Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருபது வருடங்களின் பின் வெளிநாடுகளிலிருந்து வந்த மூன்று தமிழர்கள் கைது.

Featured Replies

இருபது வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளிலிருந்து ஒன்று விட்ட சகோதரியைப் பார்ப்பதற்கு இலங்கைக்கு வந்த மூன்று தமிழர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். என்று ம.ம.முன்ணனி பிரதி அமைச்சர் பெ. ராதாகிருஷ்ணனிடம் கொழும்பில் வசிக்கும் அவர்களது சகோதரி முறைப்பாடு செய்துள்ளர்ர்.

யாழைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் கடந்த 18ம் திகதி இலங்கைக்கு வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் தங்கியிருந்த பின் அங்கு உரிய வசதிகள் தங்களுக்குக் கிடைக்காமையால் அருகிலுள்ள ஜூலியான ஹோட்டலில் தங்கியிருந்தபோதே கைது செய்யபட்டனர். என சகோதரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் சோதிலிங்கம் புவனேந்திரன்(43), கனடாவைச் சேர்ந்தவர்களான ராஜசிங்கம் அருண்(30), வேலாயுதப்பிள்ளை மோகன்குமார் (37) ஆகிய மூன்று குடும்பஸ்தர்களே இவ்வாறு தடுத்து வைக்கபட்டுள்ளனர் என சகோதரியான டோரா மேலும் தெரிவித்துள்ளர்ர். தனது ஒன்று விட்ட சகோதரர்களான மேற்படி மூவரும் 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே கைது செய்யபட்டுள்ளனர் என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவர் 100 டொலர் போலித்தாள்கள் வைத்திருந்தார் என்று கிடைத்த அனாமதேய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யபட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை, கொழும்புக் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான தமிழ் சினிமாத்துறை இயக்குநாரான தேவதாஸ_க்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவரது சகோதரர் பிரதி அமைச்சர் பெ. ராதாகிருஷ்ணனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 24ம் திகதி ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள தங்குமிடத்திலிருந்து கடந்தப்பட்டார் எனத தெரிவிக்கபட்ட 'சலன சித்திரம்' அமைப்பின் ஸ்தாபகரும், தமிழ்கலைத்துறை வாசியுமான கனகசபை தேவதாஸ்(63) தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கபட்டுள்ளார் எனத் தெரிவவந்துள்ளதாக அவரது மூத்த சகோதரரான ஜெகதீஸ் தனது முறைப்பாடடில் தெரிவித்துள்ளர்.

தனது சகோதரன் காணாமல் போன செய்தி யாழ்ப்பாணத் தினசரியில் இடம் பெற்றிருந்தமதையடுத்தே கொழும்புக்கு வருகை தந்தார் என்றும் தேவதாஸின் மனைவி, பிள்ளைகள் கரவெட்டியில வசித்துவருகின்றனர் எனவும் சகோதரர் மேலும் தெரிவித்தர். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த சகோதரர் மீது சிங்கள நாளிதழ்கள் பாரதுரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எழுதி வருகின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் தனது சகோதரனுக்கு நீதியைப் பெற்றுத் தரும்படியும பிதியமைச்சரிடம் கோரியுள்ளார்.

தனது சகோதரன் 12ம் திகதி இந்தியவிலிருந்து 'காதல் கடிதம்' திரைப்பட வேலைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்த போதே கைது செய்யபட்டார் எனவும் சகோதரர் தெரிவித்தார்.

இது குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் முறைப்படு செய்துள்ளார்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்தேவையில்லாமல் சிறிலங்காவுக்கு செல்வதினைத் தவிர்த்தால் நல்லது. வெளினாடுகளில் இருந்து சென்றவர்கள் பணத்துக்காகக் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல கொழும்பில் நடந்திருக்கின்றன. பணம் போனால் பரவாயில்லை. உயிர் போனால்?. அவசரத் தேவைக்காக சிறிலங்காவுக்கு செல்பவர்களில் சிலர் சிறிலங்கா விமானத்தில் பயணிக்கிறார்கள். இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறிலங்கா விமானத்தில் பயணிப்பதினால் நாம் கொடுக்கும் பணத்தில் ஒரு பகுதி தமிழனைக் கொல்ல துணை போகிறது.

  • தொடங்கியவர்

உண்மை கந்தப்பு. நான் எனது உறவினர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி விட்டேன். இங்கு வரும் எண்ணமிருந்தால் விட்டுவிடும் படி. மற்றும் ஒரு செய்தி வெளிநாடுகளில் உள்ளவர்களின் இங்குள் உறவுகளையும் கடத்திச் சென்று அவர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. எனவே உறவுகளே கவனம்.

ஜானா

அவசரத்தேவையில்லாமல் சிறிலங்காவுக்கு செல்வதினைத் தவிர்த்தால் நல்லது. வெளினாடுகளில் இருந்து சென்றவர்கள் பணத்துக்காகக் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல கொழும்பில் நடந்திருக்கின்றன. பணம் போனால் பரவாயில்லை. உயிர் போனால்?. அவசரத் தேவைக்காக சிறிலங்காவுக்கு செல்பவர்களில் சிலர் சிறிலங்கா விமானத்தில் பயணிக்கிறார்கள். இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறிலங்கா விமானத்தில் பயணிப்பதினால் நாம் கொடுக்கும் பணத்தில் ஒரு பகுதி தமிழனைக் கொல்ல துணை போகிறது.

உண்மை கந்தப்பு. தேவையில்லாமால் ஏன் இப்படி போய் மாட்ட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கன் ஏயார் லைன்ஸில் செல்லும் தமிழர்களிடம் அவர்கள் திரும்பும்போது கடைசி நிமிடத்தில் போடிங் பாஸ் கிழிக்கும்போது மிரட்டிக் காசு பறிக்கிறார்கள். சமீபத்தில் எனது உறவினர்கள் சிலர் இலங்கை சென்றிருந்த போது இது நடந்தது.

சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஆணுமே இதைச் செய்ததாகப் புகார் கூறப்படுகின்றது.

அது தொடர்பாக விமான சேவைக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதியும் அதை யாரும் கணக்கெத்துப் பதில்கூடப் போடவில்லை.

சிறீலங்கன் எயார்லைன்ஸ் முகவர்களாகப் பல தமிழர்கள் இங்கு உள்ளனர். தமிழ்ப் பத்திரிகைகளும் விளம்பரங்களைப் போடுகின்றன.

ஆனால் கொழும்பிலுள்ள சிங்கள ஊழியர்களின் இனத்துவேச நடவடிக்கையை யாரும் கவனிப்பதில்லை.

காசைக்கண்டால் வாலைத்தூககும் சிங்களம் என்பது பலவிடயங்களில் அறிந்த உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.