Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா?

ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா?

இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார்.

சமஷ்டி புதிய அரசியலுக்கான ஒரு பிரவேசமா?

கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவு பேராதெனிய பல்கலைக்கழகம்

இந்தியாவில் பல்லின மொழி மத சமுதாயம் கொண்ட மக்கள் வாழ்வதை முன்னிட்டு அவர்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாகவே சமஷ்டி முறை உருவாக்கப்பட்டது. இனங்களுக்கிடையில் மொழிகளுக் கிடையில் கலாசாரங்களுக்கிடையில் உள்ள பன்மைத் தன்மையை சகித்துக் கொள்ள சமஷ்டி வழிவகுக்கின்றது. இந்தியாவில் இனங்களுக்கிடையில் அரசியல் மோதல்கள் குறைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டியின் மூலம் இனங்களுக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படுவது பற்றி நாம் அறிவோம். தத்தமது அடையாளங்களைப் பேணிக் கொள்ள அந்த அதிகாரங்கள் உதவியாக உள்ளன. இந்த முறையானது அரசியல் நிறுவனத் திற்குள் கட்டமைப்பாக்கப்பட்ட பின்னர் அதில் சிக்கற் தன்மைகள் தோன்று வதில்லை. இந்திய மக்களின் சிந்தனைகளுக்குள் சமஷ்டி முறை ஊறி விட்டது. சமஷ்டி என்பது பிறர் சார்ந்த அரசியல், ஜனநாயக, கலாசார, சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சிந்திக்கத் தூண்டும் ஒரு சிறந்த அப்பியாசமாகும். ஒற்றையாட்சி வரையறைக்குள் பெரும்பான்மை இனத்திற்கு தாம் தொடர்பான ஓர் சுயநலசிந்தனை நிலை ஏற்படுகின்றது. பிற இனத்தவரை அடிமைப்படுத்தும் இம்மியளவு எண்ணத்துடன் அன்றி திறந்த மனதுடன் சமஷ்டிக்குள் பிரவேசிப்பதுவே எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இனப்பிரச்சினையே ஒற்றையாட்சி என்ற வரையறையை ஏற்படுத்தியது. மாறாக சமஷ்டி அல்ல. தற்போது எமக்குத் தெரிந்த தீர்வாக சமஷ்டியே உள்ளது. அது ஓர் அரசியல் வடிவமாகும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் இதர அங்கங்கள் இங்கு பொருந்தி வரவேண்டும். அதாவது தும்பிக்கைக்கு ஏற்ப பொருளாதாரம், மனித உரிமைகள், கலாசார உரிமைகள், ஜனநாயகப் பண்புகள் குறித்து நாம் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளல் அவசியமாகும். இலங்கையில் சமஷ்டி அறிமுகப்படுத்தப்படும் நாளிலேயே இலங்கையின் உண்மையான அரசியல் வரலாறு ஆரம்பமாகின்றது.

எந்தப் பெயரிலாவது அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்!

விஷாக்கா தர்மதாச பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலைவி

பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலைவி விஷாக்கா தர்மதாச பின்வருமாறு தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். இனப்பிரச்சினை தீர்வாக முன் வைக்கப்படும் சமஷ்டியோ அல்லது வேறு எந்த அதிகாரப் பகிர்வு விடயமோ அது தமிழ் மக்களுக்கு நீதியான முறையில் அதிகாரப் பகிர்வு செய்யப்படும் விடயமாக அமைய வேண்டும். அதிகாரம் பகிரப்படாதிருக்கும் நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 25-30 வருட கால வரலாறு அதனை நிரூபித்து விட்டது. அதனால் தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளும் வகையிலான அதிகா ரத்தை வழங்கும் தீர்வே அவசியமாகும். அவ்வாறான யோசனைகளையே முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களினால் முன்பு முன் வைக்கப்பட்ட நிர்வாக அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை அன்று நிறைவேற்றாது இன்று நிறைவேற்றுவது குறித்து தென்னிலங்கை தலைவர்கள் பேச்சுக்களை நடத்துவது பலனற்றதாகும். அது தமிழர்களின் அபிலாஷைகளை மீறும் செயலாகவே அமையும். சமஷ்டியோ அல்லது வேறு எந்த அதிகாரப் பகிர்வு விடயமோ அவ்வாறு முன்வைக்கப்படும் தீர்வு ஒரே நாட்டிற்குள் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

புலிகளுடன் என்ன சமஷ்டி?

