகடனத்தை தொடர்ந்து ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று தெற்கு ஒசிற்றீயர், ஆப்காசியா ஆகிய பகுதிகளும் சுதந்திர அரசுக்கான வாய்ப்பை கோரியுள்ளன. நமது நிலையில் சுதந்திர பிரகடனம் என்று பார்த்தால் தமிழ் மக்கள் 1977 இலேயே சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் பாராளுமன்ற ஜனநாயக நடைமுறையினுடாகவே தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றனர

இந்தியா எதிரியாகத் தன்னை அவ்வப்போது காட்டிக் கொண்டாலும், இந்தியாவின் கையை மீறிச் செல்கின்ற போராட்டமும் இலங்ஙை சிங்கள அரசியல் தலைவர்களும் இந்தியாவை எதிரியாகவேதான் பார்க்கின்றனர். தேவைப்படும்போது பாவனைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு பொருளைப் போல்தான் இந்தியாவை சிங்களப் போரினவாதம் பயன்படுத்துகிறது.

தமிழர் தேவைக்கும் தேசியத்திற்கும் பாதிப்பற்ற முறையில் இந்தியா நடந்தால் தமிழீழத்தைப் போன்ற நட்புறவுள்ள ஒரு தேசத்தை இந்தியா என்றும் கண்டிருக்காது.

கடைசீல இந்தியாவோடயான் வந்து செருகுது...

சரியா குருக்கரைப்போலான் கிடக்கு.. எங்கயோ தொடங்கி பிறகு வேரெங்கையோ முடிச்சிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.