Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி - கமல்

Featured Replies

ரவிச்சந்திரன் அறிமுகமாகி ஒரு துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். எம்ஜிஆர் பாணி படங்களிலும் நடித்தார். அவருக்கு "சின்ன வாத்தியார்" என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. எம்ஜிஆரை தமிழ்நாட்டு மக்கள் "வாத்தியார்" என்று அழைப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திமுக ஆதரவு நிலைகொண்டு இன்னொரு நடிகர் "சின்ன வாத்தியார்" என்ற பட்டத்தோடு வளர்ந்து வருவதை எம்ஜிஆர் ரசிக்கவில்லை.

ரவிச்சந்திரன் குட்டி எம்.ஜீ.ஆர் என்றே அழைக்கப்பட்டார். அந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தவர் காலஞ்சென்ற எழுத்தாளர் தமிழ்வாணன்! :D

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின்பு கலைஞர் கருணாநிதியின் உருவாக்கத்தில்ஒரு படம் வெளிவந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததால் பெரும்பாலான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயங்கினர். ஆனால் எம்ஜிஆருக்குப் பயப்படாமல், எம்ஜிஆருக்கு எதிரான வசனங்களைப் பேசி பாடல்களுக்கு வாயசைத்து அந்தப் படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். "வண்டிக்காரன்" என்ற அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் வண்டிக்காரன் அல்ல! வண்டிக்காரன் மகன். கலைஞரின் பூம்புகார் பிக்சர்ஸ் தயாரித்தது. அது ஒன்றும் பெரும் வெற்றிப்படம் அல்ல! :D

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

வெற்றிவேல் சொன்னது போன்று ஜெய்சங்கர் நடித்த திரைப்படத்தின் பெயர் "வண்டிக்காரன் மகன்" என்பதுதான். நான்தான் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.

ஆனால் ரவிச்சந்திரன் "சின்ன வாத்தியார்" என்று அழைக்கப்பட்டதாகத்தான் என்னுடைய அறிதல் இருக்கிறது. எதற்கும் தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறை நண்பர்களைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

சந்திரபாபு பற்றி தொரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். அவரின் படம் ஒன்று பார்த்திருந்தேன் மிக்க நல்லா இருந்தது. கேள்விபட்டிருக்குறேன் நல்ல நடிகர் பாடகர் பாட்டெலுத்தாளர் நாட்டியர் என்று.

பி.யூ.சின்னப்பா பற்றிய சில தகவல்கள்.

puchinnappa1cu5.jpg

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி புதுக்கோட்டையில் நாடகம் நடாத்தி வந்தது. அதில் கதா நாயகனாக சின்னப்பா நடிக்க, அவருக்கு சோடியாக பெண் வேடத்தில் நடித்தவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி சக்கரபாணியும் பி.யூ.சின்னப்பா நடித்த நாடகங்களில் சக நடிகர்களாக நடித்தார்.

சினிமாவில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்னப்பா புளியம்பட்டிக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும், பல ஊர்களில் எம்.ஆர். ஜானகியுடன் நிறைய நாடகங்களில் நடித்து விட்டு இந்தியா திரும்பினார்.

சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்தது இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே சின்னசாமி என்ற பெயர் சின்னப்பா வாக மாறியது.

1940 களில் வெளி வந்த உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடக்கதா நாயகனாக நடித்தார் சின்னப்பா.இப்படத்தில் இவரது நடிப்பும், பாடல்களும் மக்களை அதிகளவில் கவரவும் ,அவ்வருடத்தில் அதிக வசூலைத் தழுவிய படமாக உத்தம புத்திரன் படம் வந்ததினாலும் அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சிறந்த நடிகர் ஆக திகழ்ந்தார்.

மணோண்மணி என்ற படத்தின் மூலம் பாராட்டைப் பெற்றார் சின்னப்பா. இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.

பிருத்விராஜன் என்ற படத்தில் நடிக்கும் போது அதில் இவருடன் நடித்த ஏ.சகுந்தலா மீது காதல் கொண்டு 1944ல் திருமணம் செய்தார்.

கண்ணகி ,குபேரகுசேலர், அரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மகா மாயா,மங்கையர்கரசி போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.

35 வயதில் சின்னப்பா காலமானார். இவரது மகன் பி.யு.சி.ராஜபகதூர் கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார். அவரும் காலமாகிவிட்டார்.

சின்னப்பாவின் வாள்சண்டையிடும் முறை பிற்காலத்தில் எம்ஜிஆருக்கு முன்னோடியாகவும், உணர்ச்சிமிக்க நடிப்பும் திருத்தமான வசன உச்சரிப்பும் சிவாஜிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததாகவும், காதல் காட்சிகளில் அவர் காட்டிய சிருங்கார உணர்ச்சிகள், பிற்காலத்தில் ஜெமினிகணேசனுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததாகவும் திரைத்துறை விமர்சகர்களால் கூறப்படுவதால், சின்னப்பாவின் ஆளுமை என்பது, தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் இன்றளவும் தொடருவதாகவே கருதப்படுகிறது.

சந்திரபாபு பற்றி தொரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். அவரின் படம் ஒன்று பார்த்திருந்தேன் மிக்க நல்லா இருந்தது. கேள்விபட்டிருக்குறேன் நல்ல நடிகர் பாடகர் பாட்டெலுத்தாளர் நாட்டியர் என்று.

சந்திரபாபு - சில தகவல்கள்

chandrababurds2.jpg

முதல் படம் 1952ல் வெளிவந்த 'தன அமராவதி'. இறுதிப்படம் - பிள்ளைச் செல்வம்'.

'பிறக்கும் போதும் அழுகின்றாய்" என்ற பாடலின் ஆரம்பவரியினை கண்ணதாசனுக்கு எடுத்துக் கொடுத்தவர் சந்திரபாபு.

'சபாஷ் மீனா' படத்தில் கதா நாயகன் சிவாஜி அல்லது சந்திரபாபுவா எனக் கேட்குமளவிற்கு இரு கதாபத்திரங்களில் நடித்தார் சந்திரபாபு.

அப்போதைய திரை உலகில் அதிகளவு ஊதியம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. குமாரராஜா என்ற படத்துக்கு ஒரு இலட்சம் வாங்கி இருந்தார்.

கொழும்பில் பிறந்தவர் சந்திரபாபு. பெற்றோர் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

42 ஆம் அகவையில் அதிக குடிப்பழக்கத்தில் மூழ்கி இறந்தார்.

கண்ணீரும் புன்னகையும் என்ற இவரது வாழ்க்கை பற்றிய புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம்வெளிவந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.