Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிகாலம் என்பது இதைத்தானா

Featured Replies

அதேதான் நானும் கூறுகின்றேன்... மத நம்பிக்கை உங்கள் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் அதை வெறியாக்காதீர்கள்..! இது எல்லா மதத்தவருக்கும் பொருந்தும்...

மதத்தில் இருந்து வெளியே வரும் போது அனைத்து சீர்திருத்தங்களும் நிறைவேறுகின்றன...!

விஞ்ஞானம் வளர வளர மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக உடைய வேண்டும்..!

  • Replies 102
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்குப் பல தடவை சொன்னதும், அவர் புரியாதது போல நடிப்பதும் ஒரே விடயம் தான். புராணங்கள் இந்து மதத்தின் அடையாளங்கள் அல்ல. ஞானிகளும், முனிவர்களும் என்றுமே உருவவழிபாட்டை வைத்து வணங்கியதில்லை. ஆனால் பக்தி பற்றித் தெரியாதவர்களுக்கும், தெளிவில்லாதவர்களுக்குமே புராணக்கதைகள் தேவைப்படுகின்றன... சபேசன் உற்பட அனைவருக்குமே.

எனவே இங்கு கேட்கின்ற புராணக்கதைகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய தேவையில்லை. மேலும், அனைவரும் அறிந்த ஒரு விடயம். ஆதிசங்கர்ர வந்த பின்பு தான் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்த இந்து மதம் ஒன்றாக்கப்பட்டது. அதற்கு முதல் வைஸ்ணவரும், சைவரும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தோம். வாக்குவாதப்பட்டு;க கொண்டிருந்தோம்.

ஆதிசங்கரர் வந்த பின்னர், அவர் அனைத்து மத அமைப்புக்களையும் சந்தித்து, எவ்வகை உருவத்திலான வழிபாட்டைச் செய்தாலும், அது ஒரே கடவுளைத் தான் அடைகின்றது என்ற ஒரு முறையை உருவாக்கினார்.

எனது கருதுகோளின் படி, அந்த சமயத்தில் தான் பொதுவான கடவுள் என்ற பதம் அறிமுகம் செய்யப்ப்டடது மட்டுமல்லாமல், பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அறிமுகம் செய்யப்பட்டது.

பிச்சைக்காரனுக்கு கார் கிடைத்தால் ஊர் முழுக்கப் பந்தா காட்டுவது போலச் சமஸ்கிருதம் முன்ணனி செய்தது

எனவே அன்று குற்றவாளியாகத் தமிழராகிய(சேர நாடு) ஆதிசங்கரரும் சமஸ்கிருதம் கோவிலில் ஓத வெளிக்கிட்டமைக்குப் பொறுப்பாக இருந்திருக்கலாம்

இன்றைக்கு ஆங்கிலத்தை தேவைப்படும் மொழியாகப் படிப்பதோடு, அது படிப்பது குறித்து எப்படி நியாயம் செய்கின்றார்களோ அவ்வாறு தான் அன்றைக்குச் சமஸ்கிருதம் வந்தமைக்கு நியாயங்கள் இருந்தது.

எனவே புராணக்கதைகள் எனச் சபேசன் சுட்டிக்காட்ட முனைவது எல்லாம் 6 வகைச் சமயங்களையும் ஒன்றாக்கி மக்கள் மனதில் ஒரே கடவுள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கம் செய்வதற்காக, செய்யப்பட்ட செய்கை. அது கடைசியில் ஐயர் வாயில் இறகு கிடந்தது என்பது திரந்து போய், புறாக்களும், பருந்துகளும் ஐயர் வாயில் இருந்து பறந்தன என்ற வதந்தியாகி விட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரைக்கும் பக்திக்கும் புராணக்கதைக்கும் சம்பந்தமில்லை.

தெளிவில்லாதவனுக்குத் தான் புராணங்கள் தேவைப்படுகின்றன.

