Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சை வலியுறுத்தும் இந்தியா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகின்றது- அரியநேத்திரன்

Featured Replies

மனித உரிமை ஸ்தாபனம் ஒன்றை உள்நாட்டில் நிறுவுவதற்கே பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்து அதனை நிராகரித்த இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவையில் போட்டியிட்டமையானது அவமரியாதைக்குரிய செயலாகும். இவ்வாறு அடிமட்ட சிந்தனையுள்ள அரசை கொண்டியங்கும் ஒரு நாட்டை இதில் போட்டியிட வைத்தமையானது உலக நாடுகள் விட்ட பாரதூரமான தவறாகும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட எம்.பி. அறியநேத்திரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறுகின்ற இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில்; செயற்பட்டிபடுகிறது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : இலங்கையை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மலிந்து கிடக்கும் நாடாகவே உருவெடுத்து வருகின்றது. அனுதினமும் படுகொலைகள், வான் தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற மனித உரிமை மீறல்கள் அனைத்திற்கும் எமது தமிழீனமே இலக்காகி வருகின்றது.

மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்ற நாடுதான் இலங்கை இதனை வெளியுலகம் அறியாத நிலையில் இல்லை. இங்கு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வதைகளை நன்கு உணாந்திருக்கின்ற அனுபவித்திருக்கின்ற உலக நாடுகளின் கண்கள் இன்று குருடுகளாகிவிட்டன. அதனால் தான் மனித உரிமைப் பேரவையில் போட்டியிடுவதற்கு உலக நாடுகள் அனுமதியளித்திருக்கின்றன. இந்த அனுமதி நிராகரிக்கபட்டிருக்க வேண்டும். இலங்கையை இணைத்துக் கொண்டதன் மூலம் உலக நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும்; தவறைப் புரிந்து விட்டன. இலங்கை அரசால் மேற்கொள்ளபட்டு வரும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை அவதானித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையிலும் ஒரு நிலையத்தை அமைப்பதற்கு கோரிய போது இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் பலத்த எதிர்ப்பைக் காட்டி அதனை நிராகரித்து விட்டனர்.

ஆனால் மனித உரிமை போரவையில் போட்டியிடுவதற்கான அருகதையை அன்றே இழந்து விட்ட இலங்கை அரசு இன்று இதில் போட்டியிட்டிருபதானது அவமரியாதைக்குரிய செயலாகவே படுகின்றது.

இந் நிலையில் இலங்கையின் ஏமாற்றுத் திட்டங்களுக்குத் துணை போகின்ற உலக நாடுகள் இலங்கை அரசை வெற்றிடையச் செய்யுமாக அமைந்தால் அது உலக நாடுகளின் முட்டாள் தனமான செயற்பாடுகளாகும்.

இங்கு மனித உரிமை மீறல்கள் மிருகத்தனமாக இடம் பெற்று வருகின்றமையானலேயே தென்னாபிரிக்காவின் பேராயர் கூட இலங்கை விவகாரத்தை விமர்சிக்கின்றார். அத்துடன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரும் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை இணைத்தக் கொள்ளக்கூடாது என்ற தோரணையில் கூறியிருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திற்கு சமரசப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கின்ற இந்தியா அந்த வாசகங்ளை உதட்டளவிலேயே உதிர்த்து விட்டு இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றது.

பேச்சுவார்த்தை என்று பகிரங்கமாக கூறிவிட்டு திரை மறைவில் ஆயுத உதவியை மேற்கொண்ட வருகின்றது. அத்துடன் பொருளாதார உதவியையும் செய்கின்றது.

த.தே.கூட்டமைப்பைப் பொறுத்தவரையில தமிழ் மக்களை கொன்றொழிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா துணையாக நிற்கின்றது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும் ஈழப் போராட்டத்தையும் இந்தியா கொச்சைப்படுத்திவிட்டது.

நன்றி வீரகேசரி

இன்று நேற்றல்ல மிக நீண்ட நாட்களாகவே , காலங்களாகவே இந்தியா இப்படியான செயற்பாடுகள் காணப்படுகின்றது என்ன செய்யா எல்லாம் எம்மில்தான் பிழை, நம் காணியில் தோட்டம் செய்ய பக்கத்துவீட்டுக்காரனிடம் கேட்க வேண்டியது இல்லத்தானே....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நேற்றல்ல மிக நீண்ட நாட்களாகவே , காலங்களாகவே இந்தியா இப்படியான செயற்பாடுகள் காணப்படுகின்றது என்ன செய்யா எல்லாம் எம்மில்தான் பிழை, நம் காணியில் தோட்டம் செய்ய பக்கத்துவீட்டுக்காரனிடம் கேட்க வேண்டியது இல்லத்தானே....

இந்தியாவின் சிக்கல் அதுவல்ல................

உன்தோட்டத்தில் நீசெய்யும் தோட்டத்தில் விளையும் சகலதும்...................?????

என்தோட்டத்தில் விளைவதைவிட நன்றாகவோ.......

அழகாகவோ.....???

பெறுமதியானதாகவோ......???

இருக்கக்கூடாது

அதை நீ மீறாதவரை இந்தியா உன் நண்பன்....

இதில் ஏதாவது ஒன்றை நீ தாண்டும் போது

அது தமிழராக இருக்கலாம்

சிங்களவராக இருக்கலாம்

ஏன் சீனாவாகக்கூட இருக்கலாம்

இந்தியா அவரின் முதல் எதிரி

ஏனெனில் இந்தியா என்பது இப்படிப்பட்ட.......எம்மைப்போன்ற பல விவசாயிகளை கட்டிவேலை வாங்கும் வயல்காரன்????

இது இன்னும் புரியாமல் இந்தியாவைத்துதித்தபடி எம்மில்பலர்????

இந்தியாவின் சிக்கல் அதுவல்ல................

உன்தோட்டத்தில் நீசெய்யும் தோட்டத்தில் விளையும் சகலதும்...................?????

என்தோட்டத்தில் விளைவதைவிட நன்றாகவோ.......

அழகாகவோ.....???

பெறுமதியானதாகவோ......???

இருக்கக்கூடாது

அதை நீ மீறாதவரை இந்தியா உன் நண்பன்....

இதில் ஏதாவது ஒன்றை நீ தாண்டும் போது

அது தமிழராக இருக்கலாம்

சிங்களவராக இருக்கலாம்

ஏன் சீனாவாகக்கூட இருக்கலாம்

இந்தியா அவரின் முதல் எதிரி

ஏனெனில் இந்தியா என்பது இப்படிப்பட்ட.......எம்மைப்போன்ற பல விவசாயிகளை கட்டிவேலை வாங்கும் வயல்காரன்????

இது இன்னும் புரியாமல் இந்தியாவைத்துதித்தபடி எம்மில்பலர்????

உண்மைதான் இது விளங்காமல் எம்மில் பலபேர்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சிக்கல் அதுவல்ல................

உன்தோட்டத்தில் நீசெய்யும் தோட்டத்தில் விளையும் சகலதும்...................?????

என்தோட்டத்தில் விளைவதைவிட நன்றாகவோ.......

அழகாகவோ.....???

பெறுமதியானதாகவோ......???

இருக்கக்கூடாது

அதை நீ மீறாதவரை இந்தியா உன் நண்பன்....

இதில் ஏதாவது ஒன்றை நீ தாண்டும் போது

அது தமிழராக இருக்கலாம்

சிங்களவராக இருக்கலாம்

ஏன் சீனாவாகக்கூட இருக்கலாம்

இந்தியா அவரின் முதல் எதிரிஏனெனில் இந்தியா என்பது இப்படிப்பட்ட.......எம்மைப்போன்ற பல விவசாயிகளை கட்டிவேலை வாங்கும் வயல்காரன்????

இது இன்னும் புரியாமல் இந்தியாவைத்துதித்தபடி எம்மில்பலர்????

துப்புகெட்ட இந்தியாவால் இது ஆகுமா???

இனப்பெருக்கெத்தை விருத்தி செய்வதொன்றெ இவர்களுக்கு உகந்தது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.