Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வான் பாதுகாப்பு வலுவை இலங்கை மேலும் அதிகரிக்க இந்திய உதவும்

Featured Replies

இலங்கையின் வான் வெளிப் பாதுகாப்புத் திறனை மேலும் அதிகரிக்கக் கூடிய 'ராடர்' சதாதனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகாவும், பேகாட்டபயவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தற்போதைய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்படத்தக்கது.

பொன்சேகா தனது இந்திய விஜயத்தின் போது இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு குறித்தே அதிக கவனம் செலுத்துவார் எனப் புதுடில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய இராணுவத்தளபதி, பாதுகப்பு அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் அவரது ஒருவார கால விஜயத்தின் போது பேச்சுகளை மேற்கொள்ளவுள்ள பொன்சேகா இராணுவ ஒத்துழைப்பிற்கான சாதியக்கூறுகள் குறித்து ஆராய்வார்கள் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டார்.

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் இலங்கையின் வான் வெளிப்பாதுகாப்புத் திறனை வலுப்படுத்ததுவதற்காக இந்தியா புதிய 'ராடர்' சாதனங்களை வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

கொழும்பு, இலகுரக ஹெலிகப்டர்கள், தாக்குதல் கலங்கள் உட்பட ஆயுதங்கள் கொள்வனவு செய்யயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பொன்சேகா இந்தியவுடன் இலங்ககைகு சிறப்பான இராணுவ உறவுகள் உள்ளன எனப் புதுடில்லியில் வைத்துக் குறிப்பட்டுள்ளார்.

நேற்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சில் தமக்கு அளிக்கபட்ட இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்ககையிலேயே அவர் இப்படிக் கூறினார்.

'இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இராணுவ ரீதியில் சிறப்பான உறவுகள் உள்ளன. தற்போது காணப்படும் உறவை தொடரவிரும்புகின்றோம்,' என அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மிக விரைவில் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் அங்கு நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

புதிய "ராடர்' சாதனங்கள் மூலம்

வான் பாதுகாப்பு வலுவை இலங்கை

மேலும் அதிகரிக்க இந்தியா உதவும்

கோட்டாபயவும் இராணுவத் தளபதியும்

புதுடில்லியில் நிற்கும் வேளையில் தகவல்

இலங்கையின் வான்வெளிப் பாதுகாப்புத் திறனை மேலும் அதிகரிக்கக்கூடிய "ராடர்' சாதனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தற்போதைய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத் தளபதி இந்திய விஜயத்தின்போது தமது இராணுவத்துக்கான ஆயுதக் கொள்வனவு குறித்தே அதிக கவனம் செலுத்துவார் எனப் புதுடில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உட்படப் பல முக்கிய அதிகாரிகளுடன் தனது ஒருவார கால விஜயத்தின்போது பேச்சுகளை மேற்கொள்ளவுள்ள இலங்கை இராணுவத்தளபதி, இராணுவ ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வார் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் வி.கே.சிங்குடனான சந்திப்பின்போது விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டார்.

விடுதலைப் புலிகளின் விமானத்தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் இலங்கையின் வான்வெளிப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தியா புதிய "ராடர்' சாதனங்களை வழங்கலாம் எனக் கூறப்படுகின்றது.

கொழும்பு, இலகுரக ஹெலிக்கொப்டர்கள், தாக்குதல் கலங்கள் உட்பட ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்

இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியாவுடன் இலங்கைக்கு சிறப்பான இராணுவ உறவுகள் உள்ளன எனப் புதுடில்லியில் வைத்துக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சில் தமக்கு அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இப்படிக் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இராணுவ ரீதியில் சிறப்பான உறவுகள் உள்ளன. தற்போது காணப்படும் உறவை தொடரவிரும்புகின்றோம்.'' என அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மிக விரைவில் தோற்கடிக்கமுடியும் என்றும் அவர் அங்கு நம்பிக்கை வெளியிட்டார்.(உ)

http://www.sudaroli.com/pages/news/today/01.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத உதவி கோரும் இலங்கை

.

Wednesday, 05 March, 2008 11:36 AM

.

புதுடெல்லி, மார்ச்.5: டெல்லிக்கு வருகைதந்துள்ள இலங்கை ராணுவ தளபதி ஜி.எஸ்.சி. பொன்சேகா இந்திய ராணுவ தலைவர் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும், புலிகளை ஒடுக்க ஆயுதம் வழங்க வேண்டுமென்று பொன்சேகா கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது முப்படைகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜி.எஸ்.சி.பொன்சேகா அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.

நேற்று அவர் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள லாப, நஷ்டம் குறித்து இருவரும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், புலிகளை ஒடுக்குவதற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக பொன்சேகா கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப்பின்னர் நிருபர்களிடம் பேசிய பொன்சேகா, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அரசியல் உறவுகள் நன்றாக இருப்பதாகவும், இருநாட்டு ராணுவ உறவை பலப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்திற்கு அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க இலங்கை அரசு முன் வரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு மாகாணங் களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் திரும்பப்பெறக் கூடாது என்று இலங்கை அரசிடம் இந்தியா கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு கண்டி நகரில் நடைபெறவுள்ள "சார்க்' நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...p;%20section=23

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத உதவி கோரும் இலங்கை

இப்படி எத்தனை தடவைகள்

நேற்றுத்தான் பிச்சை எடுக்க மாட்டம் எண்டாங்க.. :lol: :lol: :D

http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

எல்லா ஆயுதங்களும் வந்து இறங்கியாச்சு

ஆவணியோட புலி காலி

புலியில்லாத தமிழரெல்லாம் அதன்பிறகு தீர்வைப்பற்றி பேசலாம்

என்று சொல்லி 2 மாதம் முடியமுன் எல்லாம் முடிந்ததா????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடைய நிலைமைய என்னெண்டு சொல்லுறதெண்டு விளங்குதில்ல. இண்டைக்குக் கனக்கக் கதைச்சுப்போட்டு நாளைக்குப் பென்சனில போகப்போற ஒரு ராணுவ அதிகாரியக் கூப்பிட்டு வச்சி இலங்கையிர அரசியல் தீர்வக்காகக் கெஞ்சவேண்டிய பரிதாப நிலையில நிலைமை இருக்குது. அவர் இஞ்சவந்து என்னத்தச் சொல்லுறது. உன்ரவேலையை அதாவது பயங்கரவாதத்தை அடக்கிறத நீ பார் நாங்கள் அரசியலப் பாப்பமெண்டு சொல்லப்போகினம். அவர் போனது ஆயுதம் வாங்க. சரி பொறுத்திருந்து பாப்பம் வந்து என்ன சொல்லப்போறாரெண்டு. சிலவேளை ராணுவச் சதி செய்து ஆட்சியக் கைப்பற்று நாங்கள் சப்போட்டுக்கு நிக்கிறமெண்டு ஆள ஊசேத்தி அனுப்பப் போகினமோ தெரியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.