Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சறுக்கிய சார்க் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சறுக்கிய சார்க் மாநாடு

இலங்கையில் கடந்த இருபத்தி ஏழாம் திகதி துவங்கி நடந்து வரும் சார்க் மாநாடுஇ உலகில் பல உறுப்பு நாடுகள் தங்களது பிராந்தியத்தை ஒட்டிய அண்டை நாடுகள் என பல அமைப்புகள் உள்ளது. நாம் அதிகம் அறிந்தது காமன் வெல்தஇ யூரோ ஆபிர்க்கன்இ பெடரேசன் ஆப் இஸ்லாமிக் நேசன்இ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை நாம் அறிந்தவை நாம் அறியாதவைகள் பல ஆம் சுமார் 260க்கும் மேற்பட்ட பல உலக நாடுகளில் கூட்டமைப்பு மற்றும் குழுக்கள் உள்ளது. இவற்றில் பல சனநாயக அமைப்பு கொண்ட நாடுகள்.

முக்கியமாக யூரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் கொள்கைகள் அனைத்தும் 5 வருடங்களுக்கு ஒருமுறை அந்த சமயத்தில் ஏற்படும் பொருளாதார மாறுதலுக்கேற்ப அந்தந்த நாடுகளில் முதலில் மக்களிடம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும் வரும் மாநாட்டில் இது பற்றி பேச‌போகிறோம் என்று. அதில் மக்கள் தங்கள் கருத்தைதெரிவிப்பார்கள். அப்படி அதிக மக்கள் தேர்ந்தேடுத்த கருத்தை மேற்கொண்டு மாநாட்டில்அந்தந்த நாடுகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும்இ அதன் பிறகு சாதக பாதகங்கள்ஆராய்ந்து மாநாட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

இதுதான் முறை ஒரு உதாரணத்திற்கு சொல்கிறோம். ஆனால் இந்தியாஇ உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் அமைப்பான சார்க் ஒரு உலக அரங்கில் காமடி களமாகமாறிப்போனது. ஒரு கொள்கையுமில்லைஇ ஒரு முடிவு காணப்படவேண்டிய தீர்மானங்கள் இல்லை.திட்டங்கள் இல்லைஇ மாறிவரும் பொருளாதார சூழழுக்கு ஏற்ப உறுப்பு நாடுகள் என்ன செய்யவேண்டும் என்ற தீர்வு காணப்படவேண்டிய வரைமுறையில்லை. ஏன் சார்க் உறுப்பு நாடுகள்தங்கள் மக்களிடன் இன்னது செய்ய போகிறோம் என்ற ஒரு தீர்மானம் கூட வைக்க வில்லை.

ஆனால் ஒன்றைமட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்தது அதாவது ஏதோ பாதுகாப்பில்லாத பயங்கரவாத நாட்டிற்குள் நுழைவது போன்ற ஒரு மாயத்தை உலகிற்கு எடுத்து காட்ட இந்தியா ஒரு மாதத்திற்கு முன்பே தனது படைகளை அனுப்பஇ பாகிஸ்தானோ நானும்தான் பலசாலி எனக்கு மட்டும் படைகள் இல்லையா என பதிலுக்கு தனது படைகளையும் அனுப்ப உலகம் இவர்களது செயல்களை எள்ளி நகையாடியது.

இந்திய பிரதமர் விஜயம் என்பது இலங்கைக்கு ஒரு கௌரவம் சார்ந்தவிடயம் தான். அதே நேரத்தில் பாகிஸ்தானின் மடியில் செல்ல பூனையாய் சுனங்கி நிற்கும்மகிந்தாவில் நிலை கண்கூடு.

சரி அப்படி என்ன கண்டது சார்க் மாநாடு.முக்கியமாக சார்க நாடுகள் அனைத்துமே தங்களின் பாரம்பரியங்கள் கலாச்சாரங்களின்ஒன்றானது. இது முதல் காரணமாக இருந்தாலும் இந்த நாடுகளுக்கு ஒற்றுமை என்பதுஎள்ளளவும் இல்லை என்பது கண்கூடு.

ஆம் சுமார் 3 வருடங்களாக கார்கிலுக்கு பிறகு சும்மா இருந்தபாகிஸ்தான் துருப்புகள் மீண்டும் கடந்த வாரம் இந்திய பகுதிக்குள் அத்து மீறிநுழைந்தது. அதுவும் சார்க் மாநாடு நடைபெறும் சமயத்தில் இது ஒரு தன்னிச்சை சம்பவம் இல்லை பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஒரு செய்தி சொல்ல வருகிறது. ஆம் சார்க் மாநாட்டில்நீதான் பெரியவன் என்ற மமதை வேண்டாம் என்ற செய்தியை சொல்லிவிடுகிறது.

