Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பண்ணையின் கவிதை தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை! சுப்பரண்ணை!

  • Replies 54
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விதி ஓன்று விளையாடுகின்றது என் வாழ்க்கையிலே

புது வினை வந்து சேருகின்றது புது கோலத்திலே

விரக்தியே மிஞ்சுகின்றது என் ஏக்கத்திலே

நினைப்பதெல்லாம் நடக்காது நானறிவேன்

இறைவா நீ தானே நினைத்தாயே நடத்திவிடு

ஏமாற்றங்கள் சிலவேளை மனதினில் பாயலாம்

ஏமாற்றமே தொடர்ந்தால் மனம் பாய்ந்துவிடுமே

சுப்பண்ணை , மனதை தளரவிடாது வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள் .

சோகமோ , சந்தோஷமோ ஒருவரிடமும் நிரந்தரமாக குடியிருப்பதில்லை .

அந்த தருணங்களில் , அதற்கேற்ற மாதிரி தன்னை தயார்படுத்திக் கொள்பவன் , வாழ்க்கையை வெற்றி கொள்வான் .

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புலவர் , நன்றி மச்சான் சிறி :unsure:

இதை புலிகளின் பரந்தனை இழந்தபோது எழுதியது ஆனால் இணைக்க முடியவில்லை இப்பொழுதுதான் இணைப்பதற்கு நேரம் வந்தது.

புலிகளின் பின்னகர்வு

பரந்தனில் படைநகர்வு பயம் அறியா புலிகள் பின்னகர்வு

தரைப்படை பிடித்தது தவமிருந்து பெற்ற மண்ணை

புலிப்படை தோற்றதாம் புகலிடம் தேடுதாம்

வென்றதாம் சிங்களப்படை வீழ்ந்ததாம் தமிழ்ப்படை

வீணாக விளம்புது சிங்கள காடைகள் -ஆங்காங்கு

வெடியும் கொழுத்திடும் வெறியாட்டமும் போட்டிடும்

ஏளனம் பேசிடும் ஏவலும் செய்திடும் -அதைகண்டு

புலம்புகிறான் தமிழன் புலம்பெயர் மண்ணிலே

அகிம்சைக்கு தீலீபன் அதிரடிக்கு மில்லர்

பதுங்குவதற்கு ஜெயந்தன் பாய்வதற்கு சாள்ஸ் அன்ரனி

விரட்டுவதற்கு மாலதி விடியலுக்கு சோதியா

மின்னலுக்கு கரும்புலி இடிக்கு கடற்புலி

மழைக்கு கிட்டுமாமா பறப்புக்கு ராதா

நாம் பார்க்காத படையா களங்கள் சொல்லுமே

தமிழா உன்கடமை உணர்வுடன் முடித்திடு - உலக

உறவுகள் வளர்த்திடு உன் கவலை விட்டிடு - எம்

அவலங்கள் காட்டிடு அகிம்சையை நீ எடுத்திடு

ஆயுதம் எம் கையில் அழியாது ஒருபோதும்

இந்தியாவோடு இலங்கை நின்று ஆடுது வெறியாட்டம்

கொட்டம் கொண்டாட்டம் கோணமாமலையில் போடுது

கோழைகள் போடும் கணக்கு புலி அழியும் கணக்கு - எம்

தலைவன் போடும் கணக்கு தமிழீழ கணக்கு

தலைவன் கையசைத்தால் படை இங்கு பாயாதோ

பழங்கதை பேசவில்லை இது புதுக்கதை எழுதும் காலம்

பாடை கட்டிடு பகைவா உனக்கும் உன் கனவிற்கும்

விடியத்தான் போகுது எம் தேசம் ஆனால் உன் தேசம்???

Edited by suppannai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கரும்புலி தான் தாக்குதலுக்காகா செல்லும் முன் அவனது மனநிலை எப்படி இருக்கும் எதை பற்றி சிந்திக்கும் என்பதை கூற முனைந்துள்ளேன். :)

எனக்ககா யாரும் அழவேண்டாம்

எனக்காகா யாரும் அழவேண்டாம்

என் தோழர்கள் வருவார்கள் என் பின்னே

அவர்க்காகவும் யாரும் அழவேண்டாம்

அண்ணனின் வீரர்களுக்கு கண்ணீர் பிடிப்பதில்லை

தலைவனின் எண்ணத்தை களத்தினில் முடிப்போம்

தமிழன் தலை நிமிர்த்தி அவன் பலம் உரைப்போம்

சிங்களவன் கொட்டம் அடக்கப்போகின்றோம்

தலைவனுக்கு ஓர் கரம் கொடுத்திடு தமிழா

அணிவகுத்திடு அண்ணன் பின்னே வெல்வோம் நாளை

நாளை வெற்றிசெய்தி வரும் நான் வரமாட்டேன்

கொண்டாடு தமிழா உன் கடமையை செய்து - என்

உயிர் அங்கு பிரியும் வேளையில் உங்களை சேர்ந்திடுமே

நானும் பார்த்திருப்பேன் தமிழீழம் மலர்வதை

களித்திருப்பேன் என் தோழர்களோடு

இது எங்களின் காலம் எடுத்திடு கையில்

உணர்ந்திடு கடமையை உணர்த்திடு தமிழன் நிலை

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

எனக்காக யாரும் அழவேண்டாம்

கார்த்திகை 27 நான் வருவேன் இம் மண்ணில்

மலர்ந்திருப்பேன் இம் மண்ணில் கார்த்திகை பூவாய்

பறந்திருப்பேன் தமிழ் வீர புலிக்கொடியாய்

போகின்றேன் தமிழ் மண்ணே விடைகொடு எனக்கு

அம்மா உன் கருவறை இருட்டென துயருற்றேன் அப்பொழுது

வெளியே வந்தேன் தமிழன் வாழ்க்கையே இருட்டம்மா

உனக்கொரு பிள்ளை நானிருந்தேன் உன்னை பார்க்க -இப்பொழுது

உனக்கு ஆயிரம் பிள்ளைகளம்மா எனைப்போல் உன்னை பார்க்க

எம் தலைவிதி மாற்றி ஒளியினை ஏற்ற நான் - இங்கு

செல்கின்றேன் அம்மா என்னை வாழ்த்தி வழியனுப்பு

சிங்கத்தின் குகைக்குள் சிலிர்க்க செல்கின்றேன்

ஆடுவேன் ஆட்டம் இது உன் ஆணவத்தை அடக்கும்

அழிக்கின்றேன் என்னை அழியாமல் வாழ்வதற்கு

எனக்காக யாரும் அழவேண்டாம் நான் அண்ணனின் புலி

Edited by suppannai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன.

என்ன சுப்பண்ணை மஹாவிஷ்ணு கூடத்தான் சக்கரம் வைத்திருக்கிறார் நீங்கள் துர்க்கையின் சக்கரத்தை பார்த்திட்டிங்கள் போல :):)

ஆனால் நல்லாத்தான் இருக்கு தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.