உண்மையில் அவர்கள் தாம் செய்தது சரி என்று கூறவும் இல்லை தமது நடத்தையை மதத்தாலோ மேற்குலக கலாச்சாரத்தாலோ நியாயப்படுத்தவும் முற்படவில்லை.

எனவே இதுக்குள்ளை ஏன் மதம் வந்தது? பைபிளை தூக்கி வைத்து அவர்களின் நடத்தைக்கு நியாப்படுகளை வைப்பது ஏன்?

அவர்கள் மாறாக தம்மை ஒருவகையில் மன்னியுங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்ற பாணியில் தான் கேட்டுள்ளார்கள்.

உப்படியான உறவுகள் மிகக்குறைவு என்றாலும் எல்லா இடங்களிலும் நடந்தது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றுள் 2 தரப்பாரின் அனுமதியில்லாது வன்புணர்வாக நடப்பவை அதிகம். ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் விபத்தாக நடந்த பின்னர் அது பற்றி வெளியில் அறிவிக்காது வாழ்க்கையை தொடருபவர்களும் நிச்சயம் இருக்கிறார்கள்.

இவர்கள் இதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.

உவை எல்லம் எந்த சமூகத்திலும் நடக்கும் விதிவிலக்குகள். மேற்குலக கலாச்சாரத்தையோ மதத்தையோ இதற்குள் திணிக்கத் தேவையில்லை. அவற்றின் அடிப்படையிலும் இவை ஏற்றுக் கொள்ளப்படாதவை ஊக்குவிக்கப்படாதவை தகாதவை தான்.

ஆனால் எங்கடை கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான விடையம் ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஒருவகையில் சிலமட்டங்களில் பெருமையுடன் ஊக்குவிக்கப்படுவதாகவும் இருக்கிறது:

-1- மச்சாள் - மச்சான் திருமணம்

-2- மாமன் - மருமகள் திருமணம்

-1- மச்சாள் - மச்சான் என்ற மயக்கமான சொல்லாடிலிற்கு பின்னால் அடிப்படையில் உள்ளது அக்கா அண்ணா தம்பி தங்கச்சி உறவு தான்.

இவர்களிற்கு பிறக்கும் பிள்ளைகள் அம்மா என்று கூப்பிடுமா அல்லது மாமி என்று கூப்பிடுமா? அப்பா என்று கூப்பிடுமா அல்லது மாமா என்று கூப்பிடுமா?

-2- அத்தைப் பொண்ணு - மாமா என்ற மயக்கத்திற்கு பின்னால் உள்ளது சாதாரண மாமா - மருமகள் உறவு தான்.

இவர்களிற்கு பிறக்கும் பிள்ளைகள் அப்பா என்று கூப்பிடுமா அல்லது தாத்தா என்று கூப்பிடுமா? அம்மா எண்டு கூப்பிடுமா அல்லது அக்கா மச்சாள் எண்டு கூப்பிடுமா?

இந்த 2 வகையும் எமது சமூகத்தின் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பான்மை என்று இல்லாவிட்டாலும் ஒரளவு தொகையை உடையவர்கள் உம் எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவு முறைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி இந்து ராம் என்று எழுதினாலோ, சோ ராமசாமி ஏதாவது எழுதினாலோ வருகின்ற பார்ப்பானத்துவம், அல்லது இந்தியா எழுதினால் இந்து வெறியர்கள் என்று வருகின்ற கருத்தோட்டங்கள் வெள்ளையன் என்றவுடன் இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல வைக்கின்றது எனப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவத்தில் சாதி கோத்திரம் இல்லையென்று யஸ்ரின் சொன்னீரல்லவா?இயேசு நாதர் யூதரில்லாத மற்றவர்களுக்கு உதவத் தான் வரவில்லை என்கின்றார். ஆனால் நீங்கள் நம்பிப் போய்க் கொண்டிருக்கின்றீர்கள்..