அனுருத்த பிரதீப் அரசியற்துறை விரிவுரையாளர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

இலங்கையில் அரசியலமைப்பு பிரச்சினை நிலவாத காரணத்தினால் ஒற்றையாட்சியோ அல்லது சமஷ்டியோ அதன் மூலம் அரச அதிகாரத்தை சவாலுக் குட்டுபடுத்தும் பிரச்சினைக்கு தீர்வுகிட்டாது என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியற்துறை பிரிவின் விரிவுரையாளர் அனுருத்த பிரதீப் தெரிவிக்கின்றார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவும் நிபந்தனையான அரசிய லமைப்பினை ஏற்றுக் கொள்ளாது கருத்தியல் மற்றும் ஆயுதரீதியில் புலிகள் அரசுக்கு சவால் விடுத்துள்ளமையே இங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை களுக்கும் நெருக்கடி நிலைகளுக்கும் காரணமாகும். அரச அதிகாரத்தை பலப்படுத்துவதே இதற்குத் தீர்வாக அமையும். மாறாக உடன்படிக் கைகளின் மூலம் கட்டியெழுப்பப்படும் அரசியலமைப்பு தீர்வினை எட்ட முடியாது. அதாவது சமஷ்டியோ ஒற்றையாட்சியோ இதற்குத் தீர்வாக அமையாது. தீர்வு வேறு இடத்தில் உள்ளது. இன முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள சமஷ்டி இந்தியாவுக்கு உதவியாக உள்ளமை உண்மையே. எனினும் இந்திய அரசியலமைப்பின் தந்தையான டாக்டர் அம்பேத்கர் அதனை சூட்சுமமாகவே உள்ளடக்கியுள்ளார். சாதாரண சந்தர்ப்பங்களில் சமஷ்டியாகவும் முரண்பாடுகள் மோதல்கள் நிகழும் விசேட சந்தர்ப்பங்களின் போது ஒற்றையாட்சி முறையாகவும் மாறிச் செயற்படும் வகையில் அரசியல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமஷ்டி அடிப்படை தத்துவங்களுக்கு முரணானது. சமஷ்டியின் அடிப்படைத் தத்துவம் வழங்கும் அதிகாரத்தை மீளப் பெற முடியாது என்பதாகும். அதற்கு முரணாக அதிகாரம் பகிரப்பட்டுள்ளதால் இந்திய நாட்டை அரைகுறை சமஷ்டி நாடு என்றே கூற வேண்டியுள்ளது. ஏன் இந்தியா அவசர சந்தர்ப்பங்களில் அதிகாரக் குவிப்பை நாட வேண்டும் என்று சிந்தித்தது என்பது பற்றியே நாம் முக்கியமாக ஆராய வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசு பலமடைந்திருக்க வேண்டும் என்பதற் காகவே அவ்வாறான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை அரசாங்கம் அடையாளம் தொடர்பான சிக்கலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் சமஷ்டி தீர்வை முன்னெடுப்பதானது இந்திய சமஷ்டிக்கு முரணாகவே அமையும். நாம் இந்திய சமஷ்டியை முன்னுதாரணமாகக் கொள்ளவே கூடாது.

தந்திரோபாயமான ரீதியில் சமஷ்டியை முன்னெடுக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகின்றது. எனினும் அதற்கான பதில் ஆம் என்றே கூற வேண்டும். எனினும் சமஷ்டி அடிப்படைவாதிகளினால் அதற்கான உரிய ஆதரவு கிடைக்காது. எமக்கு ஏற்புடைய சமஷ்டி முறையை உருவாக்குவது குறித்து புத்திசீவிகள் சிந்தித்துப் பார்க்க முடியும். சமஷ்டிவாதிகளே புலிகளினால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் மறந்து விட முடியாது. இதன் மூலம் அவர்கள் இணக்கப்பாட்டிற்கு தயாரில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

டைசி என்ற அரசியல் ஞானியின் கருத்தின்படி சமஷ்டிக்கு இரு காரணிகள் முக்கியமாகத் தேவை. சிறிய குழுக்கள் ஒன்றுபட வெளிப்படுத்தும் அக்கறை மற்றும் அடையாளத்தைப் பேணிக் கொள்ளும் அவசியம் என்று இவற்றைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு காரணிகளும் இல்லாத போது ஒற்றையாட்சியே நிகழுகின்றது. இல்லாவிட்டால் இரண்டு ஒற்றையாட்சி களாகும். புலிகள் இந்த விடயங்களை ஏற்கின்றனரா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை சமஷ்டி தீர்வை முன்வைப்பதற்கு முன்னர் சிந்திக்க வேண்டும்.

சமஷ்டி முறை நாட்டை ஐக்கியப்படுத்தும்

கலாநிதி ரொகான் எதிரிசிங்க சட்டபீட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்

மனித உரிமைகள், பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகம் என்பன சமஷ்டியின் அடிப்படைத் தத்துவங்களாகும் என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி ரொகான் எதிரிசிங்க. நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்கும் அதேவேளை தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றும் முறையாக சமஷ்டியை அவர் இனம் காண்கின்றார்.

