Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் பரணி (ஆனந்தவிகடனில்) -வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன்

மழையே வா என்கிறது

என