Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளைமையான சிட்னி பொங்கு தமிழ்

Featured Replies

ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

sydney_pongu_tamil_20080706004.jpg

படம்: புதினம்

புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே!

நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக 11 மணியளவில், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகக்கொடியை ஏற்றிவதற்கு ஈழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தொடர்ந்து ஒஸ்திரேலியா நாட்டு கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மக்கள் கூட்டம் சற்றே குறைவாக காணப்பட்டது. நேரம்தவறாமை என்பது எத்தனை முக்கியம் என்று ஒரு உரை ஆற்றினால் என்ன என எனக்கு தோன்றியது. ஆனால் 12 மணியளவில் மைதானத்தில் 2500 வரையிலான மக்கள் உணர்ச்சியுடன் "சூரியத்தேவன் பிரபாகரன்" என கூறிக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடன் என்னுடைய "நேரம் தவறாமை உரை" வேறொரு நாளில் அரங்கேறட்டும் என விட்டுவிட்டேன்.

மைதானத்தில் ஒரு சிறிய மேடை அமைத்து, அதில் இளைஞர் படை தம் கடமையை தவறாது செய்தார்கள். உற்சாகத்துடன் தங்கள் குரல்கள் தொலையும் வரை ஈழம் வேண்டி சத்தம் போட்ட பல இளைஞர்களும், சிறுவர்களும் ஒஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்தவர்கள் / சிறுவயது முதல் ஒஸ்திரேலியாவில் இருப்பவர்கள். புலத்து இளைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு விடயங்களோடு வாழ்பவர்கள் அல்ல என ஆணித்தரமாக கூற கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகவே பயன்படுத்தியிருந்தார்கள் என்றே கூற வேண்டும்.

நிகழ்ச்சியில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோகி ஆகியோரின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது. இளைஞர்களின் பொங்குதமிழ் நடனமும் மகிந்தவின் கள்ளநரித்தனத்தை எடுத்துக்காட்டும் நாடகமும் சிறப்பம்சமாக அமைந்தன.

ஆரம்பத்தில் இளைஞர்கள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது, இறுதி நேரத்தில் பெரியவர்கள் குரல்களும் சேர்ந்து கொண்டன. ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்திருக்கலாமோ என எனக்கு தோன்றியது. அனைவரும் சேர்ந்து முழங்கிய போது உடம்பில் ஒரு உணர்ச்சி எங்கும் பாய்ந்தது.

தேசியத்தலைவரின் படம், தமிழீழ வரைபடம், பாயும் புலிப்படம் பதித்த பதாகைகளை மக்கள் தாங்கியபடி "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என கேட்ட போது, அங்கிருந்த ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த பெரிய பானை பொங்கியது மிகவும் அழகாகவும், உணர்ச்சியை அதிகப்படுத்தும் ஒரு ஊண்டு கோலாகவும் இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியான தாயக நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். முன்னர் வந்த மக்களை விட இப்போது அதிக மக்கள் வருகின்றார்கள். சிட்னியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் தாயக நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. எப்போதும் வராத பலர் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

நிகழ்வில் இறுதியில் பொங்குதமிழ் பிரகடனம் செய்த போது, மக்கள் அனைவரும் வலது கையை நெஞ்சில் வைத்து நின்ற போது, நெஞ்சில் வீரம் சற்றே அதிகமாகி தான் போனது. ஈழப்போராட்டத்தில் எம்முடைய பங்கும் உள்ளது, எம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள பலருக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

காலை 11 இல் இருந்து மதியம் 2 மணிவரை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு 3.30 வரை சென்றது. இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். பொங்குதமிழ் பாடல்கள் பாடும் போது தலைவர் பெயர் வரும் போதெல்லாம் மைதானத்தில் குரல்கள் அதிகமாகவும், பலமாகவும் ஒலித்தது.

கொடியிறக்கத்துடன், "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என அனைவரும் கூற நிகழ்வு நிறைவு பெற்றது. எண்ணிக்கையில் நாம் குறைந்தாலும், உணர்வில் குறைந்தவர்கள் இல்லை என சிட்னி தமிழர்கள் மீண்டும் திடமாக நிரூபித்திருந்தனர்.

அதென்ன "இளைமையான" சிட்னி பொங்குதமிழ் என கேட்பவர்களுக்கு: இளைஞர்கள் அதிகம் பங்கெடுத்தமையால் (குரல் குடுத்தமை) தான் இந்த தலைப்பு.

