Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைகள் இழந்த மாணவன் வாயினால் பொதுத்தேர்வு எழுதி கலக்கினார் :கிராபிக் டிசைனராக விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைகள் இழந்த மாணவன் வாயினால் பொதுத்தேர்வு எழுதி கலக்கினார் :கிராபிக் டிசைனராக விருப்பம்

pt01gc7.jpg

சென்னை :இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார்.

சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.பின்னர், தன்னம்பிக்கையோடு பேனாவை வாயில் பிடித்து எழுதிப் பழகிய ஜனார்த்தனன், கைகள் நன்கு செயல்படும் பிற மாணவர்களைப் போலவே வேகமாக எழுதும் திறனை வளர்த்துக் கொண்டார். அரசு மெட்ரிக் பொதுத் தேர்வுகள் நேற்று துவங்கின. இதில், ராயபுரத்தில் உள்ள நார்த் விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனார்த்தனன், தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினார்.

உடல் திறன் பாதிக்கப்பட்டோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால், துறை ரீதியான கடிதம் இல்லை எனக் கூறி தேர்வு நடந்த பள்ளியில் ஜனார்த்தனத்திற்கு கூடுதல் நேரம் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து நிருபர்கள் அடுத்தடுத்து கல்வித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிறுவனின் நிலையை விளக்கினர்.இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி திருஞானசம்பந்தம் பள்ளிக்கு "விசிட்' அடித்தார். மாணவர் ஜனார்த்தனன் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கினார். ஆனாலும், ஜனார்த்தனன் இதை அவ்வளவாக விரும்பவில்லை என்பதுதான் "ஹைலைட்'.

தேர்வு நேரம் துவங்கியதும் பேனாவை வாயில் பிடித்து எல்லோரையும் போலவே இயல்பாகவும், உரிய வேகத்திலும் ஜனார்த்தனன் தேர்வு எழுதினார். முன்னதாக, ஜனார்த்தனன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் எட்டு வயதில் இருக்கும்போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும், ஒரு காலும் துண்டிக்கப்பட்டன. இதனால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்த சமயத்தில்தான் வாயினால் எழுத முயற்சி செய் என டாக்டர் கூறினார். இதை சவாலாக எடுத்துக் கொண்டு எழுதவும், ஓவியம் வரையவும் பழகினேன். தற்போது இயல்பாகவே எல்லாரையும் போல் உரிய வேகத்தில் எழுதுகிறேன். ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், எதிர்காலத்தில் கிராபிக் டிசைனராக வருவேன்,' என்றார் தன்னம்பிக்கையுடன்.

இதுவரை, பேனாவை வாயில் பிடித்து ஓவியம் வரைந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் 80க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார். 2004ம் ஆண்டு சிறந்த படைப்புத்திறனுக்காக குழந்தைகள் விருது மற்றும் பால்ஸ்ரி விருதையும் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார். கம்ப்யூட்டர்களை இயக்கவும், கீபோர்டு வாசிக்கவும் ஜனார்த்தனன் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயன்றால் முடியாதது ஒண்றுமேயில்லை

இதை சவாலாக எடுத்துக் கொண்டு எழுதவும், ஓவியம் வரையவும் பழகினேன். தற்போது இயல்பாகவே எல்லாரையும் போல் உரிய வேகத்தில் எழுதுகிறேன். ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், எதிர்காலத்தில் கிராபிக் டிசைனராக வருவேன்,' என்றார் தன்னம்பிக்கையுடன்.

இச்சிறுவனின் தன்னம்பிக்கையும் முயற்சியுமே அவனை உயர்த்தியுள்ளது.

அச்சிறுவனின் தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

செல்வனுக்கு வாழ்த்துகள்!!! :lol::(

அட...அட இவரல்லோ உண்மையான மாணவன் :D ..(அப்ப ஜம்மு பேபி சரி சரி அத விடுவோம் என்ன)..ம்ம்...கை எல்லாம் ஒழுங்கா இருக்கிற மாணவர்கள் எல்லாம் எப்படி பிட் அடித்து பாஸ் பண்ணலாம் என்று நினைக்கும் போது இப்படி ஒரு மாணவன்.. :D

ம்ம்...கடவுள் வந்து எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்கிறதில்ல என்பது இதை தான்..(நிசமா முடியல்ல :D )...என்றாலும் அந்த மாணவனிடம் உள்ள தன்னம்பிக்கை அவனை எல்லாவற்றிலும் வெற்றி பெற தான் செய்யும்..(ம்ம்ம் இந்த மாணவனுக்கு கை வேண்டும் என்றா இல்லாம இருக்கலாம் ஆனா தன்னம்பி"கை" என்ற "கை" இருக்கு அந்த கை ஒன்று போதும் அவன் வெல்ல).. :o

ம்ம்ம்..அந்த மாணவனின் ஆசைகள் நிறைவேற ஜம்மு பேபியின் வாழ்த்துக்கள் :D ...(அட ஜம்மு பேபிக்கு கை இருந்து என்ன செய்யுது)...என்ன பார்க்கிறியள் கடலை போடுறனான் தானே :o ...(நிசமா முடியல்ல)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில உன்னிட்ட எதுவும் இல்லாட்டியும் தன்னம்பிக்கை என்று ஒன்று இருந்தா உன்னுடைய கையும் ஓங்கும்" :o

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் இந்த மாணவனுக்கு கை வேண்டும் என்றா இல்லாம இருக்கலாம் ஆனா தன்னம்பி"கை" என்ற "கை" இருக்கு அந்த கை ஒன்று போதும் அவன் வெல்ல)..

சூப்பர் வசனம். :D

ஜம்மு வந்ததும் கலக்குறீங்க. ம்ம்ம் தொடருங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜனார்த்தனனின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.