பிள்ளைகளாகிய யூதருக்குப் போடுகின்ற அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிளாகிய உங்களுக்குப் போடுவது நல்லதல்ல என்கின்றார்

------------------------

மத்தேயு:

அதிகாரம் 15

வசனம்: 21இல் இருந்து- 28வரை

21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

-------------------------

1. நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

2. யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

3. கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

4. யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

5. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

Thuyavan is on a roll today..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் அவர்கள் தாம் செய்தது சரி என்று கூறவும் இல்லை தமது நடத்தையை மதத்தாலோ மேற்குலக கலாச்சாரத்தாலோ நியாயப்படுத்தவும் முற்படவில்லை.

எனவே இதுக்குள்ளை ஏன் மதம் வந்தது? பைபிளை தூக்கி வைத்து அவர்களின் நடத்தைக்கு நியாப்படுகளை வைப்பது ஏன்?

அவர்கள் மாறாக தம்மை ஒருவகையில் மன்னியுங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்ற பாணியில் தான் கேட்டுள்ளார்கள்.

உப்படியான உறவுகள் மிகக்குறைவு என்றாலும் எல்லா இடங்களிலும் நடந்தது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றுள் 2 தரப்பாரின் அனுமதியில்லாது வன்புணர்வாக நடப்பவை அதிகம். ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் விபத்தாக நடந்த பின்னர் அது பற்றி வெளியில் அறிவிக்காது வாழ்க்கையை தொடருபவர்களும் நிச்சயம் இருக்கிறார்கள்.

இவர்கள் இதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.

உவை எல்லம் எந்த சமூகத்திலும் நடக்கும் விதிவிலக்குகள். மேற்குலக கலாச்சாரத்தையோ மதத்தையோ இதற்குள் திணிக்கத் தேவையில்லை. அவற்றின் அடிப்படையிலும் இவை ஏற்றுக் கொள்ளப்படாதவை ஊக்குவிக்கப்படாதவை தகாதவை தான்.

ஆனால் எங்கடை கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான விடையம் ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஒருவகையில் சிலமட்டங்களில் பெருமையுடன் ஊக்குவிக்கப்படுவதாகவும் இருக்கிறது:

-1- மச்சாள் - மச்சான் திருமணம்

-2- மாமன் - மருமகள் திருமணம்

-1- மச்சாள் - மச்சான் என்ற மயக்கமான சொல்லாடிலிற்கு பின்னால் அடிப்படையில் உள்ளது அக்கா அண்ணா தம்பி தங்கச்சி உறவு தான்.

இவர்களிற்கு பிறக்கும் பிள்ளைகள் அம்மா என்று கூப்பிடுமா அல்லது மாமி என்று கூப்பிடுமா? அப்பா என்று கூப்பிடுமா அல்லது மாமா என்று கூப்பிடுமா?

-2- அத்தைப் பொண்ணு - மாமா என்ற மயக்கத்திற்கு பின்னால் உள்ளது சாதாரண மாமா - மருமகள் உறவு தான்.

இவர்களிற்கு பிறக்கும் பிள்ளைகள் அப்பா என்று கூப்பிடுமா அல்லது தாத்தா என்று கூப்பிடுமா? அம்மா எண்டு கூப்பிடுமா அல்லது அக்கா மச்சாள் எண்டு கூப்பிடுமா?

இந்த 2 வகையும் எமது சமூகத்தின் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பான்மை என்று இல்லாவிட்டாலும் ஒரளவு தொகையை உடையவர்கள் உம் எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவு முறைதான்.

அண்ண எங்கயோ போறியல்...... சகோதரதுக்கும் மச்சானுக்கும் வித்தியாசம் இருக்கு

ஒரோ பால் இன்ர பிள்ளயள் சகோதரம்...........

எதிர் பால் இன்ர பிள்ளயள் மச்சான் மச்சாள்............

இது மகப்பன்ர தகப்பன் தாய்க்கும் பொருந்துமண்னே.......

அண்ணன் தங்கை ரத்த ம் வேறுபடுறதால நோய்காவியளும் வித்தியாச படுமாம்........