தூயா

Edited by தூயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியச்சொன்னீங்கள் தூயா

சிட்னி வாழ் "பெருசுகள்" எல்லாம் எங்க போயுட்டுதுகளே???

ஒருவேளை நிகழ்ச்சி முடியேக்க சாப்பாடு போடுவம் எண்டால் வந்திருப்பீனம் போல..... :lol::lol::lol:

Edited by piththan

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தூயா, பித்தன்,

நானும் பொங்குதமிழ் நிகழ்விற்கு வந்திருந்தேன். நீங்கள் சொன்னது போல் இளைஞர்கள் தான் நிகழ்வை முன்னின்று நடத்தினார்கள். ஆனால் பெருமளவில் வயது முதிர்ந்தவர்களும் வந்திருந்ததை மறுப்பதற்கில்லை.

நிகழ்ச்சி 2 மணிக்கு முடியும் என்று சொல்லியிருந்தாலும், ரெண்டரை வரை அது நடைபெற்றதால் பலர் மைதானத்திலிருந்து மெல்ல வெளியேறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கு என்ன அவசரமோ ?!!!!!!!!

நம் அனைவரையும் நிகழ்வில் உற்சாகத்துடன் பங்குபெறச் செய்த அந்த ஓய்வற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

மகிந்த ராஜபக்ச, டக்கிளசு நாடகத்தை இன்னும் கொஞ்சம் மெருகூட்டிச் செய்திருக்கலாமோ என்ற எண்ணம். ஆனாலும் பாராட்டப்பட வேண்டியதே !

பொங்குக பெருமையுடன் பொங்குதமிழ் !

  • கருத்துக்கள உறவுகள்

தூயா சொல்வதைப் போல சிட்னியில் இப்பொழுது தமிழர்கள் முன்பை விட அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். சிலவருடங்களுக்கு முன்பு இப்படியான நிகழ்வுகளுக்கு செல்லாத விரும்பாத ஒருவரை இந்நிகழ்வில் சந்தித்தேன். போராட்டத்தினைப் பார்த்து தாயகத்தில் வளர்ந்த எங்களை விட, அவுஸ்திரெலியாவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் எங்களது தலைவர் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறார்களே என்று சொல்லி, இந்நிகழ்வுக்கு வராத தமிழர்கள் மீது கோபப்பட்டார். இதற்குக் காரணம் அவருடைய பிள்ளைகள். அவுஸ்திரெலியாவில் பிறந்த அவருடைய பிள்ளைகள் அவரை இந்நிகவுக்கு அழைத்திருந்தார்கள். நேற்றைய நிகழ்வில் தான் அவர் முதல் முதலாக தாயகம் சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொண்டார். இனிமேல் அவர் எல்லா நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்வதாகச் சொன்னார். அடுத்த தலைமுறையுடன் தமிழும், தாயக உணர்வும் குறைந்துவிடும் என்று சொல்பவர்கள் மத்தியில் அடுத்த தலைமுறைக்கும் தமிழையும், தாயக உணர்வையும் அவுஸ்திரெலியாவில் பிறந்த தமிழர்கள் கொண்டு செல்வார்கள் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நல்ல சனம் நிகழ்வு சிறப்பாக ஒழுங்காக இருந்தது..இப்படி ஒரு எழுச்சியை சிட்னியில் கான மகிழ்சியாகவும் இருந்தது...

அப்படியா.. நல்லது.. திறம்பட நடத்திய அமைப்பாளர்கள், மற்றும் கலந்து கொண்ட நம்மவர்களுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

Sivajilingam seeks referendum to decide Tamil Eelam

Let the International Community hold a referendum to get the will of Eezham Tamils for an independent homeland if it is not convinced of their sentiments shown explicitly through the events of Pongku Thamizh all over the world. Australia supported such a referendum in East Timor, said Tamil National Alliance MP, Sivajilingkam to TamilNet, when he came to address the Pongku Thamizh event held at Sydney on Monday.

Speaking at the event, Mr. Gnanam Sivathamby, a former principal said that the International community is ignorant of the fact who are the terrorists and who are the terrorized in Sri Lanka.

"We do not want war. The Tamils are a peace-loving people. We want a peaceful solution. But, we want peace with justice and freedom", said a young member who spoke at the event.

"We have witnessed too much discrimination, too much blood shed and too little justice. It is too late and we have come too far to compromise on Thamizh Eezham" spoke another young member.

