Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் ஆடை தயாரிப்பு பணியில் இலங்கை அகதிச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்-பி.பி.சி

Featured Replies

தமிழகத்தில் ஆடை தயாரிப்பு பணியில் இலங்கை அகதிச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்-பி.பி.சி

பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் Pஅனொரம நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் 'ப்ரிமார்க்' எனும் ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்காக மிகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் தென்னிந்திய அகதிமுகாம்களிலுள்ள சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பி.பி.சி கண்டறிந்துள்ளது.

அத்துடன் இவர்கள் மிக மோசமான சூழலில், நீண்ட நேரம் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக

  • கருத்துக்கள உறவுகள்

:wub: தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துவரும் எமது உறவுகளின் வாழ்க்கைத்தரத்தை இதைவிட துல்லியமாக எடுத்துக்காட்ட முடியாது. வேறெந்தப் புலம்பெயர்ந்த நாட்டிலும் ஈழத்தமிழர் இவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை. உலகத் தமிழரின் தலைவரும், தமிழுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவருமான ஒருவர் ஆளும் நாட்டில் ஈழத்தமிழனின் நிலை இப்படியிருக்கு.

வாழ்க தமிழ் !!!!!!!!!!!!!!

இப்ப யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது?

பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் Pஅனொரம நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைக்கு கேவலம் ஆனா நாடகிய இங்கிலாந்தில் காலனியாக் இருந்த 90 % நாடுகளில் இனப்பிரச்சனை க்கு யார் காரணம் என்று இன்று வரை பிரித்தானியா சனியன்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

Edited by I.V.Sasi

இது ஊரறிந்தவிடயம். இதை செய்கின்றவர் வேறுயாருமல்ல எமது தந்தைசெல்வாவின் புத்திரன் சந்திரகாசன். அங்கு வேலைசெய்யும் ஒரு பெண்ணை கடந்தவருடம் இந்தியா சென்றபோது சந்தித்தேன். குறைந்த கூலிக்கு அவர்களை அமர்த்தி வேலைவாங்குவதாக கூறினார்.

:wub: தமிழகத்தில் பல ஏழைக்குடும்பத்தை ச்சேர்ந்த சிறுவர்கள் பலர் உ.பி ,குஜராத் போன்ற மா நிலங்களுக்கு கொத்தடிமை வேலை செய்ய வெறும் 5000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன.....

பலர் தப்பி வந்துள்ளனர், மீட்கப்பட்டுள்ளனர் தமிழகம் உட்பட இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகம்... நிலமை இப்படி இருக்கிறது..... பாவம் ஏதுமின்றி உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தமிழகம் வரும் அகதிகள் நிலமை மட்டும் ..... என்னத்தை ச்சொல்ல

அந்த இந்திய தொழில்ச்சாலைகளுடனான உறவையும், குத்தகையையும் நிறுத்திவிட்டதாக பிறைமாக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. குறைந்த விலையில் விற்பதற்காக இந்தியா, பங்களாதேஸ் போண்ற நாடுகளை நாடவேண்டி இருப்பதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பிறைமாக்கை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து வரும் பொருட்களின் அளவு 0.4% மட்டுமே எண்றும் தெரிவித்தார்.

அதே நேரம் சில சிறுவர்கள் வேலையில் ஈடுபடுத்தியது குற்றம்தான். அதனால் அங்கே பல குடும்பங்களின் ( பெரியவர்களினதும்) வாழ்க்கை வருமானம் பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

இதை வல்லரசாக வரத்துடிக்கும் இந்தியாவுக்கு எதிரான அரசியலாக கூட பார்க்க முடியும்.

Edited by பொய்கை

இந்த சண்டடியில் ஈராக் யுத்தத்தில் கூட்டுப்படைகளால் கொல்லப்பட்ட சிறுவர்களையும் ஒருக்கா நினையுங்கோ.

சதாம் இருக்கும்போது ஈராகில் விபச்சாரம் இருந்ததோ தெரியாது... அனாலும் குழந்தை வியாபாரம் இப்பத்தான் சூடு பிடிச்சிருக்கு.

எங்கட ஊரிலையும் வந்து சிறுவர்கள் பற்ரி இவங்கள் படமெடுத்தவங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.