உதால மச்சான் மச்சாள் கலியாணம் செய்யலாமாம்......... சொல்லுரினம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்

இன்றல்ல சில நாட்களாகவே நான் அப்படித் தான். ஒரு காலத்தில் சபேசன் பைபிளைப் பற்றி எழுதியபோது, அதை வேண்டாம் என்று தடுத்திருந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16632

ஆனால் இங்குள்ள சில பைபிள் பிடிக்கின்றவர்கள், ஏதோ பைபிள் சுத்தம் மாதிரியும் இந்து மதம் அசிங்கம் அதனால் தான் மதம் மாறினது போலவும் கதைளப்பதும், போத்துக்கேசர் இந்துக்கோவில்களைத் தகர்த்து தேவாலயம் கட்டாயம் மதம் மாற்றியது போலவும், சாதிக் கொடுமையால் தான் மதம் மாறினது, பணத்துக்காக அல்ல என ஏற்றுக்கதை விடுகின்ற சிலரின் செயற்பாடு தான் இப்படி எழுதத் தூண்டியது.

இது மட்டுமில்லாமல் அன்றொரு நாள் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கதைத்தற்காக, ஒருவர் எப்போது பார்த்தாலும் என்னைக் குறித்த சம்பவங்களுக்குச் சீண்டி இழுப்பதுமாகவே இருந்தார்.

பைபிளில் உள்ள அசிங்கங்களைப் பற்றி எமக்குத் தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும்.

தூயவன் இந்தக் கருத்தை நீங்கள் கவனிக்கவில்லையா?

உங்கள் பதிலை அறிய ஆவலாயிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பக்திக்கும் புராணக்கதைக்கும் சம்பந்தமில்லை.

தெளிவில்லாதவனுக்குத் தான் புராணங்கள் தேவைப்படுகின்றன.

சரி புராணங்களை விடுங்கள்.

தாய்மொழியில் வணங்குவது உசிதமானது என்று நீங்கள் எண்ணவில்லையா?

அல்லது ஒன்றுமே பரியாத சமஸ்கிருதத்தில் வணங்காவிட்டால் தீட்டுப் பட்டுவிடும் என்ற காஞ்சியாரின் கொள்கையைப் பின்பற்றுவது தான் சரி என்பது தான் உங்கள் கருத்தா?

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிப் பெரியவர் இருந்தபோது மரியாதையிருந்தது. ஆனால் இப்போதுள்ளவர் மீது என்றைக்குமே மரியாதையில்லை. தமிழை நீச மொழி என்று திட்டிய இவராகட்டும், காட்டுமிராண்டி என்று திட்டிய ராமசாமியாகட்டும். இருவரும் தமிழ் எதிரிகளே.

மேலே உங்களுக்குச் சொன்னது போல, மந்திரங்களை வெறுமனே நேரடி மொழி பெயர்ப்பில்லாமல், பாடும்போது பரவசம் தரக்கூடிய விதத்தில் யாராவது மொழி பெயர்த்தால் அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராகத் தான் இருக்கின்றார்கள்.

ஆனால் அதை மொழி பெயர்க்கின்ற அளவுக்கு திறமையோ, தமிழ் தரக்கூடிய திறமையோ எனக்குக் கிடையாது. சமஸ்கிருதம் வேண்டாம் என்பவர்கள், அதற்குப் பதிலாக என்ன செய்வது என்பது பற்றித் தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.

சமஸ்கிருத்தில் ஒன்றுமே புரிவதில்லையே. அவை மட்டும் தூய்மையாய் தெளிவாய் இருப்பதாக எப்படிக் கூற முடியும்?

கந்தர் சஸ்டி கவசத்தைக் கேட்கின்ற போது ஏற்படுகின்ற பக்தி இந்த ஒன்றுமே புரியாத சமஸ்கிருதத்தில் இருக்கிறதா?

கடவுளை அராதிக்க எதுக்கு மொழி..? உங்களுக்கு தெரிந்த மொழியிலே ஆராதிக்கலாமே?

