Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந்த் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் விளக்கம்

.

Sunday, 16 March, 2008 02:18 PM

.

சென்னை, மார்ச். 16: மாநிலங்களவை தேர்தலில் யாரையும் ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். மக்களுடன் தான் கூட்டணி என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பாமகவைச் சேர்ந்த வள்ளல் பத்மநாபன், மணலி நகர் மன்ற கவுன்சிலர் சுப்பையா ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வாழ்த்தி, வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:

நீங்கள் அனைவரும் தேமுதிகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் கட்சி வளர்ந்து வருகிறது என்பதாலும், என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையாலும் தான் இங்கு வருகிறீர்கள். தேமுதிக நம்பகத்தன்மை பெற்றுள்ளதா என எண்ணிப்பார்த்த பின்னர் வந்து சேர்ந்துள்ளீர்கள்.

மிகவும் நல்லவனாகவும் இருக்கக் கூடாது; கெட்டவனாகவும் இருக்கக் கூடாது. நான் மிகவும் நல்லவன். நல்லவனுக்குதான் சோதனைகள் அதிகமாக வரும்.

அதனால்தான் திருமண மண்டபத்தை முதலில் இடித்தார்கள். அதன் பிறகு வருமான வரி சோதனை என்ற பெயரில் என் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனை நடத்தினார்கள்.

இப்போது மதுராந்தகத்தில் நிலத்தை வளைத்து போட்டிருப்பதாக பேசி வருகிறார்கள்.

நான் போரூர் ஏரியை வளைத்துப் போடவில்லை. 15 வருடங்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் நிலம் வாங்கினேன். அதற்கான பத்திரப் பதிவை அதிகாரிகள் செய்துள்ளனர். இப்போது அந்த நிலத்தில் புறம்போக்கு இடம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அப்படி இருந்தால் எடுத்து கொள் ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் தினமும் பத்திரிகைகளில் செய்தி போட்டு உரசிப்பார்க்கிறார்கள். அப்படி சுரண்டி பார்த்தால் எத்தனை பேருடைய நிலத்தில் எவ்வளவு இடம் எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இருக்கும் இடத்திலும் அவ்வாறான இடம் இருக்கத்தானே செய்கிறது.

என்னுடைய நிலத்தில் இருப்பது புறம்போக்கு இடம் என்றால் நான் பத்திரப்பதிவு செய்த போது அதிகாரிகள் சொல்லியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சொல்லவில்லை? என்னை எப்படி துன்புறுத்தினாலும் என் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது.

மாநிலங்களவை தேர்தலில் விஜயகாந்தின் ஒரு ஓட்டு யாருக்கு என்று கேட்டார்கள். யாருக்கும் கிடையாது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்புபவன். மக்களுடன் தான் கூட்டணி என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். இந்த நேரத்தில் என்னுடைய ஒரு ஓட்டை யாருக்காவது நான் போடும் பட்சத்தில் என் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.

நாங்கள் திருச்சியில் மகளிர் அணி பேரணியை நடத்தினோம். இப்போது ஒரு கட்சி மகளிர் அணி மாநாடு நடத்த இருப்பதாக கூறுகிறது. அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அரசு பேருந்தில் அழைத்து செல்லாமல், பணம் கொடுத்து அழைத்து செல்லாமல் எங்களை போல உண்மை தொண்டர்கள் கூட்டத்தை கூட்ட முடியுமா?

பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை தருவதால்தான் பால் விலை உயர்வு என்று சொல்கிறார்கள். பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே பால் வாங்குவோரும் முக்கியம்.

அரிசியை கிலோ 2ரூபாய்க்கு தருகிறீர்கள். ஓட்டு வாங்குவதற்காக அவ்வாறு தருகிறீர்கள். அரிசிக்கு எவ்வாறு மானியம் தருகிறீர்களோ அது போல பாலுக்கும் மானியம் தாருங்கள் என்றுதான் கூறுகிறேன். பால் உற்பத்தியாளருக்கு அதிக விலை தரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

மொரார்ஜிதேசாய், எம்ஜிஆர் இருந்த போது தங்கம் விலை உயர்ந்தது. அப்போது திமுக, "தாலிக்கு தங்கம் இல்லை; தாளிக்க வெங்காயம் இல்லை' என்று சொல்லி ஓட்டு கேட்டது. இப்போது தங்கம் விலை ஏறி, தாலிக்கு தங்கம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

பால் விலை உயர்வு ஒரு பக்கம்; மறைமுக பஸ் கட்டண உயர்வு இன்னொரு பக்கம். டிரிபிள் "எஸ்' என்ற பெயரில் மறைமுக பஸ் கட்டண உயர்வை மக்கள் மீது திணித் திருக்கிறீர்கள். சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு ரூ. 20, கடலூருக்கு ரூ. 10, புதுவைக்கு ரூ. 11 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

நேற்று பேசிய முதல்வர் தமிழ்நாட்டில் தான் வன்முறை ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார். தர்மபுரி அருகே எங்கள் கட்சிக்காரர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதற்காக அவருடைய வீடு உட்பட பலருடைய வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, மாநில துணை செயலர் இளங்கோவன், தேர்தல் பிரிவு செயலர் சம்பத், பேச்சாளர் ஆடலரசு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.