Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி

[04 - May - 2008]

-விதுரன் -

அரசும் படைத்தரப்பும் நினைத்ததற்கும் மாறாகவே வடக்கே களநிலையுள்ளது. விடுதலைப்புலிகள் பலமாகவேயுள்ளனர். புலிகளின் திட்டமிடலும் பதில் தாக்குதல்களும் படையினரின் தாக்குதல் திட்டங்களை தவிடுபொடியாக்குகின்றன. இதனால், புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் படைத்தரப்புள்ளது.

வடக்கே புலிகளுக்கெதிரான படைநடவடிக்கை வெற்றிகரமாக நடப்பது போன்றும் அங்கு தினமும் புலிகள் பெருமளவில் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் படையினருக்கு மிகமிகக் குறைந்தளவு இழப்புக்களே ஏற்படுவது போல் தென்பகுதி மக்களை நம்பவைக்க அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. எனினும், அங்கு களநிலை வேறாகவே உள்ளதை தென்பகுதி மக்கள் நன்குணரத் தொடங்கிவிட்டனர்.

ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றபின் நடைபெற்ற போரில் 9,000 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 700 படையினர் கொல்லப்பட்டும் 2,400 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவ தரப்பை ஆதாரம் காட்டி ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது வட பகுதி களமுனையில் என்ன நடக்கிறதென்பதை தென்பகுதிக்கு ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கும்.

யாழ். குடாநாட்டில், கிளாலி மற்றும் முகமாலையில் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவு பாரதூரமானது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் நிலையில் யாழ். குடாவிலிருந்து பளை மற்றும் ஆனையிறவு நோக்கிய பாரிய முன்நகர்வு முயற்சி மீண்டுமொருமுறை படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. படையினரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக புலிகளின் பதில் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்துள்ளது. புலிகள், ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் படையினர் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களது ஆயுதக் கையிருப்பு மிக மோசமாக இருப்பதாக கூறிவந்த படையினர், வன்னிக் களமுனை எதிர்பார்த்ததற்கும் மாறாயிருப்பதால் பாகிஸ்தானிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் அவசர அவசரமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதேநேரம், புலிகளும் தாராளமாக ஆயுதங்களை தருவிப்பது படைத்தரப்புக்கு வன்னிக் களமுனையில் மிக மோசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

மடு தேவாலயம் ஒரு இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இல்லாத போதும் அரசியல் நோக்கங்களுக்காக அது கைப்பற்றப்பட்டது. எனினும், மடுமாதாவின் திருச்சொரூபமில்லாத ஆலயத்தை கைப்பற்றிவிட்டு அடுத்த என்ன செய்வதெனத் தெரியாது படையினர் தடுமாறுகின்றனர்.

வன்னிக் களமுனையிலும் யாழ். குடா முன்னரங்க நிலைகளிலும் புலிகளின் பதில் நடவடிக்கைகள் மிகவும் பலமாகவேயுள்ளது. அவர்களது ஆயுத பலம் அங்கு படைத் தரப்புக்கு தினமும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வடபகுதி போர்முனையில் வெற்றிபெறுவதாயின் விடுதலைப்புலிகளின் விநியோகப் பாதைகளை தடை செய்ய வேண்டுமென்றதொரு நிலை படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மேற்கே மன்னார் முதல் கிளாலி வரையான சிறு கடல் பகுதியையும் கிழக்கே கொக்குத்தொடுவாய் முதல் நாயாறு வரையான பெருங்கடல் பகுதியையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரவேண்டிய கட்டாய தேவையுள்ளது. இவ்விரு கடல் பரப்பையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதாயின் அதனோடிருக்கும் தரைப் பகுதிகளை முதலில் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.

