Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 39

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தி தமிழர்கள் தங்களது பல சமய விழுமியங்களை அதிலும் தெய்வ விடயம் என்று வந்தால் அவர்கள் எதையும் எதிர்த்து பேசாம அப்படியே உள்வாங்கி கொள்வார்கள் அந்த பலவீனத்தால் பல புது புது மத தெய்வ வழிபாடுகள் எம்மவர்களை பற்றி கொண்டுள்ளது இந்த டமிழ்சை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு புரியும் சிவனுக்கு சிவராத்திரி என்று சிவனிற்குரிய பூஜையை தான் பாபாவிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளோம் என்ற பக்குவம் உண்டு ஆனால் இங்கு பிறந்த இவர்களின் வாரிசுகளுக்கு புரியுமா??அவர்களை பொறுத்தவரை சிவராத்திரி என்றா பாபாவிற்கு இரவு பூசை பஜனை வைத்தல் தான் சிவராத்திரி என்று விளங்கி கொள்வார்கள் பின் அவர்களின் வாரிசுகளுக்கு பாபாவின் பெருமைகளில் ஒன்று என்று புகட்டுவார்கள் அப்படியே சிவனின் நாமம் அழிந்து விடும் சைவமும் மறைந்துவிடும்.சைவம் எல்லாம் இந்துவாக மாறியது போல்.

பிராமணர்களும்,தீட்சர்களும் சைவதிற்கு செய்த புறகணிப்பிலையும் பார்க்க சைவ பக்த கோடிகள் செய்த,செய்கிற புறகணிப்பு பல மடங்கு புரிந்தும் புரியாது செய்யும் புறகணிப்பு எண்ணிலடங்காதவை.

இந்த பாபா கோஷ்டியினர் சகல மதசடங்குகளையும்,சர்வதேச தினங்களையும் அதாவது கிறிஸ்மஸ்,சிவராத்திரி,கிருஷ்

ண ஜேயந்தி,இராமர் பிறந்த நாள்,வெசாக் மற்றும் சர்வதேச பெண்கள் தினம் சர்வதேச ஊனமுற்றோர் தினம்,சர்வதேச இளைஞர் தினம் போன்ற தினங்களிள் பஜனை வைத்து இதன் முக்கிய நோக்கம் சகல மட்டத்திலும் தங்களது கொள்கைகளை பரப்புவது தான் இவர்களின் கொள்கை பரப்புவதில் ஈழத்து டமிழ்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ஆனால் அவர்கள் இப்படி கொள்கை பரப்பும் செய்யும் போது சாய் பக்தர்கள் என்று சொல்வதில் தான் முக்கிய கவனம் செலுத்துவார்கள் இதில் இருந்து புலனாகிறது அவர்களின் முக்கிய நோக்கம் சாய் கொள்கைகளை பரப்புவது தான்

சிவராத்திரி இன்னும் 50 வருடங்களின் பின் பாபா ராத்திரியாக வரும் அதற்கு எமது சிட்னி டமிழ்ஸ் புது புது வியாக்கியானங்களும் கொடுப்பார்கள்.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது எவன் விழிக்கிறானோ அவன் விழித்து கொள்வான் எவன் தூங்குகிறானோ அவன் தூங்கி கொள்வான்.

ஐயோ புத்து மாமா உங்களுக்கு இந்த பாபாவை விட்டால் வேற ஒண்டும் இல்லையா கோசுப்பு செய்யுறதுக்கு. திரும்பவும் திரும்பவும் இதையே கேட்டு புளிச்சுப் போச்சிது. இனி இந்த பாபா மட்டரவிட்டுபோட்டு வேற எதையாச்சும் பற்றி எழுதுங்கோ.

