Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவரை படையினர் தாக்குவதென்பது விடுதலைப்புலிகளின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம் - அமீர் அலி

Featured Replies

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்கிறது அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்று விடுதலைப் புலிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா. இது உண்மை அல்ல.

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பாகவே இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருக்கிறது.

இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இவ்வாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் மேலும் :

நான் சொந்த பயணமாக இந்தியா வந்துள்ளேன். இலங்கையின் கிழக்குப் பகுதியில் இப்போது முழு அமைதி நிலவுகிறது. அனால் வடக்குப் பகுதியில் நிலைமை மோசமாகவுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் அல்லாமல் அமைதிப் பேச்சு மூலமே தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இந்தியா மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. அவர்களுக்கு தொல்லைக கொடுக்கிறது என்று விடுதலைப்புலிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.

எங்களது கடற்படை இலங்கை மீனவர்களுக்கு மட்டுமன்றி, இந்திய மீனவர்களுக்கும் பாதுகாப்பாகத் தான் செயல்பட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்துவிட்டால் கூட உடனே அவர்களை நிறுத்தி அறிவுறுத்தி மீண்டும் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைத்து வருகிறோம். என்றார்.

நன்றி சுடர் ஒளி

தாயின் தாலிக்கொடியினை அறுத்தேனும் தான் பதவியேற வேண்டும் என்று சிந்தித்து செயற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் போர்க் கொடி தூக்கவேண்டும் -ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்

நன்றி வீரகேசரி

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களெல்லாம் அரசியலுக்காக யாரையும் (சொந்த தாயையோ மனைவியையோ) காட்டிக்கொடுக்க தயங்காதவர்கள். இப்படி பட்டவர்களை முஸ்லிம் மக்கள் இனங்கண்டு அரசியலில் இருந்து ஒதுக்கி விட வேண்டும். இவர்களால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தவித பிரயோஜனமும் இல்லை. தனது பாக்கற்றை நிரப்பினால் மட்டும் போதுமென நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது கடற்படை இலங்கை மீனவர்களுக்கு மட்டுமன்றி, இந்திய மீனவர்களுக்கும் பாதுகாப்பாகத் தான் செயல்பட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்துவிட்டால் கூட உடனே அவர்களை நிறுத்தி அறிவுறுத்தி மீண்டும் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைத்து வருகிறோம். என்றார்.

கேக்கிறவன் கேனையனாக இருந்தால் , எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது அமைச்சர் அலிக்கு பொருந்தும் .

எண்று கூறித்தான் கலைஞர் கூட உண்ணா விரதம் இருந்தார்.... அது யாரப்பா கலைஞரையும் விடுதலைப்புலி என்பது....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பொய்யான தகவல் கூறினால் தானே அவன் அரசியல் வாதி

இதயே மீனவர்களிடம் கூறினால் இவருக்கு என்ன நேர்ந்திருக்கும் :huh::wub:

நடப்பது ஒன்று

நாடகம் ஒன்று

எல்லாரும் நடிக்கிறார்கள்

சுடப்பட்டவன் சொல்வானாம் சுட்டது இலங்கை கடற்படை என்று...

இங்கிருந்து ஒரு கே... அமைச்சர் போய் சொல்லுவாராம்.. இது புலிகளின் நாடகமென்று...

அப்ப அப்பாவி இந்திய மீனவர்கள் செத்துவிழுந்ததும் நடிப்பாமே...

என்ன செய்யறது இந்த மனச்சாட்சி இல்லாத எ..களை

இவங்களா மக்களுக்கு சேவை செய்யற ஆட்கள்

தோல்வியில் நிற்ப்பது போல் இருந்தால் இதுவும் சொல்வார்கள் இதுக்கும் மேலையும் சொல்வார்கள்..

நாளைக்கி இந்தியா அமைச்சர் ஒருவரும் இதே கருத்தை சொல்வார்....

புலிவேட்டையாடுகிறோம் என்று கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கும் தமிழக கியு பிராஞ் காக்கிகள் உண்மையில் இவரைப் போன்றவர்களை கண்காணிக்க வேண்டும்.பாகிஸ்தான் உளவுத்துறை இந்தியாவில் நாச வேலைகளை செய்வதற்கு சிறீலங்காவில் கொஞ்ச இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்

இவரின் உண்மை முகம்

மட்டக்களப்பில் முஸ்லீம் அமைச்சர் அமீர் அலி தலைமையில் தோன்றியுள்ள இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் அட்டகாசங்கள்.

மட்டக்களப்பில் சிங்களப்படைகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சிங்கள நாடாளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் அமீர் அலி தலைமையில் புதிதாக இஸ்லாமிய பயங்கரவாதக்கும்பல் ஒன்று தோற்றம் பெற்று, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் அட்டகாசங்கள் புரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிதாக தோன்றியுள்ள இந்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலானது ஏற்கனவே சிங்கள புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் கருணா, ஈபிடிபி, கேரிஆர்/பிள்ளையான், புளொட் ஒட்டுக்கும்பல்களுக்கு இணையாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அட்டகாசங்கள் புரிந்துவருகின்றனர்.

இதேவேளை சிங்கள நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அமைச்சராக இருக்கும் அதாவுல்லா தலைமையிலான ஆயுதக்கும்பல் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டு வருவதை நெருப்பு முன்னைய செய்திகளில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளான அல்கைதாவின் தொடர்புடன் கிழக்கு மாகாணத்தில் பல இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் ஏற்கனவே இயங்கி வருவது தெரிந்ததே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.