அதைத்தான் தீட்டுப் பட்டுவிடும் என்று பிராமணிய சக்திகள் தர்க்கிக்கின்றனவே?

அதற்கு சார்பாக எம்மவர்களில் சிலரும் நொண்டிச் சாட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காவியா

புரியவில்லையா? இந்த மாதிரி மந்திரங்களை மொழி பெயர்க்கின்ற சக்தி உங்களுக்கிருந்தால், அல்லது அது போலத் தரமுடியுமாக இருந்தால் தந்து, இதை ஓதுடா என்ற போது யாரும் ஓதாமல் இருந்தால் உங்களின் குறை பிடிக்கின்ற படலத்தை;த தொடரலாம். ஒன்றுமே தரவில்லை. என்னத்தைச் செய்ய??

சமஸ்கிருதம் இனிமை தருகின்றதா இல்லையா என்பதல்ல பிரச்சனை. அதற்குப் பதிலாக ஏதாவது தாருங்கள் என்று தானே கேட்கின்றோம்.

பிராமணிகள் மட்டும் இந்து மதத்திற்குச் சொந்தக்காரர் கிடையாது. நாமும் உரித்துடையவர்கள். பல ஆலயங்களைக் கட்டியது நாங்கள் தானே. அப்படியிருக்கின்றபோது ஏன் பிராமணி குறித்து அச்சப்பட வேண்டும்.

உங்களால் தமிழில் பரவசத்தோடு பாடக் கூடிய மந்திரங்களைத் தரமுடியவில்லை அது தான் பிரச்சனை.

ஆலயத்தில் தமிழில் பூசை செய்வதற்கான மந்திரங்கள் எல்லாம் தமிழில் இருக்கின்றன. லண்டனில் கூட ஒரு கொயிலில் தமிழில் பூசை நடத்தக் கூடிய அர்ச்சகர் இரக்கிறார். தமிழகத்திலும் சில கோயில்களில் நடக்கின்றன.

ஆனால் தங்கள் பிழைப்புக் கெட்டுவிடும் என்று பயப்படும் பிராமண சக்திகள் தூய்மை கெடும். அது இது என்று சொல்லி அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

13. ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து:

14. நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;

15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,

19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர

  • கருத்துக்கள உறவுகள்

1. விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

2. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=23

பைபிளில் மட்டும் இப்படியான கதைகள் உள்ளனவா? ஏன் சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் புகழ்பாடும் திருவிளையாடற் புராணத்தில் (மாபாதகம் தீர்த்த படலம்)தாயுடன் சயனித்த பார்ப்பனன் ஒருவனுக்கு சிவபெருமான் முக்தியழித்ததாக இருக்கிறது. அதையும் கோயில்களில் வைத்திருக்கிறார்கள், படிக்கிறார்கள்.

இதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? நானும் பலமுறை கேட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

5. சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

6. மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.

7. அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.

8. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,

9. அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.

10. இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.

11. புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,

12. அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.

புருசன் செய்வதை பிழையாக இருந்தாலும், அவனை மட்டுமே பின்பற்று. தவறினால் உன் கைகள் வெட்டப்படும் என்கின்றார். இவர்கள் தானே பெண்கள் உரிமை, பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்கள்??

தந்தை சொல்கின்றார். என் மகள்மாரை என்னவாவது செய்யுங்கள்..... பொறுப்புள்ள தந்தை??

8. இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

படைவீரனின் மனைவியை அடைவதற்காக அவனைக் கொல்ல வைத்தான் தாவீது. அவளும் அதற்கு உடந்தை..

2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போத

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? நானும் பலமுறை கேட்டு விட்டேன்.

