Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி.க்களில் நால்வரது வாகனங்கள் இனந்தெரியாதோரால் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 10-04-2008 11:04 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிறீலங்காப் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் கடத்தல்

சிறீலங்காப் பாராளுமன்றில் வைத்து ஜேவிபி உறுப்பினர்களின் வாகனங்கள் காணமால் போயுள்ளன. நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்ற மூவரின் வாகனங்களும் மற்றொன்று ஜேவிபியின் உறுப்பினரின் வீட்டில் வைத்தும் காணாமல் போயுள்ளன.

ஜேவிபியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியிசிறீ விஜேநாயக்கவின் ரொயோட்டா கப் வாகனம், இரத்தினபுரி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொடவின் ரொயாட்டா கயஸ், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜாதா அலகக்கோனின் வாகனமும் அவரது வாகனச் சாரதியும் பாராளுமன்ற வளாக வாகனத் தரிப்பிடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ஜேவிபியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்சிறீ ஹேரத்தின் வீட்டுக்கு வந்த இனம் தெரியாததோர் அவரைத் தாக்கிவிட்டு, மொனராகல மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசந்தவின் வாகனத்தையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த வாகனக் கடத்தல்கள் தொடர்பில் சிறீலங்கா பாராளுமன்ற சபாநாயகர் லொக்குபண்டாரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக் குழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை நேற்று அடையாளம் தெரியாத குழுவினர் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.பிக்களில் நால்வரின் வாகனங்கள் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்ட எம்.பி பியசிறி விஜேநாயக்க, இரத்தினபுரி மாவட்ட எம்.பி. அசேல ஜாகொட, மாத்தளை மாவட்ட எம்.பி சுஜாதா அழகக்கோன், புத்தளம் மாவட்ட எம்.பி சமன்சிறி ஹேரத் ஆகிய நான்கு பேரது வாகனங்களும் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பி.க்களான பியசிறி விஜேநாயக்க, அசேல ஜாகொட ஆகியோரது கெப்ரக வாகனங்கள் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுஜாதா அழகக்கோனின் வாகனமும் கடத்தப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம் மாவட்ட ஜே.வி.பி எம்.பி சமன்சிறி ஹேரத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற 25 பேரடங்கிய கும்பல் எம்.பியின் சாரதியை தாக்கி விட்டு அவரது வாகனத்தையும் கடத்திச் சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தின் போது எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடமிருந்த துப்பாக்கி மகசீன்கள் இரண்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் எம்.பி.யின் சாரதி கடும் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஜே.வி.பி எம்.பி விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 10 எம்.பிக்களுக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமைக்கும் கட்சியின் கொள்கைக்கும் எதிராக செயற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத பொதுமக்கள் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களை தண்டித்துள்ளனர். அதனடிப்படையிலேயே வாகனங்கள் கடத்தப்பட்டுள்ளன என்று ஜே.வி.பி எம்.பி கே. டி. லால்காந்த தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி.க்களில் நால்வரது வாகனங்கள் இனந்தெரியாதோரால் கடத்தல்

[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2008, 07:35.47 PM GMT +05:30 ]

ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.பிக்களில் நால்வரின் வாகனங்கள் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்ட எம்.பி பியசிறி விஜேநாயக்க, இரத்தினபுரி மாவட்ட எம்.பி. அசேல ஜாகொட, மாத்தளை மாவட்ட எம்.பி சுஜாதா அழகக்கோன், புத்தளம் மாவட்ட எம்.பி சமன்சிறி ஹேரத் ஆகிய நான்கு பேரது வாகனங்களும் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பி.க்களான பியசிறி விஜேநாயக்க, அசேல ஜாகொட ஆகியோரது கெப்ரக வாகனங்கள் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுஜாதா அழகக்கோனின் வாகனமும் கடத்தப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம் மாவட்ட ஜே.வி.பி எம்.பி சமன்சிறி ஹேரத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற 25 பேரடங்கிய கும்பல் எம்.பியின் சாரதியை தாக்கி விட்டு அவரது வாகனத்தையும் கடத்திச் சென்றுள்ளனர். :icon_mrgreen:

தாக்குதல் சம்பவத்தின் போது எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடமிருந்த துப்பாக்கி மகசீன்கள் இரண்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் எம்.பி.யின் சாரதி கடும் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஜே.வி.பி எம்.பி விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 10 எம்.பிக்களுக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமைக்கும் கட்சியின் கொள்கைக்கும் எதிராக செயற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத பொதுமக்கள் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களை தண்டித்துள்ளனர். அதனடிப்படையிலேயே வாகனங்கள் கடத்தப்பட்டுள்ளன என்று ஜே.வி.பி எம்.பி கே. டி. லால்காந்த தெரிவித்தார்.

tamilwin.com

இனந் தெரியாதவர்கள் என்று அங்கு எவருமில்லை. எல்லமே அன்பரின் ஆதரவாளர்கள்தான்.

ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விமல் வீரவன்ஸ அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின்.............

தொடர்ந்து வாசிக்க...............................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_11.html

என்னடா இந்த வீரபத்திரரின் கதிரைக்கு வந்த சோதனை????? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி.அதிருப்தியாளர் குழு மீது அச்சுறுத்தல், தாக்குதல் அதிகரிப்பு

* பின்னணியில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிரேமகுமார் குணரட்ணம்?

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர் குழுவினர் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள அதேநேரம், அவர்களது வாகனங்கள் சிலவும் கடத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் விஷேட உரையொன்றை ஆற்றியதையடுத்து, அவருடன் மேலும் பத்து எம்.பி.க்கள் இணையவே ஜே.வி.பி. இரண்டாகப் பிளவடைந்தது.

இதையடுத்து, அன்று பிற்பகல் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில், விமல் வீரவன்ச தலைமையிலான அதிருப்தியாளர் குழு நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. எம்.பியான ரனவீர பத்திரன குழப்பம் விளைவித்ததாக பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளிருக்கும் பாராளுமன்றத்தின் வாகனத் தரிப்பிடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டிருந்த இரு ஜே.வி.பி. அதிருப்தியாளர்களின் வாகனங்கள் இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் கடத்திச் செல்லப்பட்டது.

அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டே இரு எம்.பி.க்களது வாகனங்களும் கராஜிலிருந்து துணிகரமாகக் கடத்திச் செல்லப்பட்டன.

அதிருப்தியாளர் குழுவின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான பியசிறி விஜயநாயக்கவின் `ரொயோற்ரா டபிள்கெப்' ரக வாகனமும் இரத்தினபுரி மாவட்ட எம்.பி.யான அச்சல சுரங்க ஜாகொடவின் ்ரொயோற்ராீ ரக வாகனமுமே கடத்திச் செல்லப்பட்டன.

இவ்விரு வாகனங்களும் கடத்தப்பட்ட போது, பாராளுமன்ற கராஜிலிருந்த பொலிஸார் இதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும், இவற்றை கடத்தியோர் பொலிஸாரை மிகக் கடுமையாகத் தாக்கிவிட்டே இரு வாகனங்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடமும் பாராளுமன்ற பொலிஸாரிடமும் வெலிக்கடை பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் முறைப்பாடு செய்தனர்.

ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜெயந்த விஜயசேகர தலைமையிலான குழுவே இந்த வாகனக் கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் இவர்கள் தங்கள் முறைப்பாடுகளில் தெரிவித்திருந்தனர்.

இவ்வேளையில், ஜே.வி.பி. யின் மாத்தளை மாவட்ட எம்.பி.யும் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்தவருமான சுஜாதா அழகக் கோனின் வாகனமும் பாராளுமன்ற கராஜிலிருந்து சாரதியுடன் காணாமல் போனது.

இந்த நிலையில், அதிருப்தியாளர் குழுவில் ஒருவரான புத்தளம் மாவட்ட எம்.பி.யான சமன்சிறி ஹேரத்தின் ஆராச்சிக் கட்டுவ கலாவத்த வீட்டிற்கு நேற்று முன்தினமிரவு சென்ற 25 பேர் கொண்ட கோஷ்டியொன்று கட்சியில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக சமன்சிறி ஹேரத்துடன் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கு பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.

இவ்வேளையில் அந்த ஜே.வி.பி. ஆதரவாளர் குழு சமன்சிறி ஹேரத் எம்.பி.யை வெளியே இழுத்து வரமுற்பட்டபோது அவரது பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த இரு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் அவரைப் பாதுகாக்க முற்பட்டபோது அவ்விருவரிடமுமிருந்த இரு ரிவோல்வர் துப்பாக்கிகளையும் அவற்றுக் குரிய ரவைகளையும் பறித்தெடுத்தனர்.

இதன்பின் எம்.பி.யிடம் வாகனச் சாவியை தருமாறு கேட்டபோது அவர் மறுத்துவிடவே, வாகனச் சாவியை வைத்திருந்த சாரதியை கடுமையாகத் தாக்கிய அவர்கள் அவரிடமிருந்த சாவியை அபகரித்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி பின்னர் புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்திலும் பாராளுமன்ற சபாநாயகரிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜே.வி.பி. அதிருப்தியாளர் குழுவுக்கு எதிராக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான பிரேமகுமார் குணரட்ணம் என்பவரே செயற்படுவதாக அதிருப்தியாளர் எம்.பி.க்கள். தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

பிரேமகுமார் குணரட்ணம் முன்னர் கட்சியின் மிக முக்கிய தலைவராவார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்ததாகவும் இவரே இந்த மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியிலிருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் இவர், இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் இணைப்பாளராகச் செயற்பட்டவரெனவும் அந்த இணையத் தளங்கள் தெரிவித்துள்ளன.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.