சிட்னி கோசிப்பில அரைவாசி கோசுப்பு பாபா கோசிப்பா இருக்கிது. எதுக்கும் கவனம். பிறகு மாமாவுக்கு யாராச்சும் பாபாக்கள் சாபம் போடப்போறாங்கள். அடுத்த பிறப்பில் நீயும் ஒரு பாபாவாக பிறக்கக்கடவ! எண்டு

என்ன புத்தன் பெரியமச்சாள் வீட்டை சிவராத்திரிக்கு பாபா பஜனை நடந்து நொந்துபோய் இருக்கிறீங்கள் போல இருக்கு. போனமாம் நல்லா ஒரு பிடிபிடிச்சமாம் வந்தமாம் என்று இல்லாமல்.... :)

சாயி பாபா களிதின்னப் போனாலும் எங்கட சனம் பஜனை செய்து

சுண்டல் தின்னுவதை (யாழ் கள சுண்டலை சொல்லவில்லை) விடப்போறதில்லை.. :D

கலைஞன் சொன்னது சரிதான்... புத்தன் நீங்க இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி புலம்புறதில பிரயோசனமில்லை.. சனம் தானா திருந்தினாதான் உண்டு (என்னைப்போல) :)

ம்ம்ம்....புத்து மாமா ரொம்ப பீல் பண்ணுறியள் போல இருக்கு... :lol: (நான் அப்பவும் சொன்னனான் பாருங்கோ சிவராத்திரிக்கு ஒரு ஜோனிவோக்கரை குடித்து போட்டு பக்ஜார்ட்டில பார்பீகியூவை போட்டு எஞ்ஜோய் பண்ணுவோம் என்று கேட்டியளே :) )...அப்படி செய்திருந்தா சிவபெருமானும் சந்தோசபட்டிருப்பார்... :lol: (நீங்களும் பீல் பண்ணி இருக்க தேவையில்லையாக்கும்) :D ...

பாபா சினிமா சினிமா

பாபா நேரம் தான்

பாபா... :huh:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ புத்து மாமா உங்களுக்கு இந்த பாபாவை விட்டால் வேற ஒண்டும் இல்லையா கோசுப்பு செய்யுறதுக்கு. திரும்பவும் திரும்பவும் இதையே கேட்டு புளிச்சுப் போச்சிது. இனி இந்த பாபா மட்டரவிட்டுபோட்டு வேற எதையாச்சும் பற்றி எழுதுங்கோ.

சிட்னி கோசிப்பில அரைவாசி கோசுப்பு பாபா கோசிப்பா இருக்கிது. எதுக்கும் கவனம். பிறகு மாமாவுக்கு யாராச்சும் பாபாக்கள் சாபம் போடப்போறாங்கள். அடுத்த பிறப்பில் நீயும் ஒரு பாபாவாக பிறக்கக்கடவ! எண்டு

ஒரு மாதிரி முக்கிகிக்கி ஒரு 50 கோசிப்பை எழுது போட்டு பொன் விழா கண்ட செம்மல் என்று ஒரு பெயர் வாங்குவோம் என்று பார்த்த விடமாட்டீங்க போல இருக்கு பெயரும் புகழும் ஓட இருக்ககுள்ள நான் களத்திள் இருந்து விலகபோறன் என்ற அறிக்கை விட்டு போட்டு விலகலாம் என்று பார்த்தா விடமாட்டியள் போல இருக்கு ஒரு 50 கோசிப் எழுத மட்டும் பொறுமையா காத்திருங்கோ நானும் ஜயசூரியா மாதிரி பட்டை தூக்கி காட்டுவேன் சீ சீ அது சிங்களவன் நாம இந்தியன் டெண்டுல்கர் மாதிரி பட்டையும் தூக்கி காட்டி மேலேயும் கும்பிடுவோமாக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஜயசூரியா மாதிரி பட்டை தூக்கி காட்டுவேன் சீ சீ அது சிங்களவன் நாம இந்தியன் டெண்டுல்கர் மாதிரி பட்டையும் தூக்கி காட்டி மேலேயும் கும்பிடுவோமாக்கும். :unsure:

ஏனுங்க நம்புடைய றிக்கி பொண்டிங் உங்களுக்கு வீரராகத் தெரியவில்லையா?

ஏனுங்க நம்புடைய றிக்கி பொண்டிங் உங்களுக்கு வீரராகத் தெரியவில்லையா?

அட குந்தி இருக்கிற கந்தப்பு தாத்தாவிற்கு ரிக்கி பொன்டிங்கை வேற தெரியுது... :unsure: (நிசமா என்னால முடியல்ல :wub: )..சுண்டல் அண்ணா உந்த பக்கம் ஒருக்கா வாங்கோ... :) (இன்னைக்கு யாரை கலாய்ப்போம் என்று யோசித்தனியள் தானே மீனே தூண்டிலிலே மாட்டிகிட்டு :( )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.