Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கைப் போன்று வடக்கையும கைப்பற்றும் சிந்தனையால் பாரிய அழுத்தங்களில் சிக்கியிருக்கும் அரசு - இளந்திரையன்

Featured Replies

கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார்.

வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது :

'15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிகளிலும் அதே போன்று மணலாற்றுப் பகுதியிலும்; உக்கிரமான போர் நடக்கின்றது.

இதே போன்றே 11.10.2006 ம் ஆண்டு கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் படையினர்; பாரிய படை நடவடிக்ககைளை ஆரம்பித்தார்கள். ஆனால், இவர்களால் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. மன்னார், மணலாறு, கிளாலி, முகமாலை, நாகர்கோவில் இராணுவத் தளங்களிலிருந்து தொடர்ச்சியாக இராணுவத்தினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படை நகர்வுகளுக்கு நாம் தகுந்த முறையிலும் யுக்திகளில் அடிப்படையிலும் தரைத் தோற்றத்தை நன்கு பயன்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எமது தலைவர் பிரபாகரன் தலைமையில் தளபதிகள், போராளிகள் கடுமையான சமரைத் தொடுத்துள்ளனர்.

மன்னார் :

மன்னார் பகுதியை இலக்கு வைக்க படையினருக்கு பல காரணங்கள் உண்டு. அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மன்னாரை முற்று முழுதாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் மன்னார் - பூநகரி கரையோரப் பாதையை திறப்பது ஆகியவயே முக்கியமானது.

அதே வேளை, மடுத்தலம் போன்ற அரசியல் ரீதியில் இலாபங்களைத் தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கும் அவர்கள் பெரும் பிரயத்தனப்படுகின்றனர். அதற்காகவே படை நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.

ஒரு படை நடவடிக்கையை பெயரிட்டு நடத்தினால் அதற்கு ஒரு எல்லை, இலக்கு, காலவரையறை சொல்ல வேண்டும். அவ்வாறான சூழ்நிலைக்குள் சிக்க அரசு விரும்பவில்லை. அதனாலேயே இவ்வாறான இடங்களில் உக்கிரமான தாக்குதல்களை உச்ச அளவில் படையிவலுவை, யுக்திகளை பயன்படுத்தி நடத்துகின்றனர்.

இத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் சொல்லக் கூடியவாறான இடங்களைப் பிடிக்கவோ அல்லது அரசியல் ரீதியாக இலாபம் பெறுபதற்காக மடுத்தலம் போன்ற பிரதேசங்களை கைப்பற்றவோ முயற்சிக்கக் கூடும்.

இவ்வாறான நிலையில் தான் குறித்த இலக்கை குறித்த காலத்துக்குள் அடைய முடியாதென்ற நிலையிலே அவர்கள் கால எல்லையை அறிவிக்கவிலையே தவிர, மன்னார் பெருநிலப்பரப்பை அதன் கரையோரப் பாதைகளை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினர் உச்ச நிலைத் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துகின்றது. 57 ஆவது 58 ஆவது படைப்பிரிவுகள் இதனிடையே துணைப்படைப் பிரிவுகள், சிறப்புப் படையணிகள், காவல் படையணிகள் ஆட்லெறிப் படையணிகள் பெருமெடுப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், போர் வருடக் கணக்கில் இழுபடுகிறது.

இந்த தொடர் படை நடவடிக்கையின் விளைவு என்ன? ஒரு வருடமாக தொடரும் இப்போரில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? இதன் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய அனுமானங்கள் என்ன என்பது தொடர்பாக தற்பொது ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கி விட்டனர்.

மன்னார் எமது தாய் நிலம். அதற்காகா நாம் உக்கிரமாக போரிடுவோம். அரசியல் இலாபங்கள் யாழ். இராணுவத்துக்கான தரைவழிப்பாதை திறப்பு ஆகியவற்றக்காக படை நடவடிக்கை நடத்தப்படுகின்றது. காலம் செல்லச் செல்ல படையினருக்கும் நாம் இப்பகுதிகளை கைப்பற்றுவோமா என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் களச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முன்னே செல்லுதல் பின்னே செல்லுதல் பக்கவாட்டடாக முன்னேற விட்டுத்தாக்குதல், வழிமறித்து அடித்தல், எனப்பல வகை யுக்திகளை நாம் பயன்படுத்துகின்றோம்.

