Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னடர்களின் அட்டூழியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல்

பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங்களின் போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இதையடுத்து பெங்களூரில் தமிழ் சினிமா திரையிடப்படும் நடராஜ், சங்கீத், வினாயக், பாலாஜி, லாவண்யா, அருணா, சூப்பர் பூர்ணிமா, அஜந்தா மற்றும் சாரதா ஆகிய 9 தியேட்டர்களில் இன்றும் தமிழ் படங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

மேலும் தமிழ் சினிமா போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் தமிழ் திரையரங்குகள் வெறிச் சோடிப் போயுள்ளன.

''தமிழ் சினிமாவை அனுமதிக்க மாட்டோம்'':

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்யும்வரை பெங்களூரில் தமிழ் சினிமா படங்களை ஓடவிடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இதையடுத்து கன்னட அமைப்பினர், பெங்களூர் தமிழ்சங்கத்துக்கு சென்றனர். தமிழ்ச் சங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அடித்து உடைத்தனர். 2 பேர் தமிழ்ச்சங்க அலுவலகத்துக்குள் சென்று துண்டு பிரசுரங்களை வீசி விட்டு ஓடினர்.

-thatstamil-

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை காக்க கோரிக்கை

.

Tuesday, 01 April, 2008 02:10 PM

.

சென்னை, ஏப்.1: ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழர்கள் உரிமையை காத்திட மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது.

.

இனி கர்நாடகத்தில் தொடர்கிற பிரச்சனையை பொறுத்து அணிவகுப்பது, பணி முடிப்பது எப்படி என்பது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சித் தலைவர்களும் பேசினார்கள்.

இதற்கு பதிலளித்து அரசின் சார்பாக தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த மாதம் 27ந் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்குள்ள அனைத்து கட்சியினரின் ஒருமித்த கருத்தோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அந்த தீர்மானம் குறித்த விவரங்களை முழுமையாக அறியும் முன்பே மீண்டும் இந்த சபையின் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம்.

நமக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில மொழி வெறியர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த கசப்பு கூட ஒரு வகையில் வரவேற்கத்தக்க கசப்பாகவே உள்ளது.

இன்று ஒருநாளாவது இந்த அவை யில் ஒரே கருத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து நிறைவேற்ற இருக்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிலமைக்கு வழிவகுத்த ஒரு நிகழ்ச்சியாக கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அமைந்து விட்டன.

தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் மக்கள் என்றாலே கர்நாடகாவில் உள்ள ஒரு சில மொழி வெறியர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. தமிழர்கள் என்றாலே அவர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. தொடர்ந்து நம்மை வெறுப்பவர் களாகவே அவர்கள் உள்ளனர்.

அத்தகைய உணர்வை நீக்கும் வரையில் ஒருமைப்பாடு, இந்தியா வின் ஒற்றுமை என்று சொல்வ தெல்லாம் வெறும் வாய்மொழியாகத் தான் இருக்குமே தவிர வாய்மை நிறைந்ததாக இருக்க முடியாது.

சான்றாக உலகம் போற்றும் உத்தம ஞானி தமிழர்களுக்கு வழிகாட்ட திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு கர்நாடகாவில் மதிப்பில்லை. அந்த நகரின் தமிழ்ச் சங்கத்தின் வாசலில் திருவள்ளூவர் சிலையை திறக்க முடியாமல் துணி கொண்டு மூடப்பட்டுள்ளது.

அதை திறக்க விடாமல் சில வெறியர்கள் தடுத்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். என்றைக்கு திருவள்ளுவர் சிலை திறக்கப்படு கிறதோ அதற்கு மறுநாள் நான் அங்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.

இப்படியொரு சூளுரையை செய்யும் அளவிற்கு எல்லோராலும் மதிக்கப்படுகிற திருவள்ளுவருக்கே இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.