இதன்மூலமே அந்தக் கடற்பரப்புகளையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விடுதலைப்புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

மேற்கே மன்னார் கடற்பரப்பை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக கடந்த வருட பிற்பகுதியில் மன்னாருக்கு தெற்கே மன்னார் முதல் சிலாவத்துறை வரையான கரையோரப் பகுதியை கைப்பற்றிய படையினர் அப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை நிறுத்தினர். தெற்கிலிருந்து புத்தளம் கடற்பரப்பினூடாக புலிகள் சிலாவத்துறை கரையிலிருந்தே செயற்பட்டு வந்தனர். முதலில் இதனைத் தடுத்து நிறுத்தி தென்பகுதியுடனான புலிகளின் கடல்வழி விநியோகத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்காகவே, மன்னாரிலிருந்து சிலாவத்துறை ஊடாக கொண்டச்சி வரையான கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.

இந்தப் பகுதிகளைக் கைப்பற்றமுன்னர் வன்னியிலிருந்து புலிகள் சிலாவத்துறை, கொண்டச்சி ஊடாகவே அநுராதபுரம் மாவட்டத்தின் வில்பத்து காட்டினுள் நுழைந்து அங்கிருந்து செயற்பட்டு வந்ததுடன் அங்கிருந்து தென்பகுதிக்குள்ளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வந்ததாக படைத்தரப்பு கருதியது. இதனால், மன்னாருக்கு தெற்கே சிலாவத்துறை, கொண்டச்சி பகுதிகளை கைப்பற்றியதன் மூலம் தென்பகுதியூடான புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுத்து நிறுத்தியதாகக் கருதிய படைத்தரப்பு, மன்னாருக்கு வடக்கே கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவுக்கும் வன்னிக்குமிடையிலான கடல்வழி விநியோகப் பாதையை தடுத்துநிறுத்த முயல்கிறது.

இதேநேரம், கிழக்கு கடல் பரப்பூடாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வருவதால் முல்லைத்தீவு கடல் பரப்பை முழுமையாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்திவிடலாமென படையினர் கருதுகின்றனர். இதனால் தான், முகமாலையில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து படையினரின் கவனம் தற்போது மணலாறு பகுதிக்கு திரும்பியுள்ளது. மணலாறிலிருந்து கரையோரமாக முல்லைத்தீவு நோக்கிய நகர்வானது, புலிகளின் கோட்டைக்குள் நுழைவதென்பதுடன் புலிகளின் கடலாதிக்கத்தையும் இல்லாது செய்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

படையினரின் இந்த நோக்கங்களை புலிகளும் அறிவர். இதனால்தான், மன்னாருக்கு வடக்கே கரையோரப் பகுதி நோக்கிய பாரிய படைநகர்வுக்கெதிராக கடும் தாக்குதலைத் தொடுப்பது போல் மணலாறு பகுதியிலும் படையினரின் பாரிய படை நகர்வு முயற்சியை தடுத்து நிறுத்துவதில் புலிகள் மிகத் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக மணலாறு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே மிகக் கடும் சமர் நடைபெற்று வருகிறது. இந்தக் களமுனையில் படையினரின் ஆட்லறித் தளங்களையும் மோட்டார் நிலைகளையும் அழிப்பதில் புலிகள் தீவிரம் காட்டுகின்றனர்.

கடந்த 30 ஆம் திகதி இங்கு கடும் சமர் நடைபெற்றுள்ளது. பல மணிநேரம் நடைபெற்ற இந்தக் கடும் சமரில் 40 படையினர் வரை கொல்லப்பட்டும் 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் புலிகள் இரு மோட்டார் தளங்கள் எரிந்தும் ஆட்லறித் தளமொன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வன்னியில் மன்னார் களமுனை போலன்றி மணலாறும் வவுனியாவும் அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் இந்தக் களமுனைகள், தாக்குதல் சமரில் ஈடுபடுபவர்களை விட தற்காப்புச் சமரில் ஈடுபடுவோருக்கே வாய்ப்பாக உள்ளது.

