Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வளம்மிக்க நிலப்பறிப்பால் வறுமையின் பிடியில் வன்னி

Featured Replies

இராணுவ நடவடிக்கைளால் மக்கள் அவலப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் உறுதுணையாக நின்று தோழோடு தோழ் கொடுத்த வன்னிப் பகுதி மக்கள் இன்று பெரும் அவலத்தை சந்திதுக் கொண்டிருக்கின்றனர்.

சத்ஜெய இராணுவ நடவடிக்கை தெடரச்சியாக இரணைமடுவின் கீழான பயிர்ச் செய்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஓமந்தை ஈறாக பெருமளவிலான சிறு குளங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இம் மண்ணும் மக்களும் அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் தாங்கி நின்றனர்.

தற்போதும் மடுவை அண்டியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் மல்லாவியை நோக்கி இடம் பெயர்ந்து சிறிது காலத்துள்ளே எல்லோரும் சேர்ந்து இடம் பெயர நேர்ந்து விட்டது

இப்போதைய இடப்பெயர்வு என்பது மிகவும் இக்கட்டான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. ஏனெனில் பெருமளவிலான நெற்ச் செய்கையை கைவிட்டு செல்கின்றனர். காய்கறி தோட்டங்கள், கால்நடைகள் என மூலாதராமாக விளங்கிய வளங்களை கைவிட்டு செல்கின்றனர்.

பெருமளவிலான மக்கள் நிலத்தையும் பயிர்ச்செய்கை கால்நடை வளர்ப்பையும் ஆதாரமாக கொண்டு காலகாலம் சீவித்து வந்த நிலையில் அவற்றை இழந்து செல்கின்றர். பெரும் உணவுப் பஞ்சமும் வறுமையும் இதனால் ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பயிர்ச்செய்கை நிலங்களும் பெருமளவிலான கடல்வளங்களும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி மக்களற்ற இடமாகி விட்டது. கூராவி ஊடாக வவுனிக்குள பிரதேசங்களின் பயிர்ச்செய்கை நிலங்களும் நேரடியான ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ளது.

ஒட்டங்குளம் மற்றும் கல்விளன் பகுதிகளில் படையினர் நடவடிக்கை தொடர்வதால் மல்லாவிக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கை தொடர்ந்து பட்டங்கட்டி தென்னையன் குளம் போன்ற ஊர்களின் பயிர்ச்செய்கை அனைத்தும் நிர்கதியாகிவிட்டது.

அத்தோடு தேறாங்கண்டல் மற்றும் ஐயன் குளம்; ஈறாக ஆனைவிழுந்தான் வரை செல்வீச்சுக்கு உள்ளாகி உள்ளதால் மல்லாவியில் இருந்து வடக்கே இருபது மைல் தொலைவு வரை மக்கள் பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முழங்காவில் வரை படையினர் முன்னேறி இருப்பதால் நாச்சிக்குட வரையான கடற்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனிக்குளத்தின் நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட தெற்குப்பகுதி முழுவதும் மேற்க்கே கல்விளான் வரையான பெரும் நெற்செய்கை நிலங்கள் குடியிருப்புகள் சிறுதானியச்செய்கை அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் வாழமுடியாத நிலையாகி விட்டது.

வவுனிக்குளத்திற்கு தென் கிழக்கே பெரியகுளம், பாலைப்பாணி, கொம்புவைத்த குளம் போன்ற பல இடங்களின் பயிர்சசெய்கை நிர்கதியாக உள்ளது. ஆழ ஊடுருவும் அணித் தாக்குதல்களால் இந்த இடங்களில் மக்கள் இயல்பாக வாழ முடியாமல் போய்விட்டது. இப்போது இராணுவம் வவுனிக்குளத்திற்கு அண்மித்து நிலை கொண்டிருப்பதால் வவுனிக்குளத்திற்கு தென்கிழக்கான இப்பகுதிகள் மக்களற்ற பிரதேசங்களாகிவிட்டது.

முன்னய காலங்களில் பெருமளவிலான மக்கள் அவலப்பட்டபோது தோழோடு தோழ் நின்ற மக்கள் அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு தோழ் கொடுப்பது ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனதும் தார்மீக கடமையாகும். உண்மையில் இந்த மக்களும் மண்ணும் இது கால வரையும் ஏனைய மக்கள் இடம் பெயரும் போதும் அவலத்தை சந்தித்த போதும் சோராது தாங்கி நின்றது.