இந்த திருவள்ளுவர் சிலையை நாம் திறக்க முடியாமல் தவிக்கும் கால கட்டத்தில் தண்ணீரும் கிடையாது என்று சொல்கிறார்கள். முன்பு பயிர் பச்சைகளுக்கு தண்ணீர் தர முடியாது என்று சொன்னவர்கள் இப்போது உயிர் காப்பதற்கும் குடி தண்ணீர் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ஒகேனக்கல் பிரச்ச னையை கையில் எடுத்துள்ளனர்.

இந்த பிரச்சனையை அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம்.

கடந்த மாதம் 27ந் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தின் இறுதியில், "தமிழகம் எப்போதும் தமது அண்டை மாநிலங்களுடன் அந்த மாநில மக்களுடன் நட்புணர்வையும், நல்லுணர்வையும் பேணி பாதுகாத்து வருகிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறு வதற்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பையும், உதவியையும் வேண்டுவதுடன் கர்நாடக மாநில அரசின் எதிர்ப்பையும் தடுத்திட ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.

அந்த தீர்மானத்தில் இன்னும் சில வாசகங்களை இப்போது சேர்த்துள்ளோம்'.

அமைதி காக்கும் நோக்கத்துடனும், மாநிலங்கள் இடையே ஒற்றுமையை காண வேண்டும் என்ற நோக்கத் துடனும் இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் கர்நாடகாவில் சிலர் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களின் நலனுக்கும் விரோதமாக நடந்து கொள்ளும் போக்கு, நடத்து கின்ற கலகம் ஆகியவற்றை இந்த பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய நாட்டின் இறை யாண்மையை, ஒற்றுமையை பேணி பாதுகாத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் அந்த பொறுப்பை உடனடியாக நிறை வேற்ற முன் வரவேண்டும் என்றும், தமிழர்களின் உரிமையை காத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற வாசகங்களை சேர்த்திருக்கிறோம்.

இந்த தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி.

இந்த அளவோடு இன்றைய பிரச்சனையை நாம் நிறுத்தி வைக்கி றோம். இனி அங்கு (கர்நாடகா) என்ன நடக்கிறது என்று பார்த்து அதன் பின்னர் அணிவகுப்பது, பணி முடிப்பது எப்படி என்று அனைத்து கட்சித் தலைவர்களை கலந்து பேசி முடிவு செய்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

malaisudar.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னட வெறி அமைப்பு ஒன்றின் இணையத்தளம்:

http://www.karnatakarakshanavedike.org/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டப் படங்கள்:

http://www.flickr.com/photos/8061862@N05/

(இவை பழைய படங்களாகும்)

அவர்களின் மேலே எழுதப்பட்ட 3 கொள்கை வசனங்களும்:

கன்னடவே ஜாதி, கன்னடவே தர்ம (கன்னடமே மதம்), கன்னடவே தேவரு (கன்னடமே தெய்வம்)

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! சரித்திரம் திசைமாறுகிறது. கன்னடர்களின் மொழியுணர்வு தமிழகத் தமிழர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி. இந்தியா ஐக்கியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்போர் கன்னடர்களைப் பார்த்தாவது திருந்தக்கூடும். தமிழகத் தமிழனுக்கு ஒருநாடு அல்லது ஆகக்குறைந்தது ஒரு சுயாட்சிகொண்ட மானிலம் என்ற திசையை நோக்கித் தமிழகம் பயணிக்கவேண்டும். இவையெல்லாவற்றையும் விட்டாலும் தமிழன் தலை நிமிhந்து வாழ அவனுக்கென்றோர் நாடு வேண்டும், அதனால் உருவாகிக் கொண்டிருக்கும் தமிழீழ நாட்டையாவது எல்லோரும் முன் நின்று அமைத்துக் கொடுக்கவேண்டும் என்னும் சிந்தனையாவது மேலும் வலுப்பெறட்டும்.

எல்லாம் அரசியல்....! உசுப்பேத்தி உசுப்பேத்தியே நாட்டை ரணகளமாக்கிறாங்க..!

தமிழர்கள் எல்லாம் தமிலியங்களா மாறினா உப்பிடித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.