மணலாறு பகுதியில் பிரிகேடியர் நந்தன உடவத்தவை கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது படையணி முன்நகர்வு முயற்சியில் ஈடுபடுகிறது. இவர்களுக்குப் பின்னால் விஷேட அதிரடிப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து வாபஸ் பெறப்பட்ட அதிரடிப் படையினர், மணலாறில் இராணுவத்தினருக்கு வலுச் சேர்க்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் களமுனையை தற்போது படையினர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர்.

தரையில் முன்நகர்வு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் கடற்பரப்பை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயலும் படைத்தரப்புக்கு இங்கு கடற்புலிகளும் சிம்மசொப்பனமாயுள்ளனர். இதனால், கடற்பரப்பில் கடற் புலிகளை எதிர்கொள்வதில் பேராபத்துள்ளதை உணர்ந்த படையினர் கடற்புலிகளின் தாக்குதல் படகுகளை கரையோரத்திலேயே அழித்துவிட வேண்டுமென்பதற்காக தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல மீன்பிடிப் படகுகள் அழிந்து போனதுடன் கரையோரப் பகுதியில் மீனவர் குடியிருப்புக்களும் அழிந்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி நாயாறு கடற் பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று கடற்புலிகளால் அழிக்கப்பட்டது. வழமையான தற்கொலைப் படகுத் தாக்குதல் மூலமே இந்தப் படகு அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் கூறினாலும் கடற்படையினர் இதனை முற்றாக மறுக்கின்றனர். இது கடல் மட்டத்திற்கு மேலான தாக்குதலல்ல எனக் கூறும் கடற்படையினர் கடலடித் தாக்குதல் மூலமே இந்த டோரா மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். எனினும், இத்தாக்குதல் எப்படி நடத்தப்பட்டதென இன்று வரை கடற்படையினரால் உறுதியாகக் கூறமுடியாத நிலையுள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து அந்தக் கடற்பரப்பில் சிதைந்த நிலையில் பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டதால், இது கடலுக்கடியிலான தற்கொலைத் தாக்குதலாயிருக்க வேண்டுமெனப் படையினர் கருதினாலும் அது எவ்வகையான தாக்குதலென அறிய முடியாது தடுமாறுகின்றனர்.

அத்துடன், தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையினர் நீண்ட தூரத்திலிருந்தே கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். கரையை நெருங்கிச் செல்வதில்லை. மீண்டுமொரு தாக்குதலுக்கிலக்காகலாமென்ற அச்சம் கடற்படையினருக்குள்ளது.

முல்லைத்தீவு நோக்கிய படையினரின் நகர்வையும் முல்லைத்தீவு கடலில் ஆதிக்கம் செலுத்த முயலும் கடற்படையினரின் நடவடிக்கையையும் விடுதலைப்புலிகள் மிகவும் பாரதூரமாகவே கருதுகின்றனர். கடற்படையினருக்கெதிராக கடலடித் தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகள், மணலாறு பகுதியில் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்ளும் படையினருக்கெதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதனொரு நடவடிக்கையாகவே அவர்கள் கடந்த 27 ஆம் திகதி அதிகாலை மணலாறில் படைநிலைகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

படையினரின் ஆட்லறி நிலைகளையும் பல்குழல் ரொக்கட் நிலைகளையும் இலக்குவைத்தே புலிகளின் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு கூறுகின்றது. புலிகளின் விமானிகள் இரவுநேரப் பார்வைக் கண்ணாடிகளை அணிந்திருந்ததாகவும் எனினும் ஆட்லறி நிலைகளும் பல்குழல் ரொக்கட் நிலைகளும் நன்றாக மறைக்கப்பட்டிருந்ததாலும் எங்கும் இருள்மயமாயிருந்ததாலும் புலிகளின் விமானத்தாக்குதல் இலக்குகளை அழிக்கவில்லையெனத் படைத்தரப்பு கூறுகின்றது.