இது பற்றி எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் சுபவி சொன்ன பதில் இது:

திருவிளையாடற் புராணத்தில் உள்ள ‘மாபாதகம் தீர்த்த படலம்' இன்னொரு செய்தியைக் கூறுகின்றது. அப்படலத்தில், ஒரு பார்ப்பன இளைஞன், தன் தந்தையைக் கொன்றுவிட்டுத் தாயைப் பெண்டாள முயற்சிப்பான். அந்த ஆபாசக் கதையில், ஒரு நீதி சொல்லப்படும். கொன்றது ஒரு பார்ப்பனராகவே இருந்தாலும், கொல்லப்பட்டதும் ஒரு பார்ப்பனராக இருக்கும் வேளையில் அவருக்குப் ‘பிரம்மஹத்தி தோஷம்' பிடித்து விட்டது என்றும், அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் அந்நூல் கூறும்.

ஆக கொல்லப்பட்டது பார்ப்பனராக இருந்தால் தான்..........

எங்கள் வீட்டிற்குள் இருக்கின்ற இது போன்ற சாக்கடைகளை துப்பரவு செய்து விட்டு அடுத்த வீட்டுக் குப்பைகளைக் கிளறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிலுக்காகத் தான் நீர் இவ்வளவு தரமும் திருப்பித் திருப்பி ஒரே கதையைக் கேட்டுக் கொண்டிருந்தீர் எனத் தெரியும். கண்ணாடி வீட்டினுள் இருந்து கல்லெறிவது பற்றிச் சொன்னீரல்லவா? அவர்கள் எறிந்த கல் உடைத்த துவாரத்தினூடகத் தான் நான் பதிலுக்குக் கல்லெறிகின்றேன்.

எனவே எனக்கு நிறுத்த வேண்டிய தேவையில்லை. தாங்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவில் போவதாக இங்கிருந்து அறிந்தேன். கோவில் போனமா, அங்கே பிரசாரமும், பஞ்சாமிருதமும் குடித்தமா வீட்டுக்கு வந்தமா என்று தினத்தைப் போக்குவதற்குப் போய்ச் சுத்தம் செய்வது என்ற அர்த்தம் கிடையாது.

உங்களின் வேலையைத் தாங்கள் பாருங்கள். என் வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களுக்குள்ளும் நல்லது கெட்டவை இரண்டும் உண்டு. இந்து மதத்துக்குள் மட்டும் தான் கெட்டது உள்ளதாக இல்லை. மதம் என்பது மனித உருவாக்கம். அறிவியல் கல்வி அறிவு வளரமுதல் இருந்த ஆதிகால மனித நடத்தைப் பிறழ்வுகள் புராண வடிவில் அதில் செருகப்பட்டு பிரதிபலித்திருப்பது... மதம் ஒட்டு மொத்தமாகக் கெட்டது என்பதாகாது. மதங்கள் இன்றும் மனிதனுக்கு தேவையான நல்ல விடயங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை இனங்காட்டிக் கொள்வதோடு.. சீர்கேடுகளை அகற்றி சீர்படுத்திக் கொண்டு செல்வதை விடுத்து.. மத எதிர்ப்பு பாசிசத்தை கொட்டுவது.. குறிப்பாக இந்து மதத்தை நோக்கி மட்டும் செய்வதை தவிர்க்க வேண்டும்..!

பகுத்தறிவு என்று எவனும் எவளுடனும் கூடலாம் களிக்கலாம்.. பாட்டன் பேத்தியோடும் வாழலாம் என்று வாழ்வதிலும்.. மதங்கள் சொல்லும் சீர்கெட்டவற்றை அகற்றிவிட்டு நல்ல பல விடயங்களைப் பின்பற்றுவது எவ்வளவோ மேல். அது மனித நாகரிகம் என்பது ஒரு மனித ஒழுக்கத்துக்கு வகை செய்து வளமான மனித இனம் தொடர்ந்து உலகில் நிலைத்திருக்க உதவும்..! :icon_mrgreen:

