Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொத்துக் கொத்தாய் குண்டு போட்டு கொன்று குவிப்பதை உடன் நிறுத்துக - சொலமன் சிறில் எம்.பி.

Featured Replies

'மொழி உரிமை, சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி, சமஷ்டி கூட்டாட்சி என்றும் காலங்காலமாக நாம் பேச்சுகளை நடத்தி உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் செய்து அவை கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட அந்த வரலாறு பற்றி இங்கு பேசுவதற்கு நான் விரும்பவில்லை."

'நிரந்தர தீர்வுமின்றி, இடைக்கால தீர்வுமின்றி, நிலையான அமைதியின்றி, நிரந்தர சமாதனாமின்றி, நிம்தியான வாழ்வின்றி, அழிவுகளையும் அனர்த்தங்களையும் இடர்பாடுகளையும் இடப்பெயர்வுகளையும் தினம் தினம் சந்திக்கும் சமூகத்தைப் பற்றியே இங்கு பேச விரும்புகிறேன்.'

என கடந்த புதனன்று பாரளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட பா.உ சிறில் தெரிவித்தார் மேலும் :

தற்போது வடக்குப் பகுதியில் குறிப்பாக வன்னி பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற இராணுவ நடவடிக்கைகளையும் அதன் பின்புலங்களையும் பார்க்குமிடத்து நாட்டில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் மனித நேயமும் ஏன் மானிட நீதியும் முற்று முழுதாக செயலிழந்து செத்து விட்டன என்றே கூறவேண்டியுள்ளது.

அரசின் முப்படைகளும் தரை, கடல், ஆகாய மார்க்கமாக இரவு, பகல் பாரது மூர்க்கத்தனமான தாக்குதல்களை தமிழ் மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புகள் மீதும், பாடசாலைகள், பொது இடங்கள், வைத்தியசாலைகள் மீதும் மேற்கொண்டு இன ஒழிப்பு நடவடிக்கையையும் நில அபகரிப்பiயும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கினறன.

பெரும்பாலும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற இந்த பயங்கரமான மும் முனைத் தாக்குதல்களால் குடும்பம் குடும்பமாக, கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களும், பச்சிளம் குழந்தைகளும் பாடசலை மாணவர்களும் துடிக்க துடிக்க கொல்லப்படுவது மனித கண்கொண்டு பார்க்க முடியாத கொடூர நிகழ்வுகளாகும். இதை எப்படி இச்சமயங்களில் எடுத்துக் கூறுவதென்றே எனக்கே புரியவில்ல. உள்ளம் பதறுகிறது வார்த்தைகள் தடுமாறுகின்றன.

வன்னிப் பிரதேசத்தில் இடம் பெயர்ந்துள்ள பொது மக்கள் வீதிகளிலும் மரங்களின் நிழல்களிலும் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்களுக்காக உணவு மருந்து குழந்தைகளுக்கான பால் மா, சுகாதாரம், குடிதன்ணீர் எரிபொருள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற தேவைகள் பூர்த்தி செய்ய முடியாது. இப்பகுதிகளிலுள்ள அரச அதிபர்கள் திண்டாடுகிறார்கள். கடைசியாக கிடைத்த தகவலின்படி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களில் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மாந்தை கிழக்கு துணுக்காய், மல்லாவி முழங்காவில் மாந்தை மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறியவர் ஆவார். அவர்ளுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்கபடாமையில் பல்வேறு கஷ்டங்களுக்கு அவலங்களுக்கும் தினம் முகம் கொடுத்து வருகிறார்கள்.

இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 60 மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டு சீர்குலைந்துள்ளன.

வடபகுதி மக்கள் பொருளாதாரம் என்ற வெறுமைக்குள் சிறைப்பட்டு எத்தனைக் காலங்கள் இப்படி வாழ முடியும். இந்த அநீதிகள், அநியாயங்கள், அவலங்கள் பற்றியும் கொலைகள், காணமற் போதல் போன்ற மனித உயிர்களில் பெறுமதி பற்றியும் இச்சபையில் நாம் பல முறை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறியும் பலன் கிட்டவில்லை. எந்த சட்ட ரீதியானதும், மனித நேயமானதும் நடவடிக்ககைள் மேற்கொள்ளபடவில்;லை அவை தொடர் கதையாகவே உள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆணைக்குழுக்களும் விசாரனை கமிஷன்களும் ஆக்கபூர்வமாக செய்றபட வேண்டும். மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும். எல்லா மக்களையும் மக்களாக மதிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பெற்று உலக அரங்கிலிருந்து வெகு விரைவில் தனிமைப்படுத்தப்படும் என்பதை இச்சபையிலே கூறி வைக்க விரும்புகிறேன்.

மாதா மாதம் இந்த அவரசகாலச் சட்டததை இச்சபையிலே நிறைவேற்றி அரசு எதையும் சாதிக்கப் போவதில்லை. மாறாக இந்தகொடிய போருக்கு முடிவு கட்டி நல்லெண்ண சூழ்நிலையில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை பேச்சின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செத்துப் போன 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசு தூக்கிப்பிடித்து சர்வகட்சி மாநாடு என்று பாதிககப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படாத அசாத்தியமான அர்த்தமற்ற மாநாட்டை காரணம் காட்டி காலத்தை கடத்துவதை உடன் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர் பிச்சினைகள் இன்று சர்வதேசமயப்பட்டுவிட்டது. எனவே சர்வதேச ஒழுங்கு பரிமாணங்களின் அடிப்படையில் இப்பிரச்சினைனக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு நாம் அவசரமான அழைப்பை விடுகின்றோம். அதாவது தமிழர் தரப்பு முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை திட்டத்தின் அடிப்டையில் நிபந்தனையற்ற முறையில் காலத்தை .இழுத்தடிகாது. பேச்சுகளை உடன் ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது வேண்டுகோளை நிராகரித்து காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்து செல்ல அரசு முற்படுமானால் நாம் எமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதையும் இதை உலக நாடுகளும் புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். என்றார்.

நன்றி சுடர் ஒளி

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

என கடந்த புதனன்று பாரளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட பா.உ சிறில் தெரிவித்தார் மேலு
ம் :

யாரிந்த சிறில் நீலிக்கண்ணீர் வடிப்பவர்.?

  • தொடங்கியவர்

சொலமன் சூ சிறில் த.தே.கூட்டமைப்பின் யாழ். பாராளுமன்று உறுப்பினர். உண்மை நிலையை எடுத்துக் கூறுகின்றார். இவரால் வேறு என்ன செய்ய முடியும்? இவர்கள் தட்ட முடிந்த அத்தனை கதவுகளையும் தட்டிப் பார்த்துவிட்டார்கள். திறந்து எட்டியாவது பார்ப்பார்கள் என்று. இளைத்தவன் பேச்சு சபை ஏறுமா? இவர்கள் என்ன தான் கூவினாலும் செவிட்டுச் செவிகளுக்கு அவை கேட்காது. நன்றாக செவிட்டைப் பொத்தி ஒன்று வலிக்கக் கொடுத்தால் செவிட்டுத்தனம் நீங்கி கேட்கும் ஆற்றல் வந்தாலும் வரும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் சிங்கள பெயராக உள்ளது ஜனா. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்கின்றீகள். அது தான் கேட்டேன்.

கோர்வை குண்டுகளை (cluster bomb) வன்னியில் விமானப்படை பாவிப்பதாக சொல்லப்படுகிறது....!!!

cluster.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியாவில் நடைபெறும் கொலைகளைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கை என்று நினைத்தேன்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.