Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் படையணியில்

Featured Replies

விடுதலைப் புலிகளின் படையணியில்

நாற்பதாயிரம்(40000)படை வீரர்கள்?

விடுதலைப் புலிகளின் படையணியில் சுமார் (40000) நாற்பதாயிரம் படை வீரர்கள் இருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக நிலவன் அவர்கள் கனடிய வானொலி ஒன்றுக்கு இன்று பேட்டி ஒன்றின்போது கூறினார்

இது எவ்வளவு தூரம் உண்மை? இதுபற்றி ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வற்துள்ளதா?

புலிகளிடம் 2000 3000 வீரர்கள்தான் உண்டு என்று சொல்லிவந்த அரசு தற்பொழுது இப்படி கூறக்காரணம் என்ன?ஏதாவது சதித்திட்டமாக இருக்குமோ?

அல்லது

சில வருடங்களுக்கு முன் நான்கேள்விப்பட்ட செய்தியின்படி இது உண்மையாக இருக்குமா?

அதாவது புலிகளிடத்தில் சுமார் 50000 வீரர்கள் இருப்பதாகவும்

சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவார காலத்தில் தமிழ் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்னும் கேள்விப்பட்டேன்

எது எப்படியோ ? நிலவனின் கூற்று உண்மையானால் சந்தோசம்தான்

ஐயோ..... ஐயோ... :huh::)

இன்றைய காலத்தில் மக்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல்லாம் மக்கள்...

இந்த யதார்தம் அறியாத இந்த நவீன உலகை நாம் என்னென்று சொல்ல.... :D

கடவுளே உணக்குகூட நக்கலாக இருக்கும் இவ்வுகை பார்த்து...... :):D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ..... ஐயோ... :D :D

இன்றைய காலத்தில் மக்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல்லாம் மக்கள்...

இதையே இதையே தான் நானும் சொல்ல நினைத்தேன்..மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம்....புலிகள் அன்றோ ஒன்றே தலைவர் அவரே எங்கள் அண்ணன்

  • தொடங்கியவர்

ஐயோ..... ஐயோ... :lol::D

இன்றைய காலத்தில் மக்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல்லாம் மக்கள்...

இந்த யதார்தம் அறியாத இந்த நவீன உலகை நாம் என்னென்று சொல்ல.... :icon_idea:

கடவுளே உணக்குகூட நக்கலாக இருக்கும் இவ்வுகை பார்த்து...... :rolleyes::icon_mrgreen::icon_idea:

யுரோப்பில என்ன செய்துகொண்டிருக்கிறீங்க

சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவார காலத்தில் தமிழ் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்னும் கேள்விப்பட்டேன்

இதெல்லாம் கற்பனையிலைதான் அண்ணை சாத்தியப்படும்.

இப்படியான கற்பனையைக் கொண்டுள்ளவர்களிற்காக.....

தென்முனையில் தொடங்கிய ஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் தொடங்கி ஒரு சில நாட்களில் ஜெயசிக்குறுவிடம் இழந்த நிலங்களை அதிவேகத்தில் தனதாக்கிக் கொண்டது. இதன் இரண்டாம் கட்டம் ரணகோசவிடம் இழந்த நிலத்தை வெறும் மூன்று நாட்களில் தனதாக்கிக் கொண்டது.

ஆனால் வடபோர்முனையில் ஆனையிறவை வீழ்த்துவதற்கான சமர் சுமார் நான்கு மாதத்திற்கும் மேல் நடைபெற்றது. காரணம் பலமான படைத்தளம், அதனுடைய அமைவிடம் இப்படி பல காரணிகள் தற்காப்பு சமருக்கு சாதகமாகவிருந்தது. எனினும் அந்த சாதகத்தை படிப்படியாக உடைத்து தமிழர் சேனை வெற்றி கொண்டது வரலாறு.

இதேபோன்றுதான் யாழ்.குடா மீது புலிகள் பாரிய நிலமீட்புச் சமரைத் தொடங்கும்போது சில பல தாமதங்களை எதிர்கொண்டேயாக வேண்டும்.

