Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலுக்கென வளாக்கப்பட்டவனோ பழக்கப்பட்டவனோ அல்ல. ஆயுத போராட்டத்திற்கு 15 வருடமாக என்னை அர்ப்பணித்தவன் - பிள்ளையானின் பிதற்றல்

Featured Replies

'நான் அரசியலுக்கென வளர்க்கப்பட்டவனோ அல்லது அதற்கு பழக்கபட்வனோ அல்ல கரடுமுரடான 15 வருட ஆயுத போராட்டத்தில் என்னை அர்ப்பணித்து அப்போராட்டத் தலைமையின் தவறான வழி நடத்தலை உணர்ந்து, காலகாலமாக அல்லல்பட்ட அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியலில் பிவேசம் செய்ததவன். முதலமைச்ர் பதவியானது நான் விரும்பிய ஒன்றல்ல. ஆனாலும் மாகாணத்தின் சகோதரத்துவம். இன ஐக்கியம், அபிவிருத்தி போன்றவற்றிற்காக மக்கள் தந்த ஆணை'

பதுளை ஊவா முகாமைத்துவ வள நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற முதலலைச்சர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு பிள்ளையான் தெரிவித்துள்ளான்.

அவன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கௌரவம் மிக்க முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பை எம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை புரிந்து கொள்வதற்கான சிறந்த ஒரு வாய்ப்பாகவும் களமாகவும நான் கருதுகின்றேன்.

மஹிந்த துணிச்சலான, தூரநோக்கான நடவடிக்கை காரணமாக கிழக்கு மக்கள் ஜனநாயக??? ஆட்சி முறையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இருந்தும் இவ்வாய்ப்பு இதுவரை வடக்கு மக்களுக்கு கிட்வில்லை. விரைவில் மாகண சபையின் பலாபலன்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமைய வேண்டும்.

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் துரோகி டக்ளசும் சொன்னார். அரசின் எச்சில் இலைக்கு வாயை பிளக்கும் துரோகிகளை தமிழ் மக்கள் எப்போதுமே மன்னிக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:) அப்படியென்ன வீரகேசரிக்கு அப்படியொரு சந்தோஷம் பிள்ளையானின் கருத்துக்களை பிரசுரிப்பதில். கிழக்கு மாகாணசபையில் ஏதாவது அபிவிருத்தி என்ற பெயரில வீர கேசரி நிர்வாகமும் சுருட்டுகிற நோக்கம் வைத்திருக்குது போல.
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் வீரகேசரி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் எப்படி இயங்குகிறது என்று யோசித்தால் வீரகேசரி யார் என்று விளங்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக வீரகேசரி பத்திரிகை மாற்றுக்குழுக்களுக்கு துதிபாடும் பத்திரிகையாகவும், அவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பத்திரிகையாகவே உள்ளது.

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஒரு சில கட்டுரையாளர்கள் வீரகேசரிக்கு கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் வீரகேசரிக்கு கட்டுரைகளை எழுதி வருவதனை நிறுத்துமாறு நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வீரகேசரி போன்ற வியாபார நோக்கிலானனதும், மாற்றுக்குழுக்களுக்கு துதி பாடும் பத்திரிகைகளையும் நாம் புறக்கணிக்க முயற்சிக்க வேண்டும்.

முதலாவதாக வீரகேசரி பத்திரிகையின் செய்திகளையும், அவர்கள் வெளியிடும் கட்டுரைகளையும், புலத்தில் வீரகேசரி வாங்கிப் படிப்பதனையும் புறக்கணிக்க வேண்டும்.

முக்கியமாக எமது இணையத்தளங்கள் வீரகேசரி வெளியிடுகின்ற செய்திகளையும் கட்டுரைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

சிங்கத்தின் குகையான கொழும்பில் இருந்து கொண்டு வெளிவரும் சுடரொளி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளை நாம் ஊக்குவித்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இவற்றை யாழ். கள படிப்பாளர்களாகிய நாமும் ஊக்குவிக்க வேண்டும்.

நாம் படிப்பதனால் தான் வீரகேசரி தொடர்ந்தும் மாற்றுக்குழுக்களின் கருத்துக்களையும், அவர்கள் தொடர்பான செய்திகளையம் வெளியிட்டு வருகின்றன என்பதனை இங்கே மறக்கக்கூடாது.

50 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் மத்தியில் உலாவி வரும் பத்திரிகை வீரகேசரி. அவர்கள் தொடர்ந்தும் வியாபார நோக்கத்தில் தமிழ்த் தேசியத்தினை கூறுபோடுவது வேதனையான விடயம்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
:) தனது வியாபார நோக்கங்களுக்காக அரசையும், துணை ராணுவக் குழுக்களையும் அரவணைத்து வரும் வீரகேசரி இவ்வளவு காலமும் தமிழரின் குரலாக இருந்ததை எண்ணிப்பார்க்க முடியவில்லை. அதன் அகம்பாவம் காரணமாகத்தான் சுமார் 7,8 வருடங்களுக்கு முன்னர் தமிழர் சார்பு பத்திரிகையாளர்கள் வீரகேசரியை விட்டு வெளியேறி தினக்குரல் எனும் ஒரு தனித்துவமான பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்கள். அன்று அவர்கள் ஆரம்பித்த பத்திரிகை இன்றும் அடிமைப்படுத்தப்படும் தமிழர்க்காய்க் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற்து.

ரகுநாதன் சொன்னமாதிரி.. தினக்குரல் வந்தாபிறகு வீரகேசரி முழுக்க முழுக்க துதிப்பாட்டு பாட ஆரம்பிச்சிடுச்சு...

பழய ஆசிரியர் சிவனேசச்செல்வன் இருக்கும் வரை ஏதோ அப்பிடி இப்பிடி எண்டு ஓடினது இப்ப சலாமு சலாமுதான்...

சிங்களத்தின் பலி ஆடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.