எண்பத்து மூன்று யூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மலையக மக்களை ஆதரித்து நின்றது மல்லாவி. அன்றய காலகட்த்தில் பாடசாலைகளிலும் பொது சந்தைகளிலும் தஞ்சடைந்த மக்கள் பின்னர் மல்லாவிக்கு வடக்கு பகுதியான தேறாங்கண்டல் மற்றும் ஐயன் குளம் போன்ற பகுதிகளில் நிரந்தரமாக குடியேறி அவர்களும் விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டு வன்னி மக்களுடன் ஒருங்கிணைந்து விட்டனர். இன்று அவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

மல்லாவியை மையமாக கொண்டு சுற்றுவட்டார பிரதேச மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வந்தாரை வாழவைக்கும் மல்லாவி என்று பெயரெடுத்த இடம் இப்போது யுத்த பூமியாக மக்களற்ற இடமாக மாறிவிட்டது.

சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் வன்னி மக்களை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியள்ளது. அத்தியாவசியமான மருந்துகளும் உணவும் இன்றி மக்கள் மரங்களுக்கு கீழ் அல்லல் படுகின்றனர். வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவிகள் தடைப்பட்டுள்ளது. இந் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கைகொடுக்க வேண்டியதும் அவலப்படும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உதவி செய்வதற்கான அனுமதி வேண்டி உறவுகள் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகால வரையும் இடப்பெயர்வுகள் வந்த போது சமாளிப்போம் என்ற நம்பிக்கை பயிர்ச்செய்கை நிலங்களை மையப்படுத்தி அமைந்திருந்தது. இப்போதைய ராணுவ நடவடிக்கையானது மன்னர் தொடக்கம் கூராவி வவுனிக்குளம் மல்லாவி முழங்காவில் என்று பொரும் வளமானதும் நம்பிக்கையானதுமான பூமி பறிபோயுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடிகள் மிக மிக மோசமானதாய் இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டிய காலகட்டமிது.

புலம் பெயர் உறவுகளே, வன் பறிப்புக்குள்ளான பிரதேசங்கள் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். இடம் பெயர்ந்த இடங்களில் விதை போட்டாலும் பயிர் வளர்ந்து பலன் தர சில மாதங்கள் ஆகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதுவரை ஆதாரமற்ற மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள். தற்போதைய இடப்பெயர்வானது நாளாந்த ஓட்டமாக உள்ளது. மன்னார் மற்றும் மடுப் பகுதிகளில் இருந்து நட்டாங்கண்டல் பனங்காமம் முழங்காவில் பின்னர் வவுனிக்குளம் மல்லாவி துணுக்காய் பின்னர் அதற்கு வடக்கான கோட்டை கட்டி அம்பலப்பெருமாள்குளம் ஆனைவிழுந்தான் என்று அங்கும் எறிகணைகள் விழுவதால் அவ்விடத்தில் இருந்தும் மேலும் வடக்கு நோக்கி மக்கள் நகர்கின்றனர்.

எந்த ஆதாரமும் அற்ற நிலையில், நிவாரணம் அற்ற நிலையில், வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் பணிகள் தடைப்பட்ட நிலையில் இவ்வாறு ஓட்டமும் நடையுமாக நகரும் மக்களுக்கு உதவிக் கரம் கொடுங்கள்.

பதிவு மூலம்

http://agk91.blogspot.com/

மன்னாரில் இருக்கும் வயல்களின் அளவில் இலங்கை முழுவதும் தன்னிறைவு காணும் வண்ணம் அரிசி உற்பத்தி செய்ய முடியுமாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி இயற்கை வளம் நிறைந்த ஒரு அருமையான பிரதேசம் இப்பொழுது சண்டையில் அந்த மண் கூட பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீளும்.. அதுவரை அதனை (வன்னி மக்களை, போராளிகளை) தாங்கும் கரங்களாக புலம்பெயர் மக்கள் இருந்து தமது வரலாற்றுக் கடமையை தமிழீழ விடுதலைக்கான தமது உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டும்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.