Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் போட்டி உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடும் போட்டி உறுதி

Wednesday, 12 March, 2008 01:58 PM

.

சென்னை, மார்ச். 12: மாநிலங்களவை தேர்தலில் திமுக அணி 5 இடங்களிலும், அதிமுக அணி 2 இடங்களிலும் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போட்டி உறுதியாகிவிட்டது. அதிமுக ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

.

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அல்லது வேளச்சேரி மணிமாறன் போட்டி யிடக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங் களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 7 பேர் போட்டி யிடுவதை அடுத்து, இந்த தேர்தலில் போட்டி உறுதியாகி இருக்கிறது.

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ந் தேதியுடன் முடிவடை கிறது. இதனால் காலியாகும் 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 8ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 15ந் தேதி கடைசிநாளாகும்.

திமுக அணியில் அக்கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங் களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் வக்கீல் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி.கே. ரங்கராஜன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் இரண்டு தினங்களில் அறிவிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா ஆலோசனை

அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங் களவை தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதா அல்லது இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவதா என அவர் ஆலோசனை நடத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாலகங்கா, முன்னாள் மாநில தேர்தல் கமிஷனர் பழனிச்சாமி ஆகியோரையும் ஜெயலலிதா இன்று போயஸ் தோட்டத்துக்கு அழைத்து பேசினார்.

அதிமுக வேட்பாளர்

இதனையடுத்து மாநிலங்களவை தேர்தலில் அதிமுக அணி சார்பில், அதிமுக மற்றும் மதிமுக தலா ஒரு இடத்தில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதிமுக சார்பில் கட்சியின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் நா. பாலகங்கா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

26.03.2008 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங் களவைக்கான தேர்தலில் அதிமுக மதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்படுகிறார்கள். அதிமுகவில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் பிரிவு இணை செயலாளர் நா.பாலகங்கா நிறுத்தப்படுகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக வேட்பாளர் யார்?

மாநிலங்களவையில் மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், இந்த தேர்தலில் தனது கட்சிக்கு ஒரு இடம் அளிக்க வேண்டும் என்று வைகோ, ஜெயலலிதாவை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அக்கட்சிக்கு ஒரு இடத்தை ஜெயலலிதா தற்போது ஒதுக்கியுள்ளார்.

இந்த ஒரு இடம் 2வது வேட் பாளராக அளிக்கப்பட்டுள்ளதால், அந்த சீட்டுக்கு கடும் போட்டி நிலவும் என்பது உறுதியாகியிருக் கிறது. இதனால் அந்த இடத்தில் போட்டியிட வைகோ தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது கட்சி சார்பில் வேளச்சேரி மணிமாறனை அவர் வேட்பாளராக நிறுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.