Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடிச்ச சம்பல்

Featured Replies

Idi%20Sambal%202%20copy.jpg

இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம்.

இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் இல்லாமல் போகுமா? அதிலும் பள்ளிக்கூட நேரத்தில் திருட்டுதனமாக வெளியே போய் கடையில் சாப்பிடும் பாணுக்கும், இடிச்ச சம்பலுக்கும் தனி சுவை என மாமாக்கள்/அண்ணன்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். இதை பற்றி யாழ் சகோதரங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. சகோதரர்கள் தங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். அதே போல ஈழத்தில் குண்டு மழை பொழியும் போது, வேறு உணவுகளை செய்ய சமையல்கட்டு பக்கமே போக முடியாதே. அந்த நேரங்களில் ஈழத்தவரின் உயிரை பசியில் இருந்து காப்பாற்றியது இந்த இடிசம்பல் தானே. நானும் பதுங்குகுழிக்கு மேல் இருந்து பாணும், இடிச்ச சம்பலும் சாப்பிட்டிருக்கேன். [உண்மைய சொன்னா, அந்த நேரத்தில இதுக்கு சுவை அதிகம்]. இதுக்கு மேல சம்பலுக்கு வரலாறு தேவையில்லை என்பதால் இனியாவது செய்முறைக்கு செல்வோம்.

தேவையானவை:

தேங்காய் - 1/2 முடி

செத்தல் - 6

பெரும் சீரகம் - 3/4 மே.க

பழப்புளி - சின்ன தேசிக்காய் அளவு

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கெட்டு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

1. தேங்காயை துருவி எடுத்துக்குங்க.

2. செத்தலை நன்றாக வறுத்து எடுங்க. (தீயை அதிகம் வைத்தால் செத்தல் கருகிவிடும். தும்மலும் வரும்)

3. வெங்காயத்தை உரித்து, சுத்தமாக்கி, சிறிய துண்டுகளாக்கி எடுங்க.

4. முதலில் உரலில் செத்தலை போட்டு நன்றாக இடிக்கணும். (சாதரணமாக 2-3 நிமிடங்கள் போதுமானது)

5. செத்தலுடன் பெரும்சீரகத்தையும் உப்பையும் போட்டு ஒரு ஒரு நிமிடத்திற்கு இடியுங்க.

6. இப்போ வெங்காயம், கறி வேப்பிலை, புளியை சேர்த்து மெதுவாக ஒரு நிமிடத்திற்கு இடியுங்க.

7. இறுதியா துருவிய தேங்காய் பூவை போட்டு மெதுவா கொஞ்சமா இடிக்கணும். (உங்கள் பலத்தையெல்லாம் காட்ட வேண்டாம். தேங்காய் பூ அதிகம் நசியமல் இடிக்க வேண்டும்)

8. உரலில் இருந்து சம்பலை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடுங்க. அதில் இருக்கும் பழப்புளியில் விதைகளை எடுத்த பின்னர், உப்பு சரியா என பார்த்தால் சுவையான இடிசம்பல் ஆயத்தம்!

பி.கு: இதுக்கெல்லாம் சமையல் குறிப்பா என கேட்க்கக்கூடாது ;) எம் பாரம்பரிய சமையல் தொடர வேண்டாமா

செய்முறை:

எங்க சுவையருவி

தூயாவின்ட சமையல்கட்டு

Edited by தூயா

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

ஓம் நானும் அந்தமாதிரி உந்த இடிச்சசம்பல் செய்வன். சிலது உலக்கையால உரலுக்க போடுற போடுல உள்ளுக்க இருக்கிறது எல்லாம் வெளியில பாய்ஞ்சிடும். தோசை இட்லி எண்டால் அம்மியில போட்டு அரைக்கிறது.

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.

பழைசையெல்லாம் கிளறி வாய ஊறவைச்சிற்றியள் தூயா

2 தோசையும் இடிச்ச சம்பலும் உடனடியாக பார்சலில் வந்தாகணும்

இல்லையேல் வாய் ஊற வைச்சதுக்கு தூயாவின் சமையல் கட்டுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பல் செய்முறைக்கு நன்றி தூயா.சம்பலுக்கு நல்ல புளிமாங்காயும் சேர்த்தால் அந்தமாதிரியிருக்கும் :D

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.

உங்கடை கதையைப்பாத்தால் ஏதோ ஊரிலை மட்டும் எல்லாக்கடையிலையும் நல்லதேங்காய்ப்பூவிலை செய்த பச்சடி சாப்பிட்டமாதிரியெல்லே கதைக்கிறியள் அங்கை புல்,பூண்டு,புளுக்கள் , எறும்பு எண்டு பலதும்பத்தும் சேர்ந்திருக்குமெல்லோ :)

ஆகா..! வாயூறுதே..! இஞ்ச உரலில் போட்டு இடிச்சா, 5 நிமிடத்தில் பொலிஸ் தான் வரும், அதால் அரைப்பானில் போட்டு சட்னியாக்கி நாக்கை சப்புக் கொட்ட வேண்டியது தான்..!

