Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் பெருகி வரும் ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கு

Featured Replies

ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதைத் தனது கருத்துக் கணிப்பு விவரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றது "ஆனந்த விகடன்' சஞ்சிகை.

தமிழக மக்களின் தமிழின உணர்வுகளைப் புறக்கணித்து அல்லது அதனைக் கவனத்திலேயே எடுக்காமல் நடந்து கொள்வதுதான் புதுடில்லி அரசின் போக்காகவும் இருந்து வருகின்றது.

இப்போதும் கூட, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான எண்ணப் போக்கு தீவிரப்பட்டு வருகையில் அதைக் கவனத்தில் எடுக்காமலேயே புதுடில்லி காய் நகர்த்தல்களைச் செய்கிறது.

கொழும்பு "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புதிய கூட்டுப் பட்டயம் ஒன்றை இந்தியா பிரேரித்து வெளிப்படுத்திக் காய் நகர்த்துகின்றது.

"பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு' என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், கைது செய்யப்படும் "பயங்கரவாதிகளை' சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது உட்படப் பல விடயங்கள் உள்ளடக்கப்படவிருக்கின்றன என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உண்மையானால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை மடக்குவதற்கு இலங்கையோடு சேர்ந்து புதுடில்லி விரிக்கும் வலையாகவே இது கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான எண்ணப் போக்குத் தீவிரம் பெற்று வருகையிலேயே புலிகளை மடக்குவதற்கான தனது கைங்கரியத்தை மறுபுறத்தில் புதுடில்லி தீவிரப்படுத்துகின்றது.

இது தமிழகத்தை எள்ளி நகையாடும் புதுடில்லி ஆட்சியாளரின் திமிர்த்தனமேயன்றி வேறில்லை.

இன்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி போன்றோரின் தயவில்தான் புதுடில்லியில் மத்திய அரசே தாக்குப்பிடித்து நிற்கின்றது. அப்படி இருக்கையில் ஈழத் தமிழர் விடயத்தில் மட்டும் தமிழக மக்களையும், தமிழக மாநில அரசுத் தலைமையையும் புதுடில்லி துச்சமென மதித்து, உதாசீனப்படுத்தி நிற்பது பொறுத்துக் கொள்ளத் தக்கது அல்ல.

தமிழகத்தில் உள்ள மக்களில் 55 வீதத்தினர் எப்போதும் தாங்கள் புலிகளை ஆதரிக்கின்றனர் என்பதை ஆனந்த விகடனின் கருத்துக் கணிப்பு மூலம் வெளிப்படுத்தி யிருக்கின்றார்கள்.

தமிழக மக்களில் 28 வீதத்தினர் மட்டுமே புலிகள் மீதான தடை இந்தியாவில் தொடர வேண்டும் எனக் கருதுகின்றார்கள். சுமார் 48 வீதத்தினர் தடையை நீக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்காகப் புலிகளின் தலைவர் கைது செய்யப்படவேண்டும் என்று கூறுபவர்கள் கூட தமிழகத்தில் சுமார் 43 வீதத்தினர்தான். அவர் குற்றமற்றவர் என்றும், அவரை விட்டு விடலாம் என்றும் கருதுபவர்கள் சுமார் 57 வீதத்தினராவர்.

இப்படி இலங்கையோடு சேர்ந்து காய் நகர்த்தும் புதுடில்லி அரசுத் தலைமை பிறிதொரு விடயத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

அதனைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனே மீண்டும் தெளிவாகச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்தியிருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், ஆனாலும் எமது விலை மதிப்பற்ற சொத்தான, தமிழீழத்தின் ஆன்மாவான எமது தேசியத் தலைவரையே கைது செய்ய வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட பகுதியினர் கேட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. இது என்னத்தைக் காட்டுகின்றதென்றால், இன்னும் தமிழ்நாட்டில் எமது போராட்டம் பற்றியோ அல்லது இந்தியா இங்கு நிகழ்த்தும் அட்டூழிய விளையாட்டுக்கள் பற்றியோ அல்லது 1987 இல் ராஜீவ் என்கிற தலைக்கனமும் அதிகார வெறியும் பிடித்த மனிதர் செய்த தமிழர் படுகொலை பற்றியோ சரியான விளக்கமில்லை என்பதைத்தான்.

தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு இந்தப் பணியைச் செய்வதில் முக்கிய பொறுப்பொன்று இருக்கிறது. இவ்வளவு காலமும் ஈழத்தில் இந்தியாவின் ஆசியோடு நடந்தேறிவரும் தமிழர் படுகொலை பற்றிய தெளிவை இந்த ஊடகங்கள் மக்களுக்கு ஊட்ட வேண்டும். அப்போதுதான் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என்ற அறிவற்ற பேச்சுக்களும், எண்ணங்களும் இல்லாமல்ப் போகும்.இதை அவர்கள் செய்வார்களா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற எழுச்சிபூர்வ ஆதரவை முடக்க வேண்டு; என்பதற்காக மீண்டும் ஒரு தம்பியண்ணா என்ற ஒரு நாடகத்தை இந்திய அரசு துவக்கியிருக்கின்றது. எனவே ஆதரவு தந்த வாய்கள் மூடப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அதென்ன "தம்பியண்ணா நாடகம்"? மேலதிக விபரங்கள்........
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் பொன்னையா அவர்களே. எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு இருக்கிறதோ அதை விட சற்றுக் குறைவாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறைக்க முடியாது. அதற்கு ஏற்றாற் போல் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தெளிவு உண்டாகத்தக்கதான நிகழ்ச்சித்திட்டங்களை தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். அப்பொழுது இன்னும் அதிகமாக வீரியமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு உருவாகும்.

தமிழகத்தில் சுமார் 25% பேர் ... தமிழ் அல்லாத தெலுங்கு,கன்னடம்,மற்றும் மலையாளத்தை தாய்மொழியாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் எண்ண வேண்டும்....

விகடன் கூறியதை விட புலிகளுக்கு ஆதரவு தமிழகத்தில் அதிகம்..... எப்போதும் தாங்கள் புலிகளை ஆதரிப்பதாக கூறுவோர் எப்படி புலித்தலைவரை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள் ????

தமிழகத்தில் சுமார் 25% பேர் ... தமிழ் அல்லாத தெலுங்கு,கன்னடம்,மற்றும் மலையாளத்தை தாய்மொழியாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் எண்ண வேண்டும்....

விகடன் கூறியதை விட புலிகளுக்கு ஆதரவு தமிழகத்தில் அதிகம்..... எப்போதும் தாங்கள் புலிகளை ஆதரிப்பதாக கூறுவோர் எப்படி புலித்தலைவரை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள் ????

vikatan_survey_20080801003.jpg

படம்-puthinam

கருத்து கணிப்பின் இந்த முடிவையா சொல்கிறீர்கள்....??? அதில் 43% மானோர் கைது செய்யபட வேண்டும் எண்று சொல்லி இருப்பது உண்மைதான்... ஆனால் 57% மானோர் குற்றமற்றவர் எண்றோ அல்லது குற்றம் மன்னிக்க பட வேண்டும் எண்றோ கருதுகிறார்களே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.