Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்

Featured Replies

ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்

[வியாழக்கிழமை, 17 யூலை 2008, 03:59 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால் இது குறித்து உடனடியாக காவல்துறை மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் மாவட்ட நீதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிபதி முன்னிலையில் புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் வரை புதைகுழி தோண்டப்படவில்லை என்றும் இன்று மாலை புதைகுழி தோண்டப்படலாம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதைகுழிக்கு வெளியே தெரியும் தலைப்பகுதி மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட ஒருவரினது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதினம்

ஈ.பி.டி.பி.யினால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார்

ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட சுரேஸ்குமார் என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிள்ளையான் குழுவினரால் நேற்றைய தினம் இரண்டு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் ஈ.பி.டி.பி. காரியாலத்தின் பின்புறத்தில் குறித்த சடலத்தைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கொம்மாதுறைப் பகுதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஒருவரது சடலம் காவல்துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் உத்தரவின் பேரில் இந்த சடலம் ஈ.பி.டி.பியின் முன்னர் நடத்தப்பட்டுவந்த முகாமொன்றின் வளவிலுள்ள மரக்கறித் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதென ஏறாவூர் பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி நாலக்க தெரிவித்துள்ளார். தோண்டியெடுக்கப்பட்ட மேற்படி சடலம் தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவருடையதென்று அவரது தந்தை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தநபர் கடந்தமாதம் பத்தொன்பதாம் திகதி செங்கலடியிலுள்ள பெற்றோல் செற்றுக்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டதாக பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளையடுத்தே ஈ.பி.டி.பியைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆட்கடத்தல் தொடர்பாக மேலும் இருவர் செங்கலடியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், இந்த இருவர்மீதும் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சடலம் புதைக்கப்பட்ட இடம் கண்டு பிடிக்கப் பட்டிருந்ததாகவும் பதில் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இரண்டு கத்திகளும் மீட்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பில் மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டிருந்த பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவரே சுரேஸ்குமார் என்றும் அவரே படுகொலை செய்யப் பட்டிருப்பதாகவும் ஈ.பி.டி.பியினர் இருவர் பிள்ளையான் குழுவால் கடத்திச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சடலம் புதைக்கப்பட்ட விடயம் வெளிவந்து இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

http://puspaviji.blogspot.com/

Edited by puspaviji

மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் போலீசார் விசாரணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஈபிடிபி அமைப்பினரால் கடத்தப்பட்டாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படா நீங்க உண்மைய ஒத்துக்கொண்டிருக்கிறீங்க....

உன்னுடைய ஆட்கள் இல்லையெண்டா அரசாங்கம் அவர்களை கைது செய்யுமா???

நடக்கிற காரியமாடா இது.

நீதிபதியும் வந்தார் பார்த்தார்....கைது செய்ய சொல்வார்...பிறகு அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவார்கள்.இதெல்லாம் தெரிந்த விசயம் தானே பாருங்கோ.

இப்படி இன்னும் எத்தனை புதைகுழிகள் இருக்குதோ எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்.

நடக்கட்டும் நடக்கட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்ரை **டியை நக்க என்னவெல்லாம் செய்து , போட்டி போடுகின்றார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.