Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது

ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த மகளையே வீட்டில் வருடக்கணக்கில் பூட்டி வைத்து கொடுமை புரிந்த நபர் கைது செய்யப்பட்டார். பரபரப்பான இந்தச் சம்பவத்தைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர் ஜோசப் ப்ரிஸ்ல் (Josef Fritzl). வயது 73. இவரது மனைவி மற்றும் ஏழு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் எலிசபெத் என்ற மகளை அவரது பத்தாம் வயதிலிருந்து ஜோசப் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தி வந்துள்ளார். பின்னர் 28/08/1984 அன்று அப்போது 18 வயது ஆகியிருந்த எலிசபெத்தை வீட்டின் கீழ் தளத்துக்கு வரவழைத்து அங்கிருந்த ஜன்னல்கள் அற்ற அறையில் நிரந்தரமாக அடைத்து வைத்துவிட்டார். தனது மனைவியிடம் எலிசபெத் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறியிருக்கிறார். பின்னர் மகள் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காட்டி அதில் தன்னை யாரும் தேட வேண்டம் என்று கூறப்பட்டுள்ளதாக எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறார்.

ஜோசப்பினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட எலிசபெத் இதுவரை 7 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவற்றுள் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. அதை யாருக்கும் தெரியாமல் ஜோசப் எரித்துவிட்டார். மூன்று குழந்தைகளை எலிசபெத் தன்னை வளர்க்கும்படி கொடுத்தனுப்பியதாக கூறி மனைவியிடம் ஒப்படைத்திருக்கிறார். மீதி மூன்று குழந்தைகளும் வெளி உலகைக் காணாமலே வளர்ந்திருக்கின்றன. இவ்வளவும் மேல் தளத்தில் வசித்து வந்த அவரது மனைவி மற்றும் ஏனைய குழந்தைகளுக்கு தெரியாமல் நடந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் ஒரு குழந்தைக்கு உடல் நலம் குன்றியதால் ஜோசப் அக்குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். குழந்தையின் தாயைப் பற்றிய கேள்விகளில் தொடங்கி சந்தேகங்கள் ஏற்பட்டதால் காவல்துறையினரின் தேடுதலில் எலிசபெத்தும் அவரது ஏனைய குழந்தைகளும் மீட்கப்பட்டனர். ஜோசப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது குற்றங்களுக்கு 15 முதல் 20 வருடங்கள் வரையிலான தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூலம்: கனேடிய ஒரிபரப்புக் கூட்டுத்தாபனம்

ம்ம்..என்ன கொடுமை கறுப்பி அக்கா..(முடியல :wub: )..லோகத்தில இப்படியும் ஆண்களா??..(எங்க உந்த பக்கம் நெடுக்ஸ் தாத்தாவை காணவே இல்ல).. :wub:

சா..சா தன்ட மகளை இப்படியா செய்யிறது..(ஜ கேர்ட் டிஸ் பிளடி மேல்ஸ் :unsure: )...இதுக்காக எல்லா ஆண்களையும் நான் பிழை சொல்ல மாட்டன் நல்லவாவும் லோகத்தில இருக்கீனம் பாருங்கோ.. :(

எழுபத்தி மூன்று வயசில கிழடின்ட லொள்ள பாரு...(பாவம் பெண்கள் பூவை போல அவர்கள்)..இப்படி கசக்க கூடாது பாருங்கோ :lol: இப்படி எல்லாம் பிளடி மேல்ஸ் செய்யிற படியா தான் அவையும் ரிவேஞ் எடுக்க ஏதோ எல்லாம் செய்யீனம் பாருங்கோ..(நான் சொல்லுறது சரி தானே கறுப்பி அக்கா).. :(

அதுக்காக பெண்கள் எல்லாம் அப்பாவிகள் என்று சொல்ல வரல்ல..(இந்த பூனையும் மில்க் குடிக்குமா என்று இருந்து கொண்டு பியரே குடிக்கிற ஆட்கள் உவையள் :wub: )..ஆனாலும் லோகத்தில இப்படியான மேல்ஸை எல்லாம் பார்க்கிற போது நேக்கு மேல்ஸை கண்டாலே அலர்ஜியா இருக்கு பாருங்கோ.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆண்கள் லூட்டி அடித்தா அது பம்பல் பெண்கள் அடித்தால் அது அசிங்கம் இது தான் லோகம்" :)

அப்ப நான் வரட்டா!!

அட பாவமே இபப்டியுமா? அசிங்கமான ஆண்கள். பாவம் பெண்கள்.

அதுசரி நிலவறை என்றால் என்ன மாதிரி இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

*** எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

Edited by வலைஞன்

24 வருடமாக அந்த பொண்ணுக்கு மனநோயோ தெரியலை. மோசமான ஆண்களும் பெண்களும் இருக்கும்வரையில் இருவருக்கும் துன்பங்கள் தான்.

நிலவறைக்கான படத்துடன் கூடிய விளக்கத்துக்கு நன்றிகள்

இது நம்ப முடியாத ஒருவிடயம். இத்தனை வருடங்களாக அவருடைய மனைவிக்குமு; தெரியவில்லை என்றால் என்ன படமா கதையா ? உணவு மற்றைய தேவைகள். . . எல்லாம் றீல்.. . மனைவியும் உடந்தை என்றுதான் நினைக்கின்றேன். எல்லோரும் உடந்தை பின்பு கதையை மாற்றுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9136643__kg-kerker-1209384930.jpg

இவன் தான் அந்த கொடூர காமுகன்.அத்துடன் அவன் தனது மகளை அடைத்து வைத்த நிலவறை.

austria4-404_666699c.jpg

தாய்லாந்துக்கு சல்லாபம் செய்ய சென்ற பூரிப்பில் கிழட்டுக்காமுகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.