Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

beijing ஒலிம்பிக் இன்று கோலாகல தொடக்கம்...Live செய்திகள் & பதக்க விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BeijingOlympics.jpg

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன.

உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பு நடைபெறும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் இந்த தொடக்க நிகழ்ச்சியை டிவி மூலம் கண்டுகளிப்பார்கள். அதேசமயம், 91 ஆயிரம் பேர் நேரடியாக தொடக்க விழாவை கண்டுகளிப்பார்கள்.

இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தேசியக் கொடியை ஏந்தியபடி தலைமையேற்று செல்வார்.

இந்தியாவின் சார்பில் மொத்தம் 56 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தடகளம், துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், வில்வித்தை, ஜூடோ, இறகுப் பந்து, குத்துச்சண்டை, துடுப்புப் படகு, நீச்சல், மல்யுத்தம், பாய்மரப்படகு ஆகிய பிரிவுகளில் இந்தியா பங்கேற்கிறது.

நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினமே நிறைவு விழா நடைபெறுகிறது.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை மாலை 5.30 மணி முதலே தூர்தர்ஷனில் கண்டுகளிக்கலாம்.

ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா..

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 8 தங்கப் பதக்கங்களை (1928 முதல் 1980 வரை-அனைத்துமே ஹாக்கியில்) பெற்றுள்ளது. நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.

1980ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் இடையே வெகு தூரமாகி விட்டது. ரத்தோர், 2004ம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றதே இந்தியா பெற்ற கடைசிப் பதக்கமாக உள்ளது.

தட்ஸ்தமிழ்.

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய ஆரம்ப நாள் நிகழ்வுகளை பீஜிங்கில் இருந்து பிபிசி நேரடியாக அதன் இணையத்தளம் வழி வழங்கிக் கொண்டிருக்கிறது..

http://news.bbc.co.uk/sport1/hi/olympics/default.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் தொலைக்காட்சி அலைவரிசை 7ல் நேரலி ஒளிபறப்புச் செய்கிறார்கள். அதில் மகிந்தாவும் பாரியாரும் , புஸ்ஸுக்கும், அவரது பாரியாருக்கும் பின்வரிசையில் இருந்தார்கள். சோனியா காந்தி ,பிரித்தானியா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன், டென்மார்க் இளவரசியையும் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இறுதிக்கட்டத்தில் தான் பார்க்க கூடியதாக இருந்தது , ஆரம்ப நிகழ்வை யாராவது யாழ் களத்தில் இணைத்து விடுங்களேன் .

இன்று விசேடமான நாள் ,

08 . 08 . 2008 .

திகதியும் எட்டு கூட்டுதொகையும் எட்டு . :(

olympicslogobike2500808cs4.jpg

:(:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லாயிருக்கு வசம்பு ,

ஐந்து கண்டக்களை குறிக்கும் , ஐந்து வழையங்களை துவிச்சக்கரவண்டியில் பூட்டிக்கொண்டு போகும் சீனாக்காறனின் சிந்தனை ரசிக்கக்கூடியதாக உள்ளது . :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இறுதிக்கட்டத்தில் தான் பார்க்க கூடியதாக இருந்தது , ஆரம்ப நிகழ்வை யாராவது யாழ் களத்தில் இணைத்து விடுங்களேன் .

இன்று விசேடமான நாள் ,

08 . 08 . 2008 .

திகதியும் எட்டு கூட்டுதொகையும் எட்டு . :(

பெய்ஜிங்: நம் ஊரில் 8 என்றாலே பலருக்கு எட்டிக்காயாய் கசக்கும். எட்டு என்ற எண்ணில் முடியும் எதையும் பெரும்பாலும் மறுத்துவிடுவார்கள், அதுவும் சாதாரண எண்தானே என்ற யோசனையே இல்லாமல்.

வாகனப் பதிவின் போது, எட்டாம் நம்பர் வராமலிருக்க லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருப்பார்கள்.