அதேநேரம், தாக்குதலை நடத்திய புலிகளின் விமானங்களை படையினரால் தாக்க முடியாது போனதுடன் விமானப் படையினரின் `வழி மறிப்பு' விமானங்களாலும் புலிகளின் விமானங்களை வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியவில்லை. இது, படையினரின் வான் பாதுகாப்புத் திட்டமானது தொடர்ந்தும் செயற்திறனற்றே இருக்கின்றதென்பதைக் காட்டுகிறது.

வான்புலிகள் இதுவரை ஐந்து தடவைகள் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்தவொரு தடவையும் வான்புலிகளை விமானப்படை விமானங்களால் வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியவில்லை. ஏனைய தாக்குதல்களை விட இந்தத் தாக்குதலுக்காக வான்புலிகள் எடுத்துக்கொண்ட தூரம் குறைவு. இதுவே, தங்களால் வான்புலிகளைத் தாக்க முடியாது போனமைக்கான காரணமென விமானப் படையினர் கூறுகின்றனர்.

புலிகளின் இரு விமானங்களும் மணலாறில் இலக்கை நெருங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வான்புலிகள் வருவது பற்றித் தெரிந்து விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டதாக விமானப் படையினர் கூறுகின்றனர். அநுராதபுரம் விமானப்படைத் தளத்திலிருந்து வை-7 ரக விமானம் வான்புலிகளை வழிமறிக்கச் சென்றபோதும் அவை மூன்று குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு வன்னிக்கு பாதுகாப்பாகத் திரும்பிச் சென்று தரையிறங்கிவிட்டன. எனினும், விமானப் படை விமானங்களால் அவற்றை வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியாது போனதுடன் வான்புலிகள் தரையிறங்கும் நேரத்திலாவது குண்டுவீச்சு விமானங்களால் அவற்றைத் தாக்கி அழிக்க முடியாது போனதுடன் அவை தரையிறங்கிய இடத்தைக் கூட அடையாளம் காண முடியாது போய்விட்டது.

மணலாறு களமுனையில் புலிகள் வான் தாக்குதலை நடத்துகின்றார்களென்றால் அந்தக் களமுனையின் தீவிரத் தன்மையை உணரமுடியும். அத்துடன், மணலாறில் மோதல்கள் உச்சநிலையை அடையப்போவதும் உறுதியாகியுள்ளது. வன்னியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறும் போரில் புலிகள் தொடர்ந்தும் தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருகின்றனர். படையினரே தாக்குதல் சமரில் ஈடுபடுகின்றனர். களநிலைமைக்கேற்ப புலிகள் தாக்குதல் சமரை நடத்த முனையலாமெனவும் படைத்தரப்பு எதிர்பார்க்கின்றது.

