Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபாசமா?:

இந்துப் பெண் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகழ்பெற்ற ஓவியர் எஃப்.எம். உசேன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.

இந்து மதத்தின் கடவுள்களே ஆபாசத்தில் பிறந்து, ஆபாசத்தில் திளைக்கக் கூடியவைதான். அகலிகையை நிர்வாணமாக வரவேண்டும் என்று மும்மூர்த்திகள் கேட்கவில்லையா?

தன்முதுகில் இவ்வளவு அழுக்குப் பத்தைகளை வைத்துக்கொண்டு, ஓர் ஓவியர் இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் உண்டா?

உயர் நீதிமன்றம் தற்பொழுது இடையிடையே நல்ல தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ராமர் பால விடயத்தில் என்ன தீர்ப்பை வழங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

உயர் நீதிமன்றம் தற்பொழுது இடையிடையே நல்ல தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ராமர் பால விடயத்தில் என்ன தீர்ப்பை வழங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

ராமர் பால விவகாரத்தில் சு.சாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகளின் குறுக்கு விசாரணை திருப்தியளிக்கிறது. தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர் நீதிமன்றம் தற்பொழுது இடையிடையே நல்ல தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ராமர் பால விடயத்தில் என்ன தீர்ப்பை வழங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

வேறு பாதையில் செல்லமுடியுமா என ஆராயுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஏங்கோ படித்த நினைவு. கங்கை ஆறு புனிதமாக கருதப்படும் பொழுது அதன் மீது பாலம் கட்டியிருக்கப்படும் பொழுது இந்த யாருக்கும் உதவாத கடலுக்குள் இருக்கும் மண்திட்டை சற்று இடித்து போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்துவதில் என்ன சிக்கல் எனப் புரியவில்லை. கடவுள் மதங்கள் பெயரால் நடக்கும் சித்தரவதைகளுக்கு என்றைக்குதான் முடிவோ தெரியவில்லை. ஒருவேளை அந்த ஆண்டவனே இருந்தால் வெட்கித்தலை குனிந்திருப்பான் இந்த கேடுகெட்ட காண்டுமிராண்டிகளின் செயல்களினால்.

இந்து மதத்தில் ஆபாசங்கள் அதிகரித்ததற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.

சமணம் பௌத்தம் போன்ற துறவறத்தை போதிக்கின்ற மதங்கள் ஒரு நேரத்தில் பெரு வளர்ச்சி கண்டிருந்தன.

இந்து மதமும் "பிரம்மச்சாரிக் கடவுள்களை" முன்னிறுத்தி போட்டி போட முனைந்தது. சமணம் தமிழ்நாட்டில் வளர்ச்சியுற்றிருந்த போது, வடநாட்டில் இரண்டு மனைவிகளைக் கொண்ட பிள்ளையார் தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது, அங்கு சமணம் மேலோங்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியான முயற்சிகளோடு இந்து மதம் இன்னொரு முயற்சியிலும் இறங்கியது.

அதை சொல்வதற்கு முதல் இன்னொரு விடயம். யாழ் குடாவை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகள் அங்குள்ள இளைஞர்களை போராட்டத்தின் பாதையில் இருந்து திசை திருப்புவதற்கும், தம் பக்கம் இழுப்பதற்கும் ஆபாசப் படங்களை புழுங்க விட்டிருக்கிறது.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இதே போன்று சமணம், பௌத்தம் போன்றவைகளில் இருந்து மக்களை திருப்புவதற்கு ஆபாசத்தை இந்து மதம் பயன்படுத்திக் கொண்டது. ஏற்கனவே ஆபாசமாக இருந்தவைகளை மேலும் ஆபாசப்படுத்தியது. கோயிற் கோபுரங்களில் எல்லாம் ஆபாசக் காட்சிகள் இடம் பெறுவதற்கு காரணம், அன்றைக்கு அதன் மூலம் மக்களை தனது பக்கத்திற்கு இழுக்க முயன்றதே ஆகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயிற் கோபுரங்களில் எல்லாம் ஆபாசக் காட்சிகள் இடம் பெறுவதற்கு காரணம், அன்றைக்கு அதன் மூலம் மக்களை தனது பக்கத்திற்கு இழுக்க முயன்றதே ஆகும்.

ஈஷா யோகாமையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆனந்தவிகடன் என்ற பத்திரிக்கையில் இந்த கோவில் விசயத்திற்கு ஒரு உப்புசப்பில்லாத விளக்கம் கொடுத்திருக்கிறார். படித்தீர்களா?

இன்றைக்கும் கூட ஆபாச திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடும் திரையரங்குகளின் பெயர்கள் சாமி, ஜோதி என்றே இருக்கிறது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓவியர் அல்லாவையும்.. நபியையும் நக்கல் அடித்து வரைந்த ஓவியங்களுக்காக உலகெங்கும் வன்முறையில் ஈடுபட்ட முஸ்லீம்களைப் பார்த்து.. இதோ நபி.. ஆய்சாவுடன்.. என்று ஆபாச சித்திரம் வரைந்து காட்ட முடியுமா..???!

இந்து மதம் எப்பவும் விமர்சனங்களுக்கு எதிரான மதமல்ல. அது ஜனநாயகத்தன்மை மிகுந்த மதம். அதனால் விமர்சனங்கள் அதன் பால் வைப்பது இலகுவானது. கடிந்து கொள்ள இலகுவானது. ஆனால் அதுவே மக்களிடம் நம்பகத்தன்மையை அதிகரித்தது.

அதனால் தான் உலகின் மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 14% மக்களால் கடைப்பிடிக்கப்படும் மதமாக அது இருக்கிறது..! உலகின் 4 காவது பெரிய மதமும் அதுவாகும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.