இனங்களுக்கிடையிலான பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது. யுத்தம் என்ற பக்கமும் இங்கிருக்கலாம். எனினும் இது அரசியல் பிரச்சினை என்பதால் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு அரசியல் தீர்வாகவே அமைய வேண்டும். அத்தீர்வு சமஷ்டியாக இருப்பதே சிறந்ததாகும். இதனால் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படும். அவர்களுக்கு உள்ளகசுயாட்சி உரிமை கிடைக்கும். இந்த யோசனை புலிகளுக்குச் சார்பானதாக இருக்கலாமே எனினும் இதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்கு வழியேற்படும்.

தமிழ் மக்கள் நியாயத்தையே கேட்கின்றார்கள்

ஏ.எம்.எம்.நௌஷாத் சமூக செயற்பா ட்டாளர்

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மத்திய அரசாஙகத்தினால் தீர்க்க முடியாததினால் தான் தமது தாயகத்தை தாமே ஆளும் அதிகாரத்தை தமிழ் மக்கள் கோருகின்றனர் என்று முஸ்லிம் சமூகத்தின் செயற்பா ட்டாளரான ஏ.எம்.எம்.நௌஷாத் கூறுகின்றார்.

தமிழ் மக்கள் சமஷ்டி தேவை என்பதற்காக ஆயுதம் ஏந்தவில்லை. 1948லிருந்து பொய் வாக்குறுதிகளை வழங்கி, அவர்களின் ஆதரவுடன் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத் தாலும் தென்னிலங்கை நிர்வாகத்தினால் எந்த நன்மையும் இல்லை. பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவில்லை. இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பில்லை. இந்தப் பிரச்சினை களைத் தீர்த்துக் கொண்டு நியாயத் தைப் பெற்றுக் கொள்ளவே தமிழ் மக்கள் தாயக சுயாட்சியைக் கோருகின்றனர். 71-89ல் தெற்கில் இளைஞர்கள் போராடியது சமஷ்டி கேட்டல்ல, சமூக நீதியைக் கேட்டே போராடினர். தமிழ் மக்களின் கோரிக்கையும் அதுவே.

இறுதி முடிவு தமிழ் மக்களின் கைகளில்

நீத்தா ஆரியரத்ன தலைவி சர்வோதய சுவசேவை சங்கம்

சர்வோதய சுவசேவை சங்கத்தின் தலைவி நீத்தா ஆரியரத்னவின் கருத்தின்படி தீவிரவாதச் செயல்களை தடுக்கும் அதே வேளை தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும். சமஷ்டி தீர்வு பிரச்சினை களுக்கு தீர்வாக அமையுமா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

கொழும்பில் வாழும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சிங்கள மொழியில் வழங்குகின்றார்கள். இதுவே பெரும் அநீதி அல்லவா? சிங்கள மொழி யிலேயே விசாரணைகளும் நடை பெறுகின்றன. அறிவிப்புகள் கூட சிங்கள மொழியில் வழங்கப் படுகின்றது. சிங்களவர்களான எமக்கு தமிழில் கடிதங்கள் கிடைத்தால் எப்படியிருக்கும். இது பற்றி நாம் சிந்திப்பதும் இல்லை.

இவை சிறிய நிர்வாகப் பிரச்சி னைகள். இந்த சிறிய பிரச்சினைகள் பெரும் பிரச்சினையான இனப் பிரச்சினையைத் தோற்றுவித்தது. இப்பிரச்சி னையை சமஷ்டியோ அல்லது வேறு எந்த வழிவகையிலோ தீர்க்க வேண்டும்.

இலங்கை மக்கள் தமிழ் சிங்கள மொழிகள் இரண்டையும் கற்றிருப்பது அவசியம் என்று நீத்தா ஆரியரத்ன சுட்டிக் காட்டுகின்றார். எதிர்வரும் சந்ததியினருக்கு இரு மொழிகளையும் பயிற்றுவிக்க நாம் இப்பொழுதே நடவடிக்கைகளை எடுப்போமாயின் எதிர்காலச் சந்ததியினருக்கு இப்பிரச் சினையை விளங்கிக் கொள்ள முடியுமாக விருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கலந்துரையாடியவர்- விமலநாத் வீரரத்ன

http://www.sarinihar.org/Tharisanam%20Ravaya.htm

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள சிங்கள ஜனாதிபதி இருக்கும் வரைக்கும் சமஸ்ரி முறையில் தீர்வு நிலைக்காது....!!!

Edited by தயா

தனி ஈழம் என்றே தீர்வே இலங்கைத்தீவில் தமிழ், சிங்கள இனங்களின் நிரந்தர அமைதிக்கும் பொருளாதார சுபீட்சத்துக்கும் வழிவகுக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து!

பொது வாக்கெடுப்பின் (Referendum) அடிப்படையில் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்லக்கூடிய கூட்டாட்சி (Confederation) முறை தனி ஈழத்திற்கு ஒரு மாற்றுத்தீர்வாக அமையக்கூடும்!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.