மிகப்பலம் வாய்ந்த இறுக்காமாகப் பேணப்படும் முன்னரங்க நிலைகளிலிருந்தவாறு மழைபோல பொழியக்கூடிய பல்குழல் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகளின் சூட்டாதரவோடு தற்காப்புச் சமரை வெற்றிகரமாகச் செய்வதற்குப் படையினருக்கு வாய்ப்பாக இருக்கும். இறுக்கமான பாதுகாப்பு நிலைகளாக இருந்தாலும் புலிகள் அதனை சிலமணிநேரத்தில் உடைத்துக்கொண்டு உள்நுழைத்தாலும் அவர்களால் வேகமான முன்னேற்றத்தை மக்கள் வாழ்விடங்கள் உள்ள பகுதிகளில் மேற்கொள்ள முடியாது. மக்களின் குடிமனைகளிற்கு மத்தியில் அமைந்துள்ள படைத்தளங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவது கடினம். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நின்று படைத்தளங்களை தாக்கும்போது படையினர் எறிகணை வீச்சை மேற்கொண்டால் மக்களிற்குப் பேரிழப்புக்கள் ஏற்படும். ஓயாத அலைகள் மூன்றில் அரியாலை தனங்கிளப்புப் பகுதிகளில் தரையிறங்கிய புலியணிகள் நாவற்குழி, கைதடி, மட்டுவில் சாவகச்சேரி பகுதிகளைக் கைப்பற்றிய வேகத்தில் கைப்பற்றுவது சாத்தியமாகலாம். ஆனால் உடனடியாகவே மீட்கப்படும் மக்களை அப்புறப்படுத்த அல்லது எறிகணைத் தாக்குதல்களிலிருந்து அவர்களிற்கான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் எடுத்தேயாக வேண்டும். அவ்வாறு செய்யாதவிடத்து அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களில் பெரும்பகுதியை இழக்க வேண்டியிருக்கும். யாழ். குடாவைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலமீட்பைச் செய்வது புலிகளிற்கு மிகச்சவாலானது. அதைவிட யாழ்.குடாவில் உள்ள படையினருக்கு வாழ்வா சாவா பிரச்சினை எனவே தங்களின் உச்சவலுவை அங்கு பயன்படுத்துவார்கள். இது கூட சமர் காலத்தை இழுத்துச் செல்லவாய்ப்பைக் கொடுக்கும். எந்தச் சவாலை புலிகள் முறியடிப்பார்கள் என்பது வேறுவிடயம். ஆனால் சில நாட்கள் ஒரு கிழமைக்குள் முடியும் என்பதெல்லாம் வேல்சிலிருந்தோ பாரிசிலிருந்தோ எழுதுபவர்களின் பேனாவால் மட்டுமே முடியக் கூடியது.

ஆனால் தென்முனையில் வவுனியா மன்னார் பகுதிகளில் படைத்தளங்களை இலகுவாக வெற்றிகொண்டு புலிகள் நிலப்பரப்புக்களைக் கைப்பற்ற முடியும். இங்கேயும் மக்கள் வாழ்விடங்களை கைப்பற்றும்போது தாமதங்கள் ஏற்பட்டாலும் விரைவான நில மீட்பு சமர் ஒரு சில வாரங்களில் சாத்தியமாகலாம். மணலாறு படைத்தளங்கள் வீழ்த்தப்பட்டால் திருமலையில் பெருநிலப்பரப்பு உடனடியாகவே வீழும் திருமலை நகர், துறைமுகப்பகுதிகளில் இறுதிக்கமாச் சண்டையிடவேண்டி வரும். கைப்பற்றப்படும் இடங்கள் மீளப்பறிபோகாமல் அவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டே தொடர்ந்து முன்னேற்றத்தைச் செய்ய முடியும். மணலற்றிலிருந்து அம்பாறை வரை ஏழு நாட்களில் கைப்பற்றுவது சிலவேளைகளில் சாத்தியமாக இருந்திருக்கலாம். எப்போதென்றால் புலிகள் முன்னர் கிழக்கில் நிலை கொண்டிருத்ததைப் போன்ற நிலையிருந்திருந்தால். ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை.

தொடர்ச்சியான சமர், ஏற்படும் உயிரிழவுகள் ஒருபுறமிருக்க பெரும்தொகையில் விழுப்புண்ணடையும் போராளிகள் மற்றும் மக்களிற்கான மருத்துவம், குருதி ஏன் இடம்பெயரும் மக்களிற்கான உணவு வழங்கலைக்கூட போராளிகளே செய்ய வேண்டும் என்று இதிலும் நெருக்கடிகள்.