எட்டாம் தேதி எந்தக் காரியத்திலும் ஈடுபடாதவர்களும், எட்டு எழுத்து வருவது போல சினிமா தலைப்பு வைக்க விரும்பாதவர்களும் நிரம்பியது நம் ஊர்.

ஆனால் சீனர்கள் அப்படியல்ல... அவர்களுக்கு எட்டுதான் எல்லாமே.

எட்டு என்ற எண்ணை அவர்கள் கடவுளாகவே வணங்குகிறார்கள். அதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளை 08.08.08 என்ற தேதியில் தொடங்க முடிவு செய்தார்கள். அது மட்டுமல்ல அந்தப் போட்டிகள் துவங்கும் நேரத்தைப் பாருங்கள்...

அதுவும் சீன நேரப்படி இரவு 08 மணி 08 நிமிடம் 08 வினாடிகளில் தான் தொடங்கவுள்ளது. (இந்தியாவைவிட சீனா நேரம், 2 மணி 30 நிமிடங்கள் அட்வான்ஸ்)

அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டு ஒலிம்பிக் வீரர்களின் கூட்டுத் தொகையும் எட்டு என அமையும்படி தேர்வு செய்துள்ளார்களாம்.

இது ஏதோ இன்று நேற்று முடிவு செய்த விஷயமல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு செய்த போதே, இந்த தேதியையும் நேரத்தையும் சீன ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது.

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம்தான் ஆட்சியில் உள்ளதென்றாலும், மார்க்கெட் எகானமிக்கு மாறியதோடு மக்களின் பெரும்பாலான நம்பிக்கைகளில் குறுக்கே நிற்பதில்லை அரசு!

ஒலிம்பிக் மெடல்களையும் எட்டு வரும்படிதான் ஜெயிப்பார்களோ...!

thatstamil.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிம்பிக் போட்டிக்கு புதிய சிக்கல் கொடுக்கிறது: சோதனையில் கண்டறிய முடியாத இரு ஊக்கமருந்துகள்!

பீஜிங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை நடைமுறையில் உள்ள ஊக்க மருந்துகளைக் கண்டறியும் முறைகளால் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் முதல் வகை ஊக்க மருந்துக்கு ஏ.ஐ.சி.ஏ.ஆர். (அஐஇஅகீ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஊக்க மருந்தை எலிகளுக்கு செலுத்தி சோதித்துப் பார்த்ததில், சாதாரண எலிகளைவிட ஊக்க மருந்து செலுத்தப்பட்ட எலிகள் 44% வேகமாக செயல்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் சால்க் இன்ஸ் ரிரியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் இவான்ஸ் கூறியுள்ளார்.

இரண்டாவது வகை ஊக்க மருந்துக்கு ஜி.டபிள்யூ. 1516 (எஙி1516) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏ.ஐ.சி.ஆர். மருந்தை விட அதிக சக்தி வாய்ந்தது என்றும், இதனை உட்கொண்ட எலிகள் 77% துரிதமாக செயல்பட்டதுடன், ஊக்க மருந்து உட்கொள்ளாத எலிகள் ஓடிக் கடந்த தூரத்தை விட, 68 சதவீதம் கூடுதல் தூரம் ஓடியதும் தெரியவந்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊக்க மருந்து தடுப்பு சோதனைகளில் இந்த 2 மருந்துகளையும் கண்டறிய முடியாதென்பதால், இதனை ஒலிம்பிக் தடகள வீரர்கள் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது மறுக்க முடியாத வாதமாக உருவெடுத்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனம், உலக ஊக்க மருந்து தடுப்பு முகாமையுடன் இணைந்து ஜி.டபிள்யூ. 1516, ஏ.ஐ.சி.ஏ.ஆ.ர். ஊக்க மருந்துகளை கண்டறியும் சோதனையை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இது சாத்தியமில்லை என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சோதனையில் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள் குறித்து, இங்கிலாந்து ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைமை மருத்துவ அதிகாரி ஏற்கனவே அறிந்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://inioru.com/?p=602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.