Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஈழப்போர் தீர்மானக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போரில் விரைவில் வடக்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்போகும் அதிகாரப் பேரளிப்பு தீர்வானது, 20 வருட யுத்தத்துக்குக் கூலியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையத்தளத்தின் கருத்தாகவுள்ளது.

மறுபுறத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை மற்றும் அந்தப் பிரச்சினையால் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அகதிகளின் நிலைப்பாடு குறித்து அந்த இணையத்தளம் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இலங்கை அகதிகள் தமிழ்நாட்டிலும், ஒரிசாவிலும் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இவர்களின் அடைக்கலம் 4 வகைகளில் நிகழ்ந்திருக்கிறது. அகதி முகாம்களில் தங்கியிருப்போர், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போர், பாதுகாப்பு அச்சத்தின் கீழ் ஒரிசா அரசாங்கத்தின் கீழ் தங்கியிருப்போர் மற்றும் சட்ட ரீதியான ஆவணங்களுடன் சென்று பின்னர் அதனை மீளப்புதுப்பித்துக் கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அகதிகள் இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

1983 முதல் 1987 ம் ஆண்டு காலப்பகுதி வரை சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் இலங்கை அகதிகள் தமிழகத்திற்கு சென்றனர். 1983 ம் ஆண்டின் இனக்கலவரத்தின் பின்னரே இவர்கள் தமிழகத்திற்கு சென்றனர். இவர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் 1987 ம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் பின்னர் இலங்கைக்கு திரும்பினர். அதே அளவான தொகையினர் ஐரோப்பாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர்.

1989ம் ஆண்டுக்கு பின்னர் அதாவது இந்திய படைகள் இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மீண்டும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் அகதிகள் வரை தமிழ்நாட்டுக்குச் சென்றனர். எனினும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 50 அகதி முகாம்களை மூடுமாறு உத்தரவிட்டதுடன், 52 ஆயிரத்து 180 அகதிகளைப் பலாத்காரமாக இலங்கைக்கு அனுப்பினார்.

1996, 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் 18 ஆயிரத்து 600 தமிழ் கைதிகள் தமிழ்நாட்டுக்குச் சென்றனர். இதற்கிடையில் 2002 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின்னர் சுமார் 6 ஆயிரம் தமிழர்கள் இலங்கை திரும்பினர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும், ஒரிசாவிலும் முகாம்களில் 71 ஆயிரத்து 600 இலங்கை தமிழர்கள் தங்கியுள்ளார்கள்.சுமார் 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையான இலங்கை அகதிகள் முகாம்களுக்கு வெளியில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்ற போதிலும் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.எனவே இந்திய அரசாங்கம் இலங்கை விடயத்தில் உரிய முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள இந்த இணையத்தளம், இலங்கைத் தமிழ் அகதிகள் காரணமாக இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும், அது இந்திய அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எங்கட ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் கொழும்பு ஊடகம், ஐரோப்பிய பிரதிநிதி, இணையத்தளம் ஒன்று என்று செய்திகள் வெளியிடுகிறார்கள். ஆனால் பெயரைத்தான் வெளியிடுவதில்லை.

பொதுவாக எங்கட ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் கொழும்பு ஊடகம், ஐரோப்பிய பிரதிநிதி, இணையத்தளம் ஒன்று என்று செய்திகள் வெளியிடுகிறார்கள். ஆனால் பெயரைத்தான் வெளியிடுவதில்லை.

உப்பிடித்தான் கந்தப்பு

அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள், ராசதந்திர வட்டாரங்கள்.... என்னும் எத்தினை எத்தினை...

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் கந்தப்பு

அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள், ராசதந்திர வட்டாரங்கள்.... என்னும் எத்தினை எத்தினை...

எல்லாம் எலும்ம்ம்ம்ம்ம்பு துண்டுகள் :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.