Over 3000 Tamil Australians gathered at Mason Park in Sydney Sunday afternoon for the event, which was largely organized and addressed by the Tamil youth of Australia.

Many of them attended were clad in Red and Yellow and carried pictures of the LTTE leader Pirapaharan.

A similar event was held in Melbourne on Saturday.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26279

ஒ..அப்ப எல்லாரும் பொங்க போனனியளோ..சா..ஒருத்தரையும் காண ஏலாம போச்சே உந்த சுண்டல் அண்ணாவை தவிர பாருங்கோ..சரி அதை விடுவோம் நாங்கள்.. :D

எங்கன்ட தூயிஸ் சொன்ன மாதிரி சிட்னியில் இளைஞர்களே "பொங்கு தமிழை "முன்னின்று நடத்தினார்கள்..அந்த இளைஞர் குளாமிற்கு முதலில் பாராட்டுகளை தெரிவிப்பதுடன்..இளைஞர்கள் இவ்வாறான ஒரு நிகழ்வினை முன்னின்று நடாத்த வழி அமைத்த பெரியவர்களையும் நிச்சயமாக பாராட்ட தான் வேண்டும்.. :) (என்ன நான் சொல்லுறது சரி தானே எங்க எல்லாரும் "ஓ" போடுங்கோ பெரிசுகளுக்கு)..

ம்ம்..வழமையா நடக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எங்கன்ட "சிட்னி டமிழ்ஸ்" அப்படி இப்படி கொஞ்ச பேர் தான் வருவீனம் அல்லோ இந்த நிகழ்வின் போது அத்தகைய குறை இன்றி எல்லாரும் உணர்வுபூர்வமாகவே கலந்து "பொங்கு தமிழை" நன்றாகவே பொங்கினர்.. :lol:

இந்த நிகழ்வின் போது எமது தமிழ் ஊடகங்களை மட்டும் அழைக்காமல் வேறு ஊடகங்களையும் அழைத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து..(ஏனேனில் அவ்வாறு செய்தால் அது பலரை சென்றடையும்)..அத்தோடு மைதானதிற்கு பல்லின கலாச்சார மக்கள் என்ன நடக்கிறது எண்டு பார்வையிட வந்தவர்கள்,

அவர்களுக்கு என்ன நடக்கிறது எண்டு தெரியாம வினாவியமையை பார்க்க கூடியதாக இருந்தது..சில பேருக்கு விளக்கம் கொடுக்கபட்டது..இந்த குறையினையும் நிவர்த்தி செய்திருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது..ஆனால் இது ஒரு பெரிய குறையாக பார்க்கவில்லை..எனி வரும் காலங்களிள் இத்தகைய விடயங்களிளும் கவனம் எடுப்பது நல்லது எண்டு நினைக்கிறேன்.. :lol:

நீங்கள் என்ன நினைக்கிறியள்??

இறுதி வரை சோர்வின்றி "பொங்கு தமிழை" வழி நடாத்திய சென்ற சிட்னி இளையோர்களை பாராட்ட தான் வேண்டும்..அத்துடன் அங்கு மேடையேறிய நாடகம் பலரையும் கவர்ந்திழுத்தது..அதில மகிந்தா பாத்திரத்தில நடித்தவர் திறம்பட செய்திருந்தார் எண்டு தான் சொல்ல வேண்டும்..

அதில ஊடகவியாளர் மகிந்தாவிட்ட ஒரு கேள்வி கேட்பார்..உங்கன்ட மகிந்த சிந்தனை வந்து தமிழர்களை அல்லபட வைக்கிறது எண்டு அதற்கு மகிந்தாவா நடித்தவர் சொல்லுவார்..

"நான் தெமிழக்கே சகோதரய்யா"..(தமிழர்களின் சகோதரன்)..

புத்தா என்ன சொல்லி இருக்கிறார்..

துன்பபடுற மாட்டை கொல்லுறது தப்பில்லை"

ஏம தமாய்..(அதை போல தான்)

நானும் வன்னியில கஷ்டபடுற மக்களை கொல்லுறன்

மிச்ச மனிசரை புசலாவையில வைத்து சாப்பாடு போடுறன்.

எண்டு.. :)

பிறகு அந்த ஊடகவியளாளர் கேட்பார்..நீங்க இன்னைக்கு சொன்னத எல்லாத்தையும் நான் பத்திரிகையில போடட்டா எண்டு..!!