ஏழு நாட்கள் 30 நாட்களில் முழுமையான நிலமீட்புச் சமர் சாத்தியமாகும் என்பது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வேல்ஸ், மற்றும் பாரிசிலிருந்து எழுபவர்களின் பேனாக்களால் மட்டுமே முடியும்.

எனவே இப்படிக் கற்பனையில் மிதக்காது களயாதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். முழுமையான விடுதலையை புலிகள் பெற்றுத் தருவார்கள். ஆனால் முழுமையான நில மீட்பு மாதக்கணக்கில் இழுபட்டாலே சாத்தியமாகும்.

மக்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல்லாம் மக்கள் எண்டா பிறகேன் சீருடை படையணி அடையாளஅட்டை தகடுகள்?

பொதுமக்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள் பொதுமக்களுக்கு உணவு மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகிறது எண்டதுகள் எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளோ?

புலம்பெயர்ந்தவர்கள் மக்கள் எல்லாம் புலிகள் எண்டு சொல்லிக் கொண்டு தடைகளை தாண்டி இயங்கிக் காட்டலாமே? சண்டை ஒண்டும் பிடிக்க வேண்டாம் சனநாயகரீதியில் கவனயீர்பு கருத்தியள தள உருவாக்கத்திற்கு இயங்க முயற்சிக்கலாம்.

மின்னல் அண்ணை எந்த இறுக்கமான முன்னரங்கையும் உடைச்சுக் கொண்டு பாயலாம். முடியாதது எண்டு ஒண்டில்லை. அந்தக்காலத்தில ஈரூடகம் விமானப்படை சமாதானம் சண்டை போன்ற பல்குழல் ஏவுகணைகள் இல்லாத பொழுதே 2...3 நாட்களில் முடியும் எண்டா இப்ப ஏன் முடியாது என்றியள்? நீங்கள் எந்தக் காலத்தில இருக்கிறியள்? உயிரிழப்புகள் விழுப்புண் அடையிறது மருத்துவ தேவைகள் எல்லாம் மலையேறிப்போட்டுது அண்ணை. இப்ப மடிக்கணனியில பொத்தான்களை அமத்தினா மோட்டுச் சிங்களவனின்ரை அகலக் கால்பதிச்சிருக்கிற ஒவ்வொரு காவலரணா விழும். எவ்வளவு விரைவாக பொத்தான்களை அமத்தி கட்டுரை எழுத முடியுமோ அவ்வளவு விரைவாக நிலமீட்புச் செய்யலாம்.

புலம்பெயர்ந்தவர்களின் உளஉரணை பியர் சைகேசிஸ் இல இருந்து காப்பாற்ற எடுக்கப்படு முயற்சிகளிற்கு குறுக்கே நிக்கும் மின்னல் போன்றவர்களை யாழ்களத்தில தடை செய்ய வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே இப்படிக் கற்பனையில் மிதக்காது களயாதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். முழுமையான விடுதலையை புலிகள் பெற்றுத் தருவார்கள். ஆனால் முழுமையான நில மீட்பு மாதக்கணக்கில் இழுபட்டாலே சாத்தியமாகும்.

யதார்த்தமான விடையங்களை கோடிட்டு காட்டும்போது சிலபேருக்கு நக்கலாகத்தான் படும். இதற்காக உங்களது சிந்தனைகளையும் எழுத்துத்திறனையும் துவண்டுபோக விட்டுவிடாதீர்கள் மின்னல். நீங்கள் கூறியதில் நிறையவே ஏற்றுக்கொள்ளக்கூடியயது...

Edited by snegi

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி குறுக்ஸ்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் எல்லாம் புலிகள் புலிகள் எல்லாம் மக்கள் எண்டா பிறகேன் சீருடை படையணி அடையாளஅட்டை தகடுகள்?

பொதுமக்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள் பொதுமக்களுக்கு உணவு மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகிறது எண்டதுகள் எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளோ?****

அண்ணை உது பிழையான புரிதல்...அப்படிச் சுட்டிக் காட்டியதால் இப்படிச் சொன்னோம்...சிங்களம் இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே அப்பாவிப் பொதுமக்களைச் சுடுகுது ஆக அவனுடைய கணக்கெடுப்பில் தமிழன் என்றாலே புலிதானே?!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.