நாளை படையினர் மடுவுக்கு வரலாம். மறுநாள் நாம் மதவாச்சியில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயம். படையினர் முன்னேறும் ஒவ்வோரு அங்குலத்திலும் என்ன .இழப்பை சந்திப்பார்கள்? அவ்வாறான இழப்புகளை அவர்கள் உணரும் போது நாம் எவ்வாறன வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து எமது போரளிகள் போரிடுகின்றனர்.

வடபோர் அரங்கிற்கான முக்கிய பின்தளமாக அநுராதபுர படைத்தளமே பயன்படுத்தப்படுகின்றது. இத்தளத்தைப் பயன்படுத்தியே தொடர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன.

இந்த தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு பல காரணம் உண்டு. ஆழமான பின்புலங்கள் இல்லாத நிலையில் கூட சில அழுத்தமான அரசியல் இங்குள்ளது. குறிப்பிட்ட வெற்றிகளை அடைய முடியாத தாங்கள் ஆரம்பித்த சமர்களை நிறுத்த முடியாத அரசில் அழுத்தம் அரசுக்குள்ளது. இப்படியான ஒரு இறுக்கப்பாட்;டுக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர். மன்னார் கள நிலை இதுதான்.

மஹிந்த ஆட்சிக்கு வரும் போது போர் என்பது உப தொழிலாகவே இருந்தது. ஆனால், இப்போது அது தான் முழுத் தொழிலாகவே மாறிவிட்டது. ஆரம்பத்தில் யுத்தத்தில் கால் வைக்கும் போது புலிகளை வெல்வதென்பது இலகுவான விடயமென நினைத்தார் மஹிந்த. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள், படைத் தளபதிகள் விட்ட அதே வரலாற்றுத் தவறையே மஹிந்தவும் செய்தார்.

முன்னவர்கள் விட்ட அதே விதமான கணிப்பீட்டுத் தவறை, தான் நினைத்ததை அடைந்து விடலாமென்று எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை வைத்துக் கொண்டு கால எல்லைகளை வெளியில் சொல்லா விட்டாலும் தன்னகத்தே வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் எண்ணிக்கை விளையாட்டுகளையும் காட்டினார்கள்.

நன்றி தினக்குரல்

மகிந்த இதை வாசிக்க வேண்டும். மடுவா? மதவாச்சியா? முடிவு செய்யட்டும்.

மகிந்த இதை வாசிக்க வேண்டும்.

அவரும் யாழ்கள மெம்பரா இருக்கிறாரா? :huh:

இறைவன் என்னை திட்ட வேண்டாம் :)

மகிந்த ஒரு முடிவு எடுப்பவர் என்றால் இத்தனைக்கும் இரண்டில் ஒன்று தெரிந்திருக்குமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உதாரனத்திற்காகத்தான் இந்த இடத்தின் பெயர் பாவிக்கப்பட்டுள்ளது. ஏன் புலிகளின் இலக்கு யாழ் நகராகக்கூட இருக்கலாமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேர்கானலை கேட்கவும் http://www.tamilnaatham.com/interviews20080213.html

வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன? என்பது குறித்தும் முல்லைத்தீவு கடற்சமரில் வெளிப்படுவது என்ன? என்றும் தமிழீழப் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.08) அவர் வழங்கிய முழுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முனைப்புக்கள் பல முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய களநிலவரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் பாலமோட்டையில் சிறிலங்காப் படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான முதலாவது முன்னேற்ற முனைப்பு தாக்குதலை தொடங்கினர்.

அன்றில் இருந்து இன்றுவரை மன்னாரின் பல பகுதிகளிலும் அதேபோன்று மணலாற்றுப் பகுதிகளிலும் இத்தகைய சண்டைகள் வியாபித்திருக்கின்றன.

