Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம்

Featured Replies

பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம்

Friday, 02 May 2008

பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பிடம் எனவும் வதிவிடம் எல்லப்பர் மருதங்குளம், வவுனியா எனவும் குறிப்பிடப்பட்டள்ளது. அந்த அடையாள அட்டை அரசினால் வழங்கப்பட்டது அல்ல அது போலியான ஓன்று எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை குண்டு வெடிப்புக்கும், த.மு.தஸனாயக்காவை ஜாஎலவில் வைத்து கொலை செய்ய வைத்த குண்டு வெடிப்புக்கும் , கட்டுநாயக்க தாக்குதலுக்கு (2000) ஆயுத விநியோகம் செய்தவர் என தேடி வந்த அப்பன் இவரா என போலீஸ் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

40 தற்கொலைதாரிகளை கொழும்புக்கு கொண்டு வர தாம் உடந்தையாக இருந்தாகவும், செட்டித் தெருவிலுள்ள மினிபன் விடுதியில் சில பெண்களை தான் கண்டதாக அப்பனது கைதுக்கு பின்னர் மனைவியோடு சென்று பிலியன்தலை போலீஸில் சரணடைந்த தேவேந்தரன் சின்னையா எனும் மஞ்சுல போலீஸாரிடம் தெரிவத்துள்ளார்.

கொழும்பை வதிவிடமாகக் கொண்ட தேவேந்தரன் சின்னையாவின் மூத்த சகோதரர்களான இராஜேந்தரன் மகேஸ் மற்றும் விஜேந்திரன் கிறிஸ்டோபர் சின்னையா ஆகியோர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என போலீஸாருக்கு இப்போது தெரிய வந்துள்ளது.

விஜேந்திரன் கிறிஸ்டோப்பர் கிளிநொச்சியில் வசிப்பதாகவும், இராஜேந்தரன் மகேஸ் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை போலீஸ் பெண் காண்ஸ்டபிள் ஒருவருடன் சேர்ந்து கடத்தும் போது வீரகுல போலீஸாரால் கைதாகி சிறையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்காக கொழும்புக்கு கொண்டு வந்த ஆயுதங்களை பாதாள கோஸ்டியில் உள்ள கழு துஸார, நாவல நிகால், அட்ட இந்திக்க, பிந்து மற்றும் கம்பக டெனிம் சாந்த ஆகியோருக்கு விற்பதற்கு இராஜேந்தரனான தனது சகோதரனுக்கு உதவியதாக தேவேந்திரன் போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனுடன் இரு முறை கிளிநொச்சிக்கு சென்று வந்ததாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தீபனை தாம் சந்தித்தாகவும், குண்டுகளை வைப்பதற்கான விபரங்களை சேகரிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களோடு சென்றுள்ளதாகவும் அதற்காக விடுதலைப் புலிகளால் தனக்கு பணம் தரப்பட்டதாகவும் தேவேந்திரன் சின்னையா போலீசாருக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/2377/1/

தனது சகோதரனுடன் இரு முறை கிளிநொச்சிக்கு சென்று வந்ததாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தீபனை தாம் சந்தித்தாகவும், குண்டுகளை வைப்பதற்கான விபரங்களை சேகரிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களோடு சென்றுள்ளதாகவும் அதற்காக விடுதலைப் புலிகளால் தனக்கு பணம் தரப்பட்டதாகவும் தேவேந்திரன் சின்னையா போலீசாருக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இதை எந்த காமடி தளத்திலை சுட்டனீங்கள்....!! செம கடியா இருக்கே... :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி....ஹி....ஹிp....ஹீ...........................................

.....................

உதுக்ளுக்குள ஒண்டுக்கு அல்லது ஒண்டுக்கு மேற்பட்டதுகளுக்கு

சிலவேளை அனைவருக்கும் மறை களடு இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

பிலயன்தலை குண்டு வெடிப்பில் கைதானவரிடமிருந்து கசிந்துள்ள விபரங்கள்

Saturday, 03 May 2008

பிலயன்தலை குண்டு வெடிப்பில் கைதான சச்சியானந்தன் என்பவர், சிங்கள இளைஞர் ஒருவரது பெயரில் பிலியன்தலையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் 1லட்சத்தி 25 ஆயிரம் ரூபாயை முன் பணமாக ஒரு சிங்கள பெண்ணுக்கு கொடுத்தே அந்த வீட்டை பெற்றுள்ளார்.

லோரன்ஸ் டேவிட் பிரகாஸ் எனும் பெயரில் உலவிய இவரது உண்மையான பெயர் சச்சியானந்தன் ஆனந்தன் சுதாகரன் என்றும் ச 2212 இலக்கத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் பதிவுகளில் பெயர் பதியப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

http://www.ajeevan.ch/content/view/2381/1/

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு தண்ணி எங்காவது இருக்கா? :blink::blink::blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.