Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த நாடு எப்பொழுதும் பெரும்பான்மை சிங்களவராலேயே ஆளப்படும்! - இராணுவத்தளபதி சரத் பொன்சேகா

Featured Replies

இலங்கை சிங்களவர்களாலேயே ஆளப்படும் - தளபதி

சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒரு நாட்டில் ஆள்வார்களாயின் அது பெரும் ஆபத்துக்கு உரியதாகும். அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் அது நடைபெற முடியாத ஒன்றாகும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த நாடு எப்போதும் 74 சதவீதத்தினரான சிங்கள இனத்தவராலேயே ஆளப்படும்.

இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் தியாகம் செய்தே ஆக வேண்டும். இந்த வேளையில் சாதாரண மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவையே.

அரச சார்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பண வீக்கம் 29 சத வீதத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சாதாரண மக்கள் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாததாகும். அரசாங்கம் பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் போராடி வருகிறது என்பதனை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

கெரிலாக்கள் நாட்டின் வடக்கில் தனியரசு ஒன்றை நடத்துகிறார்கள். அதனை உடைத்து விடுவதற்காக கடந்த வருடம் ஜுலை மாதம் தொடக்கம் பாதுகாப்புப் படையினர் போரிட்டு வருகிறார்கள். இந்த முயற்சி மிக மெதுவாகவே நடை பெற்று வருகிறது என்றார்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு எப்பொழுதும் பெரும்பான்மை இனத்தவராலேயே ஆளப்பட வேண்டும். அதனை விடுத்து சிறுபான்மை இனத்தவரால் ஆளப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். இந்த வகையில் 79 சதவீதத்தினரைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள இனத்தவராலேயே எப்பொழுதும் ஆளப்படும் என கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாக்க நாம் பல தியாகங்களை மேற்கொண்டே ஆக வேண்டும். நாட்டின் பணவீக்கம் 29 சதவீதத்தில் இருக்கும் வேளையிலும், வடக்கில் சிறுபான்மையினரைக் கொண்ட கெரிலாக்களின் ஆட்சியில் இருந்து மீட்கும் யுத்த நடவடிக்கையிலும் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரக் கஸ்டங்கள் தவிர்க்க முடியாதவை. இந்த சுமையை அவர்கள் தாங்கிக் கொண்டே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக,உறுதியாக, ஆணித்தரமாக கூறிக்கொள்வது என்னவெனில் சிறிலங்காவை ஆள்வது, ஆளப்போவது சிங்கள இனம் என்பது உறுதியானது. ஆனால் தமிழீழம் எப்போதுமே சிக்களவர்களால் ஆள முடியாது. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.