அதேநேரம் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் நாள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் சிறிலங்காப் படைகள் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இந்தப் படை நடவடிக்கைகளும் வன்னிப் பெருநிலபரப்பு மீதான முன்னேற்ற முனைப்புக்களாகவே இருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளிலும் அவர்கள் பல முன்னேற்ற முனைவுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மூன்று தளங்களில் அவர்களின் தொடர்ச்சியான முனைவுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக மணலாறு, மன்னார் பெருந்தளம், வடபகுதியில் உள்ள கிளாலி, முகமாலை, நாகர்கோவில் தளம் என தொடர்ச்சியான நடவடிக்கைகளை செய்வதற்கான முனைவுகள் அவர்களிடம் இருக்கின்றன.

அவற்றிற்கு தகுந்த முறையிலும், உத்திகளின் அடிப்படையிலும், தரைத்திட்டத்தை நன்கு பயன்படுத்தி இழப்புக்களைக் கொடுக்கக்கூடிய நிலையிலும் ஏதுவான சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிற ஒரு நிலையிலும் எங்களுடைய தளபதிகள், போராளிகள் அங்கு சமரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவை அனைத்தையும் எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் நுட்பமாகவும், உத்தி முறைகளுடனும் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருக்கிறார

இளைந்திரயன் அண்ணா(மார்ஷல்) முந்தி இலை மறை காய் போன்ற ஒரு போராளி அத்தோடு ஒரு இசை கலைஞர் கூட அவர் பேச்சில் யதார்த்தமான கருத்துக்கள் இருகிறது

தெளிவுவாக சொல்லி இருக்குறார் மடு போகாலாம் போகமலும் இருக்கலாம் ஆனால் போராட்டத்தில் இது எலலம் சகஜம் மடு போனா போராட்டம் போய் விட்டது என்று சோர்வடையாம தொடர்ந்து ஆதரவு கரத்தை நீட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் எதையெழுதினாலும் சொன்னாலும்

இன்னும் நாம் உயிராயுதத்தைக்கொடுத்துத்தா

எவர் எதையெழுதினாலும் சொன்னாலும்

இன்னும் நாம் உயிராயுதத்தைக்கொடுத்துத்தா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தமிழனும்

துளிபோட்டாலே மலையாகுமே

ஏன் தொடரந்து ஒரு சுவரையே இடித்தபடியுள்ளோம்???

சுவர் இருந்தால்தானே சித்திரமே???

எல்லாத்தமிழனும்

துளிபோட்டாலே மலையாகுமே

ஏன் தொடரந்து ஒரு சுவரையே இடித்தபடியுள்ளோம்???

சுவர் இருந்தால்தானே சித்திரமே???

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய விரைவான பணி குறித்த உங்களது பார்வை என்ன ?

பதில்: இத்தனை நாட்களும் அங்கிருந்துவந்த அவர்களின் உணர்வு ரீதியான அந்த ஒத்துழைப்பு என்பது ஒரு மாபெரும் விடுதலை சக்தியாக களங்களிலே செயலாக மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் இங்கே நன்றியுடனும் பணிவுடனும் உறவுடனும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதேநேரத்தில் எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை என்ற களமுனைப் போராளிகளின் அந்த உத்தரவாதத்தையும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதிலே உண்மையிலேயே நிறைவடைகிறேன்.

அதேபோல எங்களுடைய தேசியத் தலைவர் மிகவும் நுட்பமான இந்த காலகட்டத்திலே எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். பலவிதமான சூட்சுமப் புயல்கள், இராஜதந்திரச் சுழிகள், படை வல்லாதிக்க சூறாவழிகள் என்பனவற்றிற்கு ஊடாக விடுதலைப் படகை அவர் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறார்.

இவ்வளவு காலமும் போல அந்த இறுதிப்பயணம் வரைக்கும் எங்களுடைய வெற்றிக்கொடி இயற்றுகின்ற அந்த நாள்வரைக்கும் அத்தனைபேருடைய உழைப்பும் ஒத்துழைப்பும் உணர்வும் எங்களுடன் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைத்தான் நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

"இளைந்திரயன் "

உந்த தலையங்கத்தை கொஞ்சம் மாத்தினா அது டமிழருக்கும் 2006 இல இருந்து நல்ல வடிவாக பொருந்துகிறது:

"வடக்கைப் போன்று கிழக்கையும் பாதுகாக்கலாம் என்ற கற்பனையால் பாரிய குழப்பத்தில் சிக்கியிருக்கும் புலம் பெயர்ந்த டம்லர்கள்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.