Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழக மீனவரை சுட்டது இலங்கை கடற்படைதான்!'

Featured Replies

ராமேஸ்வரம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2008

ராமேஸ்வரம் மீனவரை சுட்டுக்கொன்றது இலங்கை கடற்படைதான் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கிறிஸ்டி என்ற மீனவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டுக்கொன்றது இலங்கை கடற்படை அல்ல என்று இலங்கை அரசு மறுத்தது. இதுகுறித்து, சென்னையில் உள்ள தென் இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று குற்றம் சாட்டியிருந்தது.

ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர்தான் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் அந்தோணி கூறியதாவது: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர்தான். அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தேவையில்லாமல் விடுதலைப் புலிகள் மீது வீண் பழி போடுகிறார்கள்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், பின்னர் மறுப்பதும் பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவம்.

கடந்த 1992 ல் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 2 மீனவர்கள் பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர். அப்போதும் இலங்கை அரசு இதை மறுத்தது.

கச்சதீவை நாம் சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது. கச்சத்தீவை அரசு மீட்டு தருவதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: நொண்டி வாத்தைப்போல இந்திய கடற்படைநடவடிக்கை எடுக்க கோருகிறார் - வைகோ

வீரகேசரி இணையம் - தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இலங்கைக்கு இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வைகோ கோரியுள்ளார். இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்று வருகின்ற நடவடிக்கைகள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உண்டு.

5 ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கிறிஸ்டி, இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளார். இது மட்டும் அல்ல. அதேநாளில் அதே பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டையும் இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பிரான்சிஸ் நஸ்ரீன் (வயது 49) என்ற மீனவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். கச்சதீவுக்கு மிக அருகில் டெல்ப்ட் தீவு என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படைத் தளத்தில் இருந்து வந்த படகுகளில் இருந்துதான் இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பதைத் தமிழக மீனவர்கள் உறுதியாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்கவேண்டும் என்கின்ற கவலை இல்லாத இந்திய கடற்படை, ஒரு நொண்டி வாத்தைபோல இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படைக்கு அனைத்து உதவிகளையும் செய்துவருவது மன்னிக்க முடியாத கொடுமையாகும். இந்திய மீனவர்களைக் காக்கவேண்டிய கடமையில் இருந்து இந்திய அரசு வேண்டுமென்றே தவறி இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். அதற்கு ஏற்ப இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன என்றும் குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுக்கு இப்போது தமிழர்கள் எல்லோருமே ஒரு தலையிடியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகக் கரையோர மீனவர்களை எப்படியாவது இலங்கைக் கடற்படையைக் கொண்டு அடக்கி ஒடுக்கி அவர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து ஈழத்தமிழர்களுடன் உறவுகளைப் பேணாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தமிழ் மீனவர்களைத் தாக்கிக்கொல்லும்படி மறைமுகமாக இலங்கைக் கடற்படையைத் தூண்டுபவர்களே இந்தியக் கடற்படையினரும் றோ போன்ற புலனாய்வு அமைப்பினரும்தான். இதற்குப் பக்கத் துணையாக இந்து ராம், சோ போன்ற பார்ப்பனர் கூட்டமும் மீடியா வாய்ஸ் கொடுக்க, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியல் ரீதியில் தமிழ்நாட்டைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அப்பாவிச் சனங்கள் தமக்கெதிராக நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தமிழினத்தையே பூண்டோடு அழித்துவிட நடத்தப்படும் சதி வேலைகளையும் புரிந்து கொள்ளாமல் அம்மா வின் பின்னால் அணிதிரண்டு நிற்பதோடு சோ இந்துராம் போன்ற தமிழர் விரோதிகளின் எழுத்துக்களையும் ஆகா ஓகோவென ஏற்றுக் கொள்கிறார்கள். நாமெல்லாம் சிவபெருமான் திருநடனம் செய்யும் இடமென நினைத்து வழிபடும் சிதம்பரத்திலேயே திருவாசகத்தேனைத் தித்திக்கப் பாடும் உரிமை தமிழனுக்கு இல்லையாம். இந்த நிலையில்தான் இருக்கிறது தமிழ் நாட்டுத் தமிழனின் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இலங்கைப்படைதான் சுட்டது

அதற்கென்ன இப்போ???

ஏதோ

இதுதான் முதல்முறையென்பது போலவும்

இதற்கு முன் நடந்ததுக்கு ஏதோ கிழித்துப்போட்ட மாதிரியும்

வேலையைப்பார்த்துக்கொண்டு போவிங்களா???

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்,

உங்கள் ஆத்திரம் நியாயமானதுதான். என்ன செய்வோம் ? தமிழராய்ப் பிறந்தால் அது தமிழீழமானாலும் பரவாயில்லை தமிழ்நாடானாலும் பரவாயில்லை நிலமை ஒன்றுதான். தமிழ்நாட்டுத் தமிழர் விழிக்கும்வரை கடலில் சிங்களவன் கொட்டம் அடங்காது, ஈழத்தமிழர் அனைவரும் விழிக்கும்வரை தமிழர் தேசம் விழிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.