உடனே..மகிந்தா கோபபட்டு எழுந்து..நான் இன்னைக்கு காலம்பறை ஒன்னு..சொல்லுவன்..(கவச என்னொன்று சொல்லுவேன்)..பின்னேரம் இன்னொன்று சொல்லுவேன்.."கெட்ட இன்னொன்று சொல்லுவன்"..இதை எல்லாம் நீங்க எழுதினியள் எண்டா "பிள்ளையாரை வைத்து பிடித்திடுவன் என்பார்"..

உடனே "டக்கிளஸ்" சொல்லுவார்..பிள்ளையார் எண்டா முருகனின்ட சகோதரன் பிள்ளையார் இல்லை..முதலமைச்சன் பிள்ளையார் எண்டு.. :D

உடனே..அந்த ஊடகவியலாளர்..சொல்லுவார் "இப்படி நாங்கள் பேனாவை பிடிக்கிறதை விட"..தூக்கி எறிந்து போட்டு பேசாம "துப்பாக்கி ஏந்தலாம் எண்டு"..இத்தோடு அந்த நாடகம் முடிவடைந்தாலும்..(இங்கே அங்கே நடந்த நாடகத்தில சில பகுதிகளை மட்டும் தான் எழுதினான்)..

அந்த நாடகம் முடிவடைந்த பின்..சிலவற்ற கூறுவார்கள் அது தான் முக்கியம்..அதாவது "ஊடக சுகந்திரம்" என்று கதறும் உலகம் எங்களின் பேனை முனைக்களை அடக்கும் போது மெளனம் சாதிப்பது தான் ஏனோ..??..தராக்கி முதல் இன்று எங்களுடைய ஊடகவியளார்கள் படுகொலை செய்யபடுவதும் சிறையில் அடைக்கபடும் சம்பவங்களை பார்த்தும் உலகம் கண் விழிக்காம இருப்பது தான் ஏனோ??

எங்களின் குரல் இவர்களுக்காகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று...(இதை நாங்கள் எல்லாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்)..இதற்காக தான் நான் முதலில் குறிப்பிட்டேன் எங்களுடைய ஊடகங்கள் தவிர ஏனைய ஊடகங்களும் இங்கே வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று.. :lol:

என்றாலும் நாளைய தலைமுறை இளைஞர்களின் தலைமுறை..அவர்கள் நின்று இந்த "பொங்கு தமிழை" வழி நடாத்தியது மகிழ்ச்சி ..ஏனேனில் அவர்கள் இதனை திறம்பட எனி செய்வார்கள் என்ற நம்பிக்கையே ஆகும்..மிகுதி நடந்தவற்றை தூயிஸ் மிகவும் சுவாரசியமாக தந்திருக்கா அல்லோ..

பிறகென்ன "ஜோனி அண்ணாவின்" ஊர் ஊராய் பொங்கு தமிழ் என்ட...கானம் பொங்கு தமிழ் முடிந்து இப்பவும் காதுகுள்ள ஒலிக்குதாக்கும்.. :D

அவுஸ்ரெலிய அரசாங்கதிற்கும் நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்... :D

அப்ப நான் வரட்டா!!

பி.கு - இனி வரும் காலங்களிள் இப்படியான நிகழ்வுகள் நடைபெறும் போது மைதானத்தில அங்க இங்க எண்டு பரந்து நிற்காமல எல்லாரும் ஒன்றாக நின்றால் நன்றாக இருக்கும் என்ன நினைக்கிறியள் அது எங்களுக்கு இன்னும் பலமாகவும் அமையும் அல்லோ..!!

ம்ம் நல்ல சனம் நிகழ்வு சிறப்பாக ஒழுங்காக இருந்தது..இப்படி ஒரு எழுச்சியை சிட்னியில் கான மகிழ்சியாகவும் இருந்தது...

ஒமோம் சுண்டல் அண்ணே..அங்க நன்ன பிள்ளையா இருந்த என்ன கலாய்த்து போட்டியள் தானே :lol: ..இருங்கோ இருங்கோ "பப்ளிற்கு" முன்னால தான் நாம நல்ல பிள்ளை இருக்குதுங்கண்ணா உங்களுக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மெல்பேனிலும் இளையவர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவாழ் ஈழத்தமிழர்களே நன்றிகள் உங்களது தாய்நாட்டுக்கான சேவையை நாங்கள் மதிக்கிறோம் .நன்றிகள் உறவுகளே

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

இணைப்பை இங்கு பதித்தமைக்கு நன்றிகள் கந்தப்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.