Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலை கடற்படைத்தளத்தில் கடந்த செவ்வாய் இரவு நடந்தது என்ன?: கொழும்பு ஊடகம்

Featured Replies

திருமலை கடற்படைத்தளத்தில் கடந்த செவ்வாய் இரவு நடந்தது என்ன?: கொழும்பு ஊடகம்

[வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:57 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தொடக்கத்தில் எதுவும் தெரிவிக்காதபோதும் தற்போது அவை மெல்ல மெல்ல கசியத்தொடங்கியிருக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதல் குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த திங்கட்கிழமை இரவு 8:45 மணியளவில் கிழக்கு கடற்கரைப்பக்கமாக உள்ள வான்பரப்பில் சில அசாதாரண நடமாட்டங்கள் தென்பட்டதாக சிறிலங்கா வான்படையின் ராடரில் பதிவு ய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவிலிருந்து கிழக்காக புறப்பட்டு கடல் எல்லைக்குள் சென்று அங்கிருந்து கடற்கரைக்கு சமாந்தரமாக திருகோணமலை வரை வந்த புலிகளின் இந்த வானூர்திகள் செக் - குடியரசு தயாரிப்பாக சிலின் இசட் 143 இலகு ரகத்திலானவை எனவும் உறுதி செய்யப்பட்டது.

முகில்கள் அதிகம் காணப்பட்ட வானில் இவை பயணம் செய்துகொண்டிருப்பதை உறுதிசெய்து கொண்ட சிறிலங்கா வான்படை, உடனடியாக கொழும்பில் உள்ள தலைமையகத்துடன் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தது.

இதனை அடுத்து, கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய திருகோணமலை கடற்படைத்தள தளபதிகள் தமது தளத்தின் சகல மின் இணைப்புக்களையும் துண்டித்தனர். எதிரி தனது இலக்கை இலகுவில் அடையாளம் காணமுடியாதபடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு அமைதியாக இருந்த படைத்தளம் நோக்கி எதிர்பார்த்தபடி இரவு 8:45 மணியளவில் இருளை கிழித்துக்கொண்டு புலிகளின் இரண்டு வானூர்திகளும் வந்தன.

யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் படையினரை ஏற்றி இறக்கும் பிரதான பணியை ஆற்றிவரும் ஜெற்லைனர் துருப்புக்காவியே புலிகளின் இலக்காக இருந்தது. சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான படையினரை ஏற்றிச்செல்லக்கூடிய இந்த துருப்புக்காவி அடுத்த நாள் குடாநாட்டுக்கு பயணமாகவிருந்தது.

ஆனாலும், மின் வெளிச்சம் அற்ற இருள்படர்ந்த அந்த தளத்திற்குள் எந்த இலக்கையும் இலகுவாக அடையாளம் காண புலிகளின் வானூர்திகளால் முடியவில்லை.

ஆனால், ஏலவே வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்கிவிட்டு தயாராகவிருந்த படையினர் புலிகளின் வானூர்திகளை கண்டவுடன் சரமாரியாக வானை நோக்கி தாக்கத்தொடங்கினர். சீனன்குடா, டொக்யாட், கடற்படைத்தளம் உட்பட சகல பகுதிகளிலிருந்தும் கடலில் தரித்துநின்ற போர்க்கப்பலிலிருந்தும் புலிகளின் வானூர்திகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டன. வான் எங்கும் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தது.

இருப்பினும் தாழப்பறந்து வந்த இந்த வானூர்திகள் நான்கு குண்டுகளை வீசின. இவற்றில் ஒன்று வெடிக்கவில்லை. மிகுதி மூன்றும் வீழ்ந்து வெடித்தாலும் அவற்றினால் படையினருக்கு நேரடியாக பாதிப்பு இருக்கவில்லை. கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து வீழ்ந்து அவற்றில் அகப்பட்டு பலர் காயமடைந்தனர்.

அடுத்தநாள், கடற்படைத்தளத்துக்கு சென்று பாதிப்புக்களை நேரடியாக பார்வையிட்ட சிறிலங்கா கடற்படைத்தளபதி வசந்த கரன்னகொட பாரிய பாதிப்புக்கள் இன்றி புலிகளின் தாக்குதலை முறியடித்த சிறிலங்கா கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா வான்படையிடம் நவீன வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தும் அவற்றை மிக முக்கியமான திருகோணமலை கடற்படைத்தளத்தில் பொருத்தாதது ஏன்?

அங்கு பொருத்தப்பட்டிருந்த சாதாரண வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து புலிகளின் வானூர்திகள் தப்பியது எவ்வாறு?

திருகோணமலையில் படையினரை ஏற்றிக்கொண்டு வடக்கு செல்ல ஆயத்தமாக இருந்த ஜெட்லைனர் துருப்புக்காவியின பயணம் தொடர்பான நுணுக்கமான விவரங்கள் புலிகளுக்கு தெரிந்தது எவ்வாறு?

ஆறாவது தடவையும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ள புலிகளி்ன் வானூர்திகள் குறித்து இன்னமும் சரியான முறியடிப்பு மேற்கொள்ளப்படாததற்கு காரணம் என்ன? போன்ற பல விடங்கள் குறித்து இக்குழுக்கள் விசாரணை நடத்தவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், ஏலவே வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்கிவிட்டு தயாராகவிருந்த படையினர் புலிகளின் வானூர்திகளை கண்டவுடன் சரமாரியாக வானை நோக்கி தாக்கத்தொடங்கினர். சீனன்குடா, டொக்யாட், கடற்படைத்தளம் உட்பட சகல பகுதிகளிலிருந்தும் கடலில் தரித்துநின்ற போர்க்கப்பலிலிருந்தும் புலிகளின் வானூர்திகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டன. வான் எங்கும் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தது.

ஐயையோ ......... பிறகு ...

ஒருவேளை இராணுவத்தினரின் தாக்குதல் திட்டங்கள், வியூகங்கள் புலிகளிடம் சிக்கிவிட்டதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.