Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வி நிலையென நினைத்தால்

Featured Replies

இந்தப் பாடலை நான் சிறுவயதில் (தாயகத்தில்) கேட்டிருக்கிறேன். அடிக்கடி பக்கத்து கடையில் (பெரும்பாலும் இரவு வேளைகளில்) ஒலித்துக்கொண்டிருக்கும். இந்தப் பாடலை கேட்க்கும்போது மனதில் பெரும் உற்சாகம் தோன்றும்.

இதில் வரும் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.

தங்கை யமுனா கேட்டதிற்க்கிணங்க ஒரு பாடல்:

தாங்ஸ் அண்ணா..(நேக்கு இந்த பாட்டு நன்னா பிடித்திருக்கு)...ஜ லைக் டிஸ்.. :D .

அப்ப நான் வரட்டா!!

நல்ல வரிகள். பாடல் இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி நிலையென நினைத்தால் இங்கை ஒரு சுற்று போய்ட்டு வாங்கோ....

http://www.brightcove.tv/title.jsp?title=1438490562

சபேஸ் இந்த வீடியோவ பார்க்க பயங்கரமா இருக்கிது. சைட்டில கயிறு இருக்கிது. என்டாலும் நிறைய இடங்களில பிடிக்கிறதுக்கு ஒண்டும் இல்ல. விழுந்தால் எழும்பும்கள பொறுகித்தான் எடுக்கவேணும். நல்ல துணிவு உள்ள அல்லது மண்டை கழன்ட ஆள் போல இருக்கிது அந்த வீடியோவ எடுத்தவர். தோல்வி வந்தால் இப்பிடியும் செய்யலாமோ? அது எந்த இடம்? யூரோப் போல? பழைய அரண்மனை ஏதுமோ?

இந்தப் பாடலை ஈழ விடுதலை இயக்க மொன்றுக்காக எழுதியவர் கவிஞர் மேத்தா.இசையமைத்தவர் ஜெமினி ஒளிப்பதிவுநிலைத்தின் பிரதான ஒலிப்பதிவு பொறியியலாளராக இருந்த கர்நாடக சங்கீத வித்துவான் ரகுநாதன் என்பவர். 1984 ம் ஆண்டு இதை ஒலிப்பதிவு செய்வித்தவர் எனது கணவர். இந்தப் பாடல் ஊமைவிழிகள் இயக்குனருக்கு பிடித்துவிட்டதால் அந்த ஈழ விடுதலை இயக்திடமிருந்து அந்தப் பாடலின் உரிமையை அவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டார். எனது கணவர் தமிழகத்திலிருந்து அப்போது நடத்திய தமிழீழத்தின் குரல் வானொலியில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வந்தது

யார் உங்கள் கணவர்!

இப் பாடலின் பின்னணி எனக்குத் தெரியும்.

நான் ஆபாவாணனுடன் நெருக்கமானவன்.

அவர்களுடன் பணிபுரிந்தவன்.

தமிழீழத்தின் குரல் வானோலியிலும் (1985) இருந்தவன்.

சிங்கப்பூர் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தில் இருந்து

1983 கலவரத்தை பார்த்த பின்

சிங்கப்பூரிலிருந்து 1984ல் இயக்கத்துக்கு வந்தவன்.

ஒலிப்பதிவு : சிங்கள வானோலி மற்றும் தமிழீழ தொலைக் காட்சியின் பொறுப்பாளன்.

இயக்க ஒளிப்பதிவுகளை நான்தான் செய்தேன்.

MGR அவர்களால் அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பை பெற்றவன்.

என் இயக்க பெயர் பிரசாத்

அல்லது

vote பிரசாத் (voice of tamileelam)

அல்லது

நிக்கவெரட்டிய பிரசாத். ( தென்பகுதி தாக்குதல் காரணமான பெயர்)

திரைப்பட மாணவர்களின் முதல் புரட்சி படைப்பு ஊமைவிழிகள்.

இந்த பாடலுக்கும் ஈழவிடுதலை இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அந்தக் கதையில் வரும் காட்சி ஒன்றுக்காக எழுதப்பட்டு 300ரூபாய் கொடுத்து

பீபீ.சிறீணிவாஸ் அவர்கள் பாடிய பாடல் அது.

தமிழீழ விடுதலைக் கழகம்

1985ல் HMV ரகு அவர்களை வைத்து

ஒரு ஒலி நாடா ஒன்றை வெளியிட்டது.

அதற்காக அவரது வீட்டின் மேல் மாடியில் ஒலிப்பதிவு கூடம் ஒன்றை உருவாக்கியது.

(பிரசாத் ஸ்டூடியோ பின்னால் ஒலிப்பதிவாளர் ரகு அவர்களது வீடு)

1977 தேர்தல் காலத்தில்

நாளை நமதே! இந்த நாளும் நமதே எனும் பாடல் போல

தமிழீழத்தின் குரலில்

தோல்வி நிலையென நினைத்தால் பாடல் ஒலித்த போது

அது இயக்கப் பாடல் என்றே பலர் நினைத்தார்கள்.

அக் காலத்தில் ஆபா(சின்னா) தமிழீழ ஆதரவாளராக இருந்தார்.

இப் பாடல் கூட சென்னை ராகம் மியுஸிகல் வழிதான் எமக்கு கிடைத்தது.

தமிழீழத்தின் குரல் வானோலியின் ஒலிப்பதிவு கூடம்

அங்குதான் (பாரிநகர்) காசி திரையரங்குக்கு அருகாமையில் இருந்தது.

பின்னர் ஒலிப்பதிவு கூடம்

சென்னை கே.கே.நகரிலுள்ள 8வது செக்டருக்கு மாற்றப்பட்டது.

அக் காலத்தில்தான் சந்ததியார் வடபழனியில் அகப்பட்டு கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் தமிழீழத்தின் குரல்

தஞசாவூர் டீ.ராஜேந்தருடைய வீட்டுக்கு மாறியது.

அங்கிருந்துதான் தோழர்கள்

இயக்கத்தை விட்டு அறிக்கை ஒன்றை விடுத்து வெளியேறியது.

ஜெயபாலன் அண்ணாவுக்கு நினைவிருக்கலாம்

அம்மன் கோவில் பகுதியில் இருந்த MGR சத்துணவு திட்ட மண்டபத்தில்

நடந்த T3S விழாவில் "கோலங்கள்" என ஒரு நாடகத்தை மேடையேற்றினேன்.

அந்த நாடகத்தின் இறுதியில் நான் இப் பாடலை நண்பர்களோடு பாடினேன்.

நாம் ஒற்றுமையாக இணையும் வரை

நமக்கு நாம்தான் எதிரி என்பது அதன் கரு!

பலர் கேட்டார்கள் இது இயக்கத்தின்

உள்ளே உள்ள பிரச்சனையை சொல்லும் கருவா?

அல்லது

இயக்கங்களின் பிரிவை சொல்லும் கருவா என்று கேட்டார்கள்?

நான்"தொப்பி அளவு என்றால் போட்டுக் கொள்ளலாம்"என்றேன்.

அது இன்னமும் இங்கும் தொடருகிறது.

வேதனைதான்.

இந்திய திரைப்பட மாணவர்கள் இன்றும் என் நண்பர்கள்.

எனவே இப் பாடல் இயக்கப் பாடல் அல்ல.

பாடலை எழுதியவர் ஆபாவாணன்.(சின்னா)

இயற்பெயர் சின்னசாமி

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.