நெடுக்காலபோவான் ஒரு வழியா நடந்து நடந்து எனது வீட்டு வாசலுக்கு வந்துவிட்டீர்கள். என்னுடைய கருத்து அன்றில் இருந்து இதுதான். நான் இந்து சமயத்தை அதிகம் தாக்கி எழுதுவதற்கான காரணம். எனது சமயமும் இந்து சமயம்தான் ஆதலால் அதிலிருக்கும் அசிங்கங்கள் எனக்கு ஓரளவு புரியும். தெரியாத மதங்களை பற்றி ஏன் எழுதுவான் என்றுதான் எழுதுவதில்லை தவிர ........ எந்த மதத்தையும் நான் ஏற்று கொண்டதில்லை. இங்கே ஒருவர் தனக்கு தானே ஒடி ஒடி சேற்றை பூசுகிறார் பார்த்தால் பாவமாமக இருக்கிறது. கள உறவு என்ற ரீதியில் தாழ்பணிந்து பல முறை கேட்டுவிட்டேன் ஒரு முறையான விதாத்திற்கு வாருங்கள். அது எமது அறிவை வளர்க்க பெரிதும் பயன்படும் என்று. விழங்கிய மாதிரி தெரியவில்லை........... எதையாவது எழுதி தொலைக்கட்டும். ஆனால் இந்த நாகரீக உலகிலா இப்படி??? என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்.

" ஒரு மனிதனின் ஆண்மாவை சுத்தபடுத்தி அமைதியான மனதுடன் அடுத்தவனுக்கு தொல்லையின்றி வாழ ஆண்மீகம் போல் வேறொன்று இங்கில்லை"

இது என்னுடைய கருத்துத்தான் ...... ஆனாலும் இதில் எனக்கு சிறு துளியும் உடன்பாடில்லை காரணம் இது ஒரு சுயநல சிந்தனை போல் எனது மனசாடச்சிக்கு படுகின்றது. காலபோக்கில் யாழ்களத்தில் பெறும் அறிவினால் அது மாறலாம். ஆனாலும் கடவுளை ஒரு போதும் நான் ஏற்க போவதில்லை. பரினாம வளர்சியை அதிகம் நம்புகிறேன். அதற்காக அடுத்தவனுடைய மத நம்பிக்கையை பழிப்துமில்லை தடுப்பதுமில்லை. ஆனால் மதத்தின் பெயாரல் மனிதர்கள் மேல் இழைக்கப்படும் தவறுகளை எவ்வாறு ஏற்கமுடியும்?

தவறுகளை கண்டு அகற்றுவோம் வாருங்கள் என்றால் ஒருவனும் தனது மதத்தில் இருக்கும் தவறுகளை ஏற்பவனாக தெரியவில்லை அதனால்தான் சில முரண்பாடுகளும்........... எனது கருத்து இந்து சமயத்தை தாக்கியும் வருகின்றன.

அவன் அன்றி ஒரு அணுவும் அசையாதே...!

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்ட மாபாதகம் தீர்த்த படலக் கதையை அறிஞர் அண்ணா ஒரு தடவை சிலாகித்து இருக்கிறார் (ஆரிய மாயையில் என எண்ணுகிறேன்). 'ஒரு பாபமும் செய்யாத ஆனால் தாழ்ந்த குலத்தினரான சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்துக் கொடுக்கும் வரைக்கும், கண்ணப்ப நாயனார் தன் கண்ணைத் தோண்டும் வரைக்கும் தடுத்தாட்கொள்ளாமல் சோதித்த சிவபெருமான் தாயைப் புணர்ந்து மாபாதகஞ் செய்த அந்தப் பார்ப்பனனுக்கு மட்டும் எது வித கேள்வியுமில்லாமல் முத்தி கொடுத்தது அவன் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான்." என்று அண்ணா வாதிடுகிறார்.

இது யாழ்களமானாலும் உலகிலுள்ள எல்லாத் தமிழர்களும் கருத்தெழுதும் களமாதலால் சும்மா மச்சான் மாரோடு சண்டைபிடிக்கும் சாக்கில் மற்றவர்களை ஸ்கிப் பண்ணிக்கொண்டு வாயில் வந்த படியெல்லாம் உலகப் பொது மறையான பைபிளைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் (இந்துமத)ஊத்தைகளையும் பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்லித்தானாகவேணடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.