Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 ஆண்டுகளில் முதல் முறையாக மலேசியாவில் ஆளும் கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆண்டுகளில் முதல் முறையாக மலேசியாவில் ஆளும் கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை

திகதி : Sunday, 09 Mar 2008, [saranya]

மலேசியா நாட்டில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கூட்டணியான தேசிய அணியில் (பாரிசன் நேசனல் கூட்டணி), மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்று இருந்தது. இந்த கூட்டணி தான் நாடு விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளாக அந்த நாட்டை பெரும்பலத்துடன் ஆட்சி செய்து வந்தது.

இந்த தேர்தலில் முதல் முறையாக அந்த கூட்டணிக்கு மிகச்சிறிய அளவிலான மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி ஆளும் கூட்டணிக்கு தேவை.

மொத்தம் உள்ள 220 தொகுதிகளில் 139 இடங்களில் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த அளவு குறைந்த தொகுதிகளில் அந்த கூட்டணி வெற்றி பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படி குறைந்த மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று இருப்பதால் பிரதமர் படாவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மாநில சட்டசபைகளிலும் அந்த கூட்டணி தோல்வி அடைந்தது. 5 மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தன. பினாங்கு, செலாங்கூர், கெடா, பெராக் ஆகிய மாநிலங்களில் ஆளும் கூட்டணி முதல் முறையாக ஆட்சியை இழந்தது.

இந்த 4 மாநிலங்கள் தவிர கெலந்தான் மாநிலத்திலும், ஏற்கனவே ஆட்சியை பிடித்த எதிர்க்கட்சி, இப்போது அந்த மாநிலத்தை தக்கவைத்துக்கொண்டது.

இந்திய சமூகத்தினர் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆளும் கூட்டணிக்கு ஓட்டு போடாததால் எதிர்க்கட்சியினர் அதிக அளவில் வெற்றி பெற முடிந்தது. மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் டத்தோ சாமிவேலு, 1821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை டி.ஜெயகுமார் தோற்கடித்தார். இருதய நோய் நிபுணராக வேலைபார்த்து ஓய்வு பெற்ற ஜெயகுமாரை கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் சாமிவேலு தோற்கடித்தார். ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பல பெரும்தலைகளும் தோல்வியை தழுவினார்கள்.

இந்தியர்களுக்காக கலகக்குரல் எழுப்பிய இந்தியர் எம்.மனோகரன் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். இவர் உள்பட 5 இந்தியர்களை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் எதிர்க்கட்சியான ஜனநாயக நடவடிக்கை கட்சி சார்பில் போட்டியிட்டு கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தியர்கள் கலவரத்தில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காததோடு, அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார், சாமிவேலு. அதோடு மந்திரியாக கடந்த 20 ஆண்டுகளாக அரசாங்கத்தில் பங்கு கொண்டு இருந்த அவர் இந்தியர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட அவர் கணிசமாக பங்களிக்கவில்லை என்று இந்தியர்கள் கருதினார்கள். இதுதான் அவரது தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பரிதாப நிலையில் இருப்பது, இந்து கோவில்கள் இடிக்கப்படுவது, வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ஆகிய காரணங்களால் இந்தியர்கள் கோபத்தில் இருந்தனர். இந்த கோபம் தான் சுனாமியாக புறப்பட்டு ஆட்சியாளர்களை பல தொகுதிகளில் தோற்கடிக்க செய்து இருக்கிறது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. சட்டசபை தொகுதிகளில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

67 பாராளுமன்ற தொகுதிகளிலும், 141 சட்டசபை தொகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் இருக்கிறார்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் அவர்கள் 9 முதல் 46 சதவீதம் வரை இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தான் மலேசிய இந்தியர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாருமே வெற்றி பெறமுடியாத நிலை ஏற்பட்டது. சட்டசபை தொகுதிகளில் 19-ல் போட்டியிட்டு, 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

கடந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 19 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இப்போதைய தேர்தலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளனர்.

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கடந்த 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவரும், இப்போதைய பிரதமர் படாவியை தன் வாரிசாக அறிவித்தவருமான மகாதிர் முகமது, பிரதமர் படாவி பதவி விலகவேண்டும் என்று கோரினார்.

பதவி விலகுவது பற்றி பிரதமர் படாவி கூறுகையில், "பதவி விலகவேண்டும் என்று யாரும் என்னை வற்புறுத்த வில்லை. எங்களுக்கு பல இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற நாங்கள் பாடுபடுவோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் மன்னரின் அரண்மனைக்கு சென்று இன்று (திங்கள் கிழமை) பதவி ஏற்கிறார்.

http://www.newsonews.com/index.php?subacti...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.