Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டட்லி - செல்வா உடன்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டட்லி - செல்வா உடன்பாடு

1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார்.

அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் வாழும் நிலமற்ற மக்களுக்கு நிலங்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுமென்றும், இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

145 மொத்தத் தொகுதிகளில்...

ஐக்கிய தேசியக் கட்சி - 66 இடங்கள்

சிறீலங்கா சுதந்திரக்கட்சி - 41 இடங்கள்

தமிழரசுக்கட்சி - 14 இடங்கள்

தமிழ் காங்கிரஸ் - 03 இடங்கள்

லங்கா சமசமாயக் கட்சி - 10 இடங்கள்

கம்யூனிஸ்ட் கட்சி - 04 இடங்கள்

இதன் அடிப்படையில் டட்லி சேனநாயக்கா தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார். இதில் C. P. D சில்வா , பிலிப் குணவர்த்தனா போன்றோரும் , தமிழரசுக் கட்சியும் , தமிழ்க் காங்கிரசும் அங்கம் வகித்தன.

அதேபோல் தொண்டமான் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். (டட்லியால்) தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டது. தரகராகச் செயற்பட்ட திருச்கெசல்வம் என்பவர் செனற் சபைக்கு (மேற்சபை) நியமிக்கப்பட்டு உள்ளுராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியினுடைய ஒட்டு மொத்தமான, பின்னடைவை, இயலாமையை 65 ற்கும் - 70ற்கும் இடைப்பட்ட இக்காலகட்டம் மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு முன்னர் தமிழ் அரசு என்று சமஸ்டி வடிவில் தன்னாட்சி அமைப்பொன்றை அமைக்கப் போவதாக கூறிவந்த வாக்குறுதிக்கு முற்றாகத் துரோகம் இழைக்கப்பட்ட காலமிது.

73 வயதை அடைந்து விட்ட தந்தை செல்வாவை அவரது உடல் நலக்குறைவு காரணமாகப் பின் தள்ளி அமிர்தலிங்கம் போன்றோர் கட்சித் தலைமையைக் கைப்பற்ற முயன்ற காலம். தமிழரசுக் கட்சியின் துரோகத்தைக் கண்டு ஊர்காவற்துறைப் பிரதிநிதியாக இருந்த நவரத்தினம் தமிழர் சுயாட்சிக் கழகம் என்கிற புதிய கட்சி ஒன்றைத் தொடங்கிய காலம்.

தமிழரசுக் கட்சியின் உதவியோடு டட்லி அரசு அமைத்த பொழுதும் அவர் செல்வாவோடு செய்து கொண்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தத் தயக்கம் காட்டினார். எதிரணியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கட்சிகள் தமிழனுக்கு நாட்டை விற்றுவிட்டதாக இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

1966ம் ஆண்டு தமிழ் மொழிப் பயன்பாடு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்ட பொழுது சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கட்சிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை மேற்கொண்ட பொழுது சிங்களப் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்தினசாரதேரோ என்ற பிக்கு சுடப்பட்டு மரணமானார்.

இந்த ஊர்வலத்தின் போது மிகக் கேவலமான இனவாதக் கூச்சல் எழுப்பப்பட்டது. இதில் சிங்கள இடது சாரிக்கட்சிகளும் பங்குபற்றினர். சட்டம் எதுவித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. சிங்களம் படிக்காத தமிழ் அரச ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். திருமலைத்துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதால் அது சிங்கள மயமாக்க வழிவகுக்கப்பட்டது.

அது மட்டுமன்றி சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் இக்கால கட்டத்திலே நிறைவேற்றப்பட்டது. இவ்வாறாக 1968ஆம் ஆண்டு நெருங்கிய பொழுது மாவட்ட சபை தொடர்பான சட்டத்தை டட்லி கொண்டுவராத நிலையில் தமிழரசுக் கட்சியினர் பெரும் அவமதிப்படைந்தனர்.

இவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக மாவட்ட சபை மசோதாவை டட்லி நாடாளுமன்றத்தில் பிரேரித்தார். ஆனால் மிகக் கடுமையான எதிர்ப்பு சிங்களத் தரப்பிலிருந்து கிளம்பவே அவர் இம் மசோதாவைக் கைவிட்டார்.

இதனால் கடைசியில் வேறு வழியில்லாது 1969ஆம் ஆண்டளவில் தமிழரசுக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. இவ் வெளியேற்றம், டட்லியைப் பெரிதும் பாதிக்கவில்லை. ஏனென்றால் அவரது ஆட்சிக்காலம் முடியும் தறுவாயிலிருந்தது.

மார்ச் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மே 1970 இல் புதிய தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டது.

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.