மேலும் பங்களாதேசில் இருந்து இயங்கும் தீவிரவாத குழுக்கள்மூலமாகத்தான் அகமதாபாத் மற்றும் பெங்களூர் குண்டுவெடிப்பு நடந்தது என்பது புலனாய்வுதுறையின் அறிக்கைஇ நேபாளத்தின் எல்லைகள் மூலமாக எளிதில் தீவிரவாதிகள் இந்தியாவில்நுழைகின்றனர். பூடானுடனோ சீனாவுடனோ சேர்ந்து எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்குவேட்டு வைக்கிறது.

இலங்கையோ சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவு கொள்கையை இந்தியாவின் இந்தியாவின் வேண்டுகோளையும் மீறி நடத்தி வருகிறது. இப்படி வெவ்வேறுதிசையில் ஓடும் குதிரையை கொண்டு எந்த கோட்டையை பிடிக்க சார்க் மாநாடுநடத்துகிறார்கள் என்பது இன்னும் புரியாத விளங்காத விடயம்.

மற்ற விடயத்தை விட்டுவிடுவோம் சுமார் அரை நூற்றாண்டுகாலமாகநடைபெற்று வரும் இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு கொண்டு போனது சார்க் நாடுகள். ஒருபுறம் போராளிகள் போர் நிறுத்தம் அறிவித்தும் சார்க் நாடுகள் கூடும் சமயத்தில்இ இல்லை இல்லை போர் தொடரும் என இலங்கை அறிவித்து பற்றி சார்க் உறுப்பு நாடுகள் எதுவும் வாயை திறக்கவே இல்லை. அதிலும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா இன்னும்இதற்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை. போராளிகளின் உடலங்கள் நிர்வாணப்படுத்த பட்டுகொண்டு சென்ற நிலையில் உலகமே அதை கண்டித்த போது குருடாக இருந்த நாடுதானேஇந்தியா.

சமீபத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினறால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அது குறித்த இன்றுவரை எந்த ஒரு அனுதாபமும் தெரிவிக்காதஅல்லது சார்க் மாநாட்டில் இது பற்றி ஒரு தீர்மானமும் வைக்கதாத இந்திய அரசு சார்க்மாநாட்டில் என்ன சாதிக்க சென்றுள்ளது என்றுதான் உலகிற்கு புரியவில்லை. வல்லரசாவேன் வல்லரசாவேன் என்று ஏடுகளில் பிரச்சாரமிடும் இந்தியா தன்னை சுற்றியுள்ள சிறியநாடுகளின் வளை தோண்டும் விடயத்தை நிறுத்த முடியவில்லைஇ சார்க்கில் என்ன பேசிசாதிக்க போகிறது. ஒன்று மட்டும் விளங்குகிறதுஇ பிரபாகரன் என்னும் ஒரு தனிமனிதனுக்குபயந்து கொண்டிருக்கும் இலங்கைக்கு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த சார்க் கூட்டம்என்று தெளிவாக தெரிகிறது. முக்கியமாக தெனிந்தியாவில் உள்ள தமிழர்கள் விடயத்தில்வெறும் கண்துடைப்பு நாடகம் காட்ட பிரதமர் அவர்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்குதீர்வு காணப்படும் என்று சொன்னது.

ஆனால் கச்சத்தீவு விடயம் பற்றியோஇ அல்லது மலையகத்து தமிழர்கள்தங்கள் வாழ்விடங்களை விட்டு கூண்டோடு வெளியேற்றியது பற்றியோஇ பல்லாண்டுகளாகஉலகமெங்கும் அகதிகளாக வாழும் தமிழர்களை பற்றியோ அக்கரை எதுவுமில்லாமல் சார்க்கில்என்ன சொல்ல போகிறார்கள். சார்க் நாடுகளின் பிரதான தலைவர்கள்.

எது எப்படியோ போர்வெறி கொண்ட ஒரு அரசுக்கு பல்லக்கு தூக்கும் உறுப்பு நாடுகளில் ஒன்று அகிம்சையை போதித்த மகாத்மா பிறந்த நாடு.

நன்றி அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளுக்கு ஒற்றுமை என்பதுஎள்ளளவும் இல்லை என்பது கண்கூடு.

இதுக்குள்ளை சார்க்கிற்கு பொது நாணயம் , உணவு வங்கி என்ற பிதற்றல் வேறை .

ஏதோ சொல்லுக்கு சொல் பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று கத்தி வித்தாங்களையே என்iயாய ? அது

சறுக்கிய சார்க் மாநாடு

:lol::lol::lol:

சறுக்கிய மாநாடு யார் ஆப்கானின் ஐனாதிபதிக்குத் தானே ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்னத்துக்கு இந்த சாக்கு மகாநாட்டை நடத்தினாங்கள் ? இந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த மகாநாட்டால ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இதால இப்ப என்னத்தை கண்டாங்கள்? இப்படி பல கேள்விகள் பலபேரின் மனங்களில் எழக்கூடும் ஆனால் அவற்றுக்குரிய விடை ???? :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.