Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: ரிச்சேர்ட் பெளச்சர்

Featured Replies

சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: ரிச்சேர்ட் பெளச்சர்

[புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 08:10 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]

தமிழ்மக்களுக்கு சகல உரிமைகளுடனும் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படவேண்டும். இராணுவ ரீதியில் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் ரிச்சேர்ட் பொளச்சர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பும் முன்னர், ஜப்பான் சென்றிருந்த ரிச்சேர்ட் பொளச்சர், அங்கு சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் ஜப்பானிய பிரதிநிதி ஜசூசி அகாசியை சந்தித்து சிறிலங்கா விவகாரம் குறித்து பேசினார்.

அதன்பின்னர், செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

சிறிலங்கா பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை காண்பதற்கு வழி திறக்கப்படவேண்டும். இராணுவ ரீதியாக மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. இந்த பிரச்சினை முடிவுறாத ஒன்று என்று நாம் நம்புகிறோம்.

அரசியல் வெளி ஒன்று திறக்கப்பட்டு அமைதி வழியில் தீர்வு காண்பதற்குரிய வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், தற்போதைக்கு அப்படியான முயற்சிக்கு அங்கு சாத்தியமில்லாத சூழ்நிலையே காணப்படுகிறது. அங்கு பாரிய சண்டை நடைபெறுகிறது. இந்த வருடம் சிறிலங்காவின் நிலை மிகவும் பாரதூராமாக உள்ளது. அமைதி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அங்கு போய் கூறமுடியாத நிலை நிலவுகிறது.

அதற்காக, எமது முயற்சிகளை நாம் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமாகாது. சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் என்ற வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே, ஜப்பான் ஆகியவற்றுடன் சேர்ந்து அமெரிக்காவும் சிறிலங்கா விடயத்தில் அமைதி வழியிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்த தொடர்ந்து அழுத்தம் வழங்கும்.

- என்று அவர் கூறினார்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதாபிமானத்துக்கு அமெரிக்கா உண்மையாக இருந்தால் பூமியின் ஒரு புள்ளியில் கூட பயங்கரவாதம் பிழைக்க முடியாது!

இது உலகத்துக்கும் தெரியும், அமெரிகாவுக்கும் தெரியும் ஆனால் தனக்கு ஒன்றுமே தெரியாதது போலவே நடிப்பதே அவர்கள் பிழைப்பாகிப் போய்விடது!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின்போது இணைத்தலைமை நாடுகளுக்கான ஜப்பானிய பிரதிநிதி யசூசி அகாசியைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளரைச் சந்திந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினையை படைத்துறை முன்னெடுப்புகளால் மாத்திரம் தீர்வு காணமுடியாது என நான் நம்புகிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது முழு உரிமையுடனும் வாழ்வதற்கேற்ற பொறிமுறையொன்று தேவை.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால், சமாதான முன்னெடுப்புக்கள் பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது.

இலங்கையின் அபிவிருத்தி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் யசூசி அகாசியுடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.

இலங்கையின் சமாதானப் பேச்சுக்களை நோர்வேயினூடாக முன்னெடுப்பதற்கு, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவும் அழுத்தங்களை வழங்கும். இணைத்தலைமை நாடுகளும் தமக்கிடையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் வருடம் இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பல சிரமங்கள் இருக்கின்ற போதும், எமது சமாதான முன்னெடுப்பு முயற்சிகளை நிறுத்தி விடமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன செய்தாலும் துவேசம் பிடித்த தலைமைகளின் "கல்மனம் " கரைய வேண்டும்

அல்லது கரைக்க படவேண்டும் ,மயிலே மயிலே இற்கு போடு என்றால் போடுமா ?

கரைப்பார் கரைத்தால் ........

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும் - ரிச்சாட் பெளச்சர்

14.08.2008 / நிருபர் வானதி

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர்

தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின்போது இணைத்தலைமை நாடுகளுக்கான ஜப்பானிய பிரதிநிதி யசூசி அகாசியைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளரைச் சந்திந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினையை படைத்துறை முன்னெடுப்புகளால் மாத்திரம் தீர்வு காணமுடியாது என நான் நம்புகிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது முழு உரிமையுடனும் வாழ்வதற்கேற்ற பொறிமுறையொன்று தேவை.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால், சமாதான முன்னெடுப்புக்கள் பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது.

இலங்கையின் அபிவிருத்தி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் யசூசி அகாசியுடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.

இலங்கையின் சமாதானப் பேச்சுக்களை நோர்வேயினூடாக முன்னெடுப்பதற்கு, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவும் அழுத்தங்களை வழங்கும். இணைத்தலைமை நாடுகளும் தமக்கிடையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் வருடம் இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பல சிரமங்கள் இருக்கின்ற போதும், எமது சமாதான முன்னெடுப்பு முயற்சிகளை நிறுத்தி விடமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.