Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்முனைக்கு மீண்டும் செல்வேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

chelsy_harry2_DW_Ve_432662g.jpg

போர்முனைக்கு மீண்டும் செல்வேன்

இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி ஆப்கானிஸ்தான் போர்முனையில் இருந்து சமீபத்தில் தான் திரும்பினார். அவர் மீண்டும் போர்முனைக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவர். அவர் போர்முனைக்கு சென்று யுத்த அனுபவம் பெற விரும்பினார். இதற்காக அவர் ஈராக் போர்முனைக்கு செல்ல விரும்பினார். அவர் அங்கு சென்றால் அவரை தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் அவர் ஈராக் செல்லும் திட்டத்தை அந்த நாட்டு அரசு கைவிட்டது. இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்துக்கு பிறகு அவர் ஆப்கானிஸ்தான் போர்முனைக்கு ரகசியமாக சென்றார். அங்கு அவர் 10 வாரங்கள் தங்கி, தலீபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடினார். அவர் அங்கு போர்முனையில் இருக்கும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராணுவம் அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பியது.

இங்கிலாந்துக்கு அவர் விமானப்படை விமானத்தில் திரும்பினார். அவருடன் அதே விமானத்தில் கண்ணிவெடி தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 வீரர்களும் நாடு திரும்பினர். லண்டன் விமானப்படை தளத்தில் அவர் இறங்கியதும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஹ“ரோ கிடையாது. இங்கிலாந்து ராணுவ வீரர்கள் காட்டும் துணிச்சலுக்கு முன்பு நான் சாதாரணம். என்னுடன் 2 வீரர்கள் இந்த விமானத்தில் வந்து இருக்கிறார்கள். கண்ணி வெடித்தாக்குதலில் அவர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் தான் ஹ“ரோக்கள். நான் போர்முனைக்கு மீண்டும் செல்ல விரும்புகிறேன். மிக விரைவிலேயே நான் மீண்டும் போர் முனைக்கு செல்ல விரும்புகிறேன். என் அண்ணனும் போர்முனைக்கு செல்ல விரும்புகிறார். நான் போர்முனைக்கு சென்றதை பார்த்து அவர் என் மீது பொறாமைகூட கொண்டார். என்னை தூக்கி அடித்து விட்டாய் என்று அவர் கூறினார். இவ்வாறு இளவரசர் ஹாரி கூறினார்.

அதோடு அவர் தபால் இலாகாவின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள இங்கிலாந்து துருப்புகளுக்கு அனுப்பப்படும் தபால்கள் மிக தாமதமாக வந்து சேர்வதாக அவர் தெரிவித்தார். என் தந்தை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை அனுப்பினார். அது கடந்த மாதம் வரை என் கைக்கு வந்து சேரவில்லை என்று குறிப்பிட்டார். இளவரசர் ஹாரியை வரவேற்பதற்கு இளவரசர் சார்லஸ் மூத்தமகன் வில்லியமுடன் விமான தளத்துக்கு வந்து இருந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் இளைய மகனை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். வெளிநாட்டில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் எந்த அளவுக்கு கவலைப்படுகிறார்கள் என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மகனை எந்த வித சேதாரமும் இல்லாமல் தாய் மண்ணில் பார்த்த பிறகு தான் என் மனம் நிம்மதி அடைந்தது இவ்வாறு இளவரசர் சார்லஸ் கூறினார்.

மீண்டும் போர்முனைக்கு செல்வேன் என்று இளவரசர் ஹாரி கூறியதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று ராணுவத் தளபதி ஜெனரல் சர் ரிச்சர்டு டன்னாட் தெரிவித்தார். அவர் உடனடியாக போர்க்களத்துக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

http://www.koodal.com/

ஹரி பரவாயில்லை ...! சண்டைக்கு போனார்..! நம்ம மகிந்தா தன்ர புத்தாவை UK க்கு பத்திரமா அனுப்பிட்டார்.

ஹரி பரவாயில்லை ...! சண்டைக்கு போனார்..! நம்ம மகிந்தா தன்ர புத்தாவை UK க்கு பத்திரமா அனுப்பிட்டார்.

மகிந்த தன் மகனை நாட்டுக்கு பாரம் கொடுப்பதாக ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு தகுதியற்ற தன் மகனை யூகேக்கு அனுப்பிணார். அங்கே தன் மகன் பாஸ் பண்ணியதை நேரில் கொண்டாட ஜப்பானிலிருந்து நேரே இங்கிலாந்துக்கு பரிவாரத்துடன் வந்தார். திரும்பி இலங்கை போக பரிவாரத்துக்கு ரிக்கற் இல்லையென்ற காரணத்தினால் இலங்கை விமானசெவையின் அதிகாரியை துரத்தினார். எமிறேர்ஸ் விமான சேவையை பகைத்துக் கொண்டார். நாடு எக்கேடு போனாலும் தன் மகனைப் பார்த்தால் போதும் என்று நினைக்கிற இவன் ஒரு நாட்டுத் தலைவன்.. சீ..

மகிந்த தன் மகனை நாட்டுக்கு பாரம் கொடுப்பதாக ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு தகுதியற்ற தன் மகனை யூகேக்கு அனுப்பிணார். அங்கே தன் மகன் பாஸ் பண்ணியதை நேரில் கொண்டாட ஜப்பானிலிருந்து நேரே இங்கிலாந்துக்கு பரிவாரத்துடன் வந்தார். திரும்பி இலங்கை போக பரிவாரத்துக்கு ரிக்கற் இல்லையென்ற காரணத்தினால் இலங்கை விமானசெவையின் அதிகாரியை துரத்தினார். எமிறேர்ஸ் விமான சேவையை பகைத்துக் கொண்டார். நாடு எக்கேடு போனாலும் தன் மகனைப் பார்த்தால் போதும் என்று நினைக்கிற இவன் ஒரு நாட்டுத் தலைவன்.. சீ..

நான் கேள்விபட்டன் ..அவர் மஹிந்தவின் புத்தா என்று தெரிந்ததும் மற்றவர்கள் பண்ணிய இம்சை (torture)தாங்காமல் மஹிந்த போயி கொண்டு வந்தாருன்னு...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.