Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்மண் தலை நிமிர்வதற்க்காக எங்கள் தலைகள் பணியட்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய தருணம். உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் விடுதலை ஆதரவாளர்கள் கடந்த கால அணுகுமுறையினால் அன்னியப் படுத்திவிட்ட புலம் பெயர்ந்த சமூக சக்திகளை மீண்டும் அணிதிரட்டியாகவேண்டிய தருணம். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலை சக்திகள் இதுகாறும் முன்வைக்கப் பட்ட எதிர் விமர்சனங்களை கருத்தில் எடுத்து விமர்சனம் மட்டுமன்றி சுயவிமர்சனங்களுக்கும் ஊடாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும்.

எல்லா அணிதிரட்டல்களும் கடந்த காலங்களைப்போல துருக்கிய பி.கே.கே பாணியில் எங்கள் பலத்தை காட்டுவதற்க்குப் பதிலாக முனர் ஏ.என்.சி செயல்பட்டதுபோல நாம் வாழும் மேற்க்கு நாடுகளின் மக்களை வெண்றெடுப்பதையே முன்னிலைப் படுத்த வேண்டியது அவசியமாகும். நாம் வாழும் நாட்டு மக்களதும் அரசியல் கட்சிகளதும் ஆதரவைத் திரட்டுவதன் மூஉலம் மட்டும்தான் களத்தில் நிற்கும் போராளிகளின் பாரிய சுமையை நாம் பகிர்ந்துகொள்ள முடியும். பாரிய ஆளனி வள நெருக்கடிகளின் மத்தியில் நமது போராளிகள் செயல் படுகிறார்கள். குவியும் எதிரியுடன் நின்று அடிபட்டு அதிக விலை கொடுக்கும் ஆபத்தான அணுகுமுறையை அவர்கள் சரியாகவே தவிர்த்துள்ளார்கள். குவியும் எதிரியை பரவலாக முன்னேற வைப்பதன்மூலம் ஐதாக்கிவிட்டு தாக்கி முறியடிக்கும் உத்தி அடிப்படையில் செயற்படும் நமது போராளிகளின் சுமைகளைப் பகிர்வதற்க்காக புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழரையும் சர்வதேச சமூகத்தையும் இணைக்கும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிகளைக் கட்டி எழுப்ப வேண்டும். இந்த அவசரப் பணி 1980பதுகளின் பின்னர் பல்வேறு காரணங்களால் ஒதுங்கி அல்லது ஒதுக்கப் பட்டிருக்கும் பல்துறை ஆற்றல் மிக்கவர்களுடன் மீண்டும் சேர்ந்து செயல் படுகிறதால் மட்டுமே சாத்தியமாகும். தாய்மண் தலை நிமிர்வதற்க்காக எங்கள் தலைகள் பணியட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இருந்து நீண்ட கட்டுரை எழுத முடியவில்லை. உங்கள் கருத்துக்கள்மூலம் இந்த விவாதத்தை முழுமைப் படுத்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

கடந்த 04.08.2008ல் சென்னைப் பல்கலைக்களகம் தமிழ் இலக்கியதுறை வெளியிட்ட எனது “பாலை” சிடி அல்பத்தின் இறுதிப் பாடல் “பண்டார வன்னியனின் படை நடந்த காடு, பணியாது ஒருபோதும் ஈழவர் எம் நாடு” என முடிகிறது. இது உறுதியானது. நிகழ்ச்சியில்பேசிய கவிஞர் மேத்தா போர்ப்பரணி என்று குறிப்பிட்டார், சென்னைப் பல்க்லைக்களக பவளவிழா அரங்கில் இடம்பெற்ற வெளீயீட்டு நிகழ்ச்சியில் பெச்சிய பாலுமஹேந்திரா, எஸ்போ, நா முத்துக்குமாரு போன்றவர்களும் எனது நம்பிக்கையை பகிர்ந்துகொண்டனர்,

நமது வெற்றி உறுதியானது

காலத்தின் தேவைக்கேற்ற கருத்து இது.களத்தில் நிற்கும் போராளிகளுக்கு பலத்தில் நிற்கும் நாங்கள் கவசமாக இருக்க வேண்டும்.எங்களுடைய பரந்துபட்ட பல்துறை சார்ந்த உறுதியான செயற்பாடுகள் தான் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும்.பணம் கொடுத்தால் விடுதலையை வென்று விடலாம் என்ற ரீதியில் வளர்க்கப்படும் கலாச்சாரம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.இந்த கலாச்சாரம் தான் வெற்றி பெற்றால் துள்ளிக் குதிப்பதும்.தோல்வியுற்றால் சோர்ந்து போவதும் தூற்றவதுமான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்க்கிறது.முதலில் மக்களை பார்வையாளர்கள் என்ற நிலையில் இருந்து பங்களாளர்கள் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும்.என்னுடைய மண்ணை என்னுடைய தாயகத்தை மீட்க நான் என்ன செய்தேன் என்ற கேள்வி ஒவ்வொருவருடைய மனதிலும் எழும்பம்படி செய்ய வேண்டும்?

புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகளின் கிளைகள் பகிரங்கமாக இயங்க வேண்டிய தேவை இல்லை. அங்கே நடைமுறையில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ தேசத்தக்கான நிழல் தூதரகங்கள் தான் இங்கே தேவை.குப்பியும் இலக்கத்தகடும் இல்லாத எவரும் விடுதலைப்பலிகளின் உறுப்பினர்கள் கிடையாது.புலத்தில்உள்ள அனைவருமே தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களே என்ற எண்ணத்தை முதன்மைப்படுத்த வேண்டும்.புலத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் யார் என்கிற விபரம் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லை. இங்கே பிறவிப்புரட்சியாளர்களாக விடுதலையின் தூண்களாக தங்களை அடையாளப்படத்தும் பிழைப்பவாதச் செயற்பாடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புறவுகளே இது தருணம். தவற விட்டு பின்னே வரும் அடுத்த தலை முறையின் பழிச்சொற்களுக்கு ஆளாகோம். சொந்தங்களே கை கொடுங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

கைகொடுக்கப் பலரும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் யாரந்த எஜமானன் எவரிடம் போய் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தலைபணிந்து நிற்பது என்பது புரியவில்லையே. தலை பணியும்போது யாராவது குட்டிவிட்டால் என்ன கெதி.

புலம்பெயாந்த சமூகம் செய்த தவறினால் இரண்டு விடுதலைப் போராட்டங்கள் பெரும் பின்னடைவை சந்தித்த வரலாறு நம் கண் முன் இருக்கிறது.

ஒன்று பலஸ்தீன விடுதலைப் போராட்டம்.இரண்டாவது குர்தீஸ் மக்களுடைய விடுதலைப் போராட்டம்.பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் யாசீர் அரபாத்துக்கு வயது முதிர்ந்து அவரது பிடியை தளர வைக்கும் முயற்சியில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் தீவிரமாக செயற்பட்டது.அதற்கு மேற்குலக உளவுத் துறைகளும் பக்க பலமாகச் செயற்பட்டன..

அரபாத்தை பலஸ்த்தீன மக்கள் அனைவருக்குமான தேசியத் தலைவர் என்பதை விட அல்பத்தா அமைப்பின் தலைவர் என்ற குறுகிய வட்டத்துக்குள் முடக்குவதற்கான முயற்சிகள் 80 களில் இருந்தே திட்டமிட்டுச் செய்பட்டுவந்தன.பலஸ்தீன தேசியத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் முடக்குவதற்கும் அரபாத்துக்கு அதில் விருப்பம் இல்லாது விட்டாலும் அதை மறுதலிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவதற்கும் புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் மூலம் மொசாட் தீவிரமாக முயன்றது.இதன் மூலம் லெபனாலிலுள்ள கிறிஸ்தவ பின் தளத்தை சிதைப்பதிலும் சிரியாவுக்கும் லெபனானுக்கும் இடையிலான மேதலை தூண்டி விடுவதிலும் இஸ்ரேல் வெற்றி கண்டது.பலஸ்தீன தேசியத்துக்காக உழைத்த பலர் அரபாத்தின் தலைமைத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பலர் இஸ்லாத்தின் விரோதிகள் என்ற பெயரில் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார்கள்.அல்பத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கள்மூலம் இந்த விவாதத்தை முழுமைப் படுத்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

ஆதியன் உங்கள் கருத்துக்கள் என் கருத்துகளுடன் மிக ஒத்துள்ளது...

எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டிய காலம்...

இதில் எவறும் கருத்து வேறுபட முடியாது....

ஒரு சிலரின் சுய நல செயல்பாடுகளை நாம் கணக்கில் எடுக்காமல்

தமிழின விடுதலையே என உயிர் மூச்சாக எக்கணமும் சிந்திக்கும் உலகமுழுவதும்

இருக்கும் தமிழ் மக்கள் ஆக்க பூர்வமாண நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்

வேண்டும்.....

புலத்தில் தமிழ் தேசியத்துக்கு தீங்கிளைப்பவர்கள் அதாவது கருணா டக்ளஸ் பிள்ளையான் சங்கரி போன்ற ஜந்துகளுக்கு ஒப்பானவர்கள் என்று பார்த்தால் ஆகக் கூடியது 200 பேர் இருக்கலாம் இவர்களின் குடும்பங்கள் பழைய கூட்டாளிகள் என்று கணக்குப் பாhத்தாலும் ஒரு 5000 பேர் தாயக விடுதலையை காட்டிக் கொடுப்பதையே கொள்கையாகக் கொண்டவர்கள் என்று மதிப்பிடலாம்.தமிழகத்தை தவிர்த்து புலத்தில் உள்ள தமிழர்களின் தொகை 8 இலட்சம் என்று வைத்துக் கொண்டால் 7இலட்சத்து94 ஆயிரத்து 800 பேரையும் நாங்கள் அணி திரட்டியிருக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். கடந்த 20 வருட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வீதமான மக்கள் தான் போராட்டத்தின் சுமையை தாங்கியிருக்கிறார்கள்.இன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.