Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும்

Featured Replies

இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும்.

இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவரான லூயிஸ் ஆர்பர் அவர்களின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்று பிரிட்டிஷ் துணை வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று முந்தினம் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை இன விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழரின் கருத்துக்களை அறியும் வகையிலான இந்தச் சந்திப்பில், மேலும் பேசிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மன்ற மனித உரிமைகள் மாநாட்டின் போது தாம் வலுவான அழுத்தங்களைத் தருவோம் என்று கூறியுள்ளார்.

அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக தமது கருத்துக்களைக் கூறுவதை தாம் வரவேற்பதாகவும், ஆயினும், அவர்கள் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளுக்கு பண மற்றும் ஆயுத உதவிகளைச் செய்யக் கூடாது என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

கொசோவோவில் தனி நாட்டுப் பிரகடனம் செய்யப்பட்ட நிகழ்வானது இலங்கை விடயத்தில் பொருந்தாது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் நடக்கின்ற போரினால் தமிழ் மக்கள் படும் துயரங்கள் குறித்தும், அவர்களது அபிலாஷைகள் குறித்தும், புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

நன்றி பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

ஐ-நா மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அவசியம் – மலோக் பிறவுண் பிரபு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறீலங்காவில் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கான அழுத்தத்தை சிறீலங்கா அரசுக்கு தமது அரசாங்கம் கொடுக்கும் என பிரித்தானிய வெளியுறவுத் துணையமைச்சர் மார்க் மலோக் பிறவுண் பிரபு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் வெளியுறவு அமைச்சகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் பிறவுண் பிரபு இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறீலங்காவில் அமைக்க வேண்டுமென, ஐ-நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசு பேச்சுவார்த்;தை மூலம் தீர்வை முன்வைக்காது, போரில் நாட்டம் கொண்டிருப்பதாகவும் பிறவுண் பிரபு குற்றம் சுமத்தினார்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்தவாரம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கு எடுத்துரைக்க இருப்பதாகவும், பிரித்தானிய வெளியுறவுத் துணையமைச்சர் மார்க் மலோக் பிறவுண் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு வரவுள்ள சிறீலங்கா அரச தரப்பினர் தாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்ற கருத்தினை முன்வைப்பார்கள் எனவும், அதனை முறியடித்து சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கொசோவோ தனிநாட்டு பிரகடனத்தை ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையுடன் இணைத்து கருத்து வெளியிட வேண்டிய அவசியம் இல்லை எனவும், புலம்பெயர்ந்த மக்கள் சனநாயக முறையில் தமது கருத்துக்களை முன்வைப்பதை தாம் வரவேற்பதாகவும் பிரபு தெரிவித்தார்.

மோதல்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாகவும், தமிழ் மக்களின் அபிலாசை பற்றியும் இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் பிரித்தானிய அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இலங்கையின் கதவு திறக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மொலவிச் பிரவுன் பிரபு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பொன்றுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சம்மேளனத்தில் தாம் இது குறித்து விளக்க உள்ளதாக பிரவுன் பிரபு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டிருத்தல், பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தல் மற்றும் மனித உரிமை மீறல் என்பனவே இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டுக்களாக தாம் நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பாக நம்பிக்கை இல்லை என இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது எனவும், பேச்சுவார்த்தைகளினூடாக அரசியல் தீர்வொன்றை நோக்கிச் செல்ல வேண்டும் என பிரவுன் பிரபு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் பிரதேசங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு தாம் ஆதரவு வழங்கும் அதேவேளை, சுயாட்சி கோரிக்கை தொடர்பாக தாம் ஆதரவு வழங்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக பொருளாதார மற்றும் போக்குவரத்து தடைகளை விதிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் பிரவுன் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி : www.lankadissent.com/

இந்த நாய்களால் தான் நாங்கள் இப்படி சீரழிகிறோம் பிறகு சுயாட்சி க்கு ஆதரவு இல்லை யாமோ?

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

பிரித்தானியாவினால் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை?

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இலங்கையின் கதவு திறக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மொலவிச் பிரவுன் பிரபு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பொன்றுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சம்மேளனத்தில் தாம் இது குறித்து விளக்க உள்ளதாக பிரவுன் பிரபு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டிருத்தல், பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தல் மற்றும் மனித உரிமை மீறல் என்பனவே இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டுக்களாக தாம் நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பாக நம்பிக்கை இல்லை என இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது எனவும், பேச்சுவார்த்தைகளினூடாக அரசியல் தீர்வொன்றை நோக்கிச் செல்ல வேண்டும் என பிரவுன் பிரபு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் பிரதேசங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு தாம் ஆதரவு வழங்கும் அதேவேளை, சுயாட்சி கோரிக்கை தொடர்பாக தாம் ஆதரவு வழங்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக பொருளாதார மற்றும் போக்குவரத்து தடைகளை விதிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் பிரவுன் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.sankathi.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.