முகமாலையில் ஏற்பட்ட பாரிய பின்னடைவால் குடாநாட்டு கள முனையில் படையினர் உடனடியாக மீண்டுமொரு தாக்குதல் சமருக்குத் தயாராகமாட்டார்களென்றே கருதப்படுகிறது. இதனால், வன்னியில் மன்னார், மணலாறு களமுனைகளிலேயே கடும் மோதல்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மன்னாரில் கூட மடு தேவாலயப் பகுதிக்கு படையினர் சென்றுவிட்டதால் இனி அவர்களது படைநகர்வு முயற்சி கரையோரப் பிரதேசங்களை நோக்கியதாகவே அமையக்கூடும். மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் தேவாலயத்திற்கு கொண்டு வர படையினர் மேற்கொண்ட முயற்சிகள், மறைமாவட்ட குருமார்களின் நிபந்தனைகளால் உடனடியாகச் சாத்தியமாகும் வாய்ப்பில்லையென்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகப் பாதைகளை தடை செய்வதே படையினரின் பிரதான இலக்காயுள்ளது. கடற்படையினர் பலம் குன்றியிருப்பதாலேயே விடுதலைப்புலிகள் கடல்வழியாக தங்கள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கரையோரப் பகுதிகளை தரைப்படையினர் கைப்பற்றி கடற்புலிகளின் கடல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலையுள்ளது. இதன் காரணமாகவே மன்னார்- பூநகரி வீதியை கைப்பற்றும் முயற்சியில் 58 ஆவது படையணி தீவிரமாக ஈடுபடவுள்ள அதேநேரம், கொக்குத்தொடுவாய் முதல் நாயாறு வரையான கரையோரத்தை கைப்பற்ற 59 ஆவது படையணி பாரிய தாக்குதல்களைத் தொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மணலாறு பகுதியில் முன்னேறிய படையினர் சுமார் இரு கிலோ மீற்றர் அகலத்திற்கு சுமார் 300 மீற்றர் தூரம் முன்னேறி நிலப் பகுதிகளை பிடித்து வைத்திருந்தனர். எனினும், கடந்த மாதம் 26 ஆம் திகதி இப்பகுதியில் இடம்பெற்ற கடும் சமர் மற்றும் 27 ஆம் திகதி நடைபெற்ற வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்கள் மூலம் அந்தப் பகுதிகள் மீண்டும் புலிகள் வசமாகிவிட்டதாகக் கூறப்படுவதுடன் இங்கு புலிகளும் தங்கள் தாக்குதல் அணிகளைக் களமிறக்கியுள்ளதுடன் புலிகளின் பீரங்கிப் படையணிகள் படையினரின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை இலக்கு வைத்து துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தி வருவதால் படையினர் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன்னார் கடற் பரப்பினூடானதும் முல்லைத்தீவு கடற்பரப்பினூடானதுமான புலிகளின் விநியோகப் பாதைகளை தடுத்து நிறுத்துவதினூடாகவே வன்னிப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனப் படைத்தரப்பு கருதுவதால் இவ்விரு பகுதிகளிலும் அடுத்துவரும் வாரங்களில் கடும் யுத்தம் வெடிக்கப்போகிறது. விடுதலைப்புலிகள் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களென்ப

முடிவு படையினருக்குப் பாரிய இழப்பினை மீண்டும் பெற்றுக் கொடுக்கப்போகின்றது என்பது திண்ணம். படையினரின் நகர்வு இந்தப்பிரதேசங்களை கைப்பற்றி முற்றுகையிடுவதுதான் என்பது அறிந்து கொள்ளப்பட்டபடியினால், அது தோல்வியிலேயே முடிவடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிதல்லவே. ஜே ஆர் ஜெயவர்த்தனா.. வன்னி உட்பட முழு இலங்கையையும் கட்டுப்பாட்டுக்க வைச்சிருக்கேக்கதானே புலிகள் போராட தேவையான ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்த்தவ..!

இந்தியப்படை வடக்கு கிழக்கை கட்டுப்பாட்டுக்க வைச்சிருக்கேக்க தானே புலிகள் வன்னிக்காட்டுக்க பலம் பெற்றவை..!

பிரேமதாச வன்னி கிழக்கு என்று கட்டுப்பாட்டுக்க வைச்சிருக்கேக்க தானே புலிகள் வன்னியை விடுவிக்கிற இராணுவ இலக்குகளை அழிக்கிற தாக்குதலை ஆரம்பிச்சவை.

சந்திரிக்கா அம்மையா மீண்டும் வன்னியைப் பிடிக்கத்தானே கிளிநொச்சி.. மாங்குளம்.. ஒட்டிசுட்டான் பள்ளமடு.. வரை போய் நின்றவா. அப்பவும் புலிகள் ஓயாத அலைகளா எழும்பினவை தானே.

இப்ப மகிந்த..??!

எவரும் களத்தில் உள்ள மக்களின் எண்ணவோட்டத்துக்கு தீர்வு தேடல்ல. மாறாக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் புலிகளை அழிச்சு ஒழிக்க முயன்றுதான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கினம். இதை எப்ப உணரினமோ அப்பதான் விடிவு.. சிறீலங்காவுக்கு..! :rolleyes:

அப்ப சிலங்காவுக்கு விடிவில்லை என்று சொல்லுறியலோ நெடுக்கர்?

:rolleyes::huh::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.