எனக்கு இடியப்பம் + சம்பல்தான், அதுவும் காலை உணவு என்றால் சொல்லவே வேண்டாம்..! கூடவே முட்டைபொரியலும் இருந்தா இன்னும் நல்லம்..!

பார்ப்போம் எனி எப்ப அந்த காலம்?

  • தொடங்கியவர்

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இதுக்கு சீனியா?? :lol:

  • தொடங்கியவர்

ஆகா..! வாயூறுதே..! இஞ்ச உரலில் போட்டு இடிச்சா, 5 நிமிடத்தில் பொலிஸ் தான் வரும்,

ஏன்? சின்ன உரல் உலக்கையால் செய்யலாமே?

ஏன்? சின்ன உரல் உலக்கையால் செய்யலாமே?

உரல் சின்னதானாலும் சத்தம் எப்படியும் பெருசாகத்தான் இருக்கப் போகுது.இஞ்ச சில இடங்களில் வீடு எடுக்கும் போது இதப் பற்றி முதலிலேயே சொல்லிடுவினம்..! அடுக்குமாடி வீடுகளில் இது கொஞ்சம் பிரச்சினைதான்..!

நான் இயந்திரத்தால் துருவின தேங்காய் பூவை சும்மா வரட்டிப் போட்டு சம்பல் செய்யிறனான்... பரவாயில்லாமல் இருக்கும்..!

Edited by லீ

ம்ம்..நேக்கு உது நன்ன விருப்பம் அல்லோ :( ..அப்படியே இடித்த சம்பலிற்குள்ள மாசி துண்டையும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு அம்மா செய்து தருவா அட..அட என்ன ருசி.. :lol:

அப்படியே பிட்டையும் போட்டு ஒரு முட்டை பொரியலையும் சேர்த்து சாப்பிட்டா..(சொல்லவே நேக்கு பசிக்குது :( )..ஆனா என்ன நேக்கு "காரம்" கூடுதலா இருகனும்.. :lol:

ம்ம்..தூயிஸ் தங்கச்சி செய்முறைக்கு நன்றியப்பா :lol: ..அட உரலில எல்லாம் போட்டு இடிக்கிறியள்..(பேஷா இடியுங்கோ என்ன)..அட தங்கச்சி இப்படி எல்லாம் வேலை செய்யிறதை பார்க்க எனக்கு கவலையா இருக்குதல்லோ :( ..அதோட நம்ம "சிந்து உணவக" சம்பலும் பிழை இல்ல நன்னா தான் இருக்கு..(ஆனா காரம் தான் கம்மியாக்கும் பாருங்கோ)... :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரலில தான் இடிக்க வேணும் என்டு இல்லை food processor பாவிக்கலாம். அதோட இந்த சம்பலுக்கு கொஞ்சம் மிளகும் சேர்த்தா இன்னும் நல்லாயிருக்கும்.

நான் கடையில வாங்கிற தேங்காய் பூவுக்கு கொஞ்சம் சுடுதண்ணி சேர்த்து ஊற விட்டுட்டு பிறகு செத்தலை வறுத்து செத்தலையும் உப்பு, மிளகையும் சேர்த்து அரைக்க வேனும் அது அரைச்சு வந்த பிறகு தேங்காஉப்பூவை போட வேணும் அதுவும் சேர்ந்த பிறகு வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு ஒரு 2 தடவை சுற்றின பிறகு இறக்கலாம் (வெங்காயம் நல்லா அரைபட்டா சம்பல் சுவையாக இருக்காது). பிறகு எலுமிச்சம் பழபுளி விட்டா இடிச்ச சம்பல் தயார்.

இது தான் food processor(எனக்கு இதற்கு தமிழ் தெரியாது)

Food_Processor__2_in_1_.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

ஓம் நானும் அந்தமாதிரி உந்த இடிச்சசம்பல் செய்வன். சிலது உலக்கையால உரலுக்க போடுற போடுல உள்ளுக்க இருக்கிறது எல்லாம் வெளியில பாய்ஞ்சிடும். தோசை இட்லி எண்டால் அம்மியில போட்டு அரைக்கிறது.

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.<<<<

ஒட்டாவாவில் இருப்பதால் கடைச்சாப்பாடுகள் குறைவு அதுவும் இடியப்பம் எனக்குப் பெரிசாப்பிடிக்காது :rolleyes: இடியப்பம் என்றால் முட்டைப்பொரியலோட சாப்பிடத்தான் விருப்பம்.

இடிச்ச சம்பல் பாணுக்கும் ரொட்டிக்கும் மிக நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சம்பலுக்கு வெங்கயம் கொஞ்சம் கடிபட வேனும்.அதால கடைசி நேரத்தில வெங்காயத்ததை போட்டால் நல்லா இருக்கும்.

  • தொடங்கியவர்

இந்தச்சம்பலுக்கு வெங்கயம் கொஞ்சம் கடிபட வேனும்.அதால கடைசி நேரத்தில வெங்காயத்ததை போட்டால் நல்லா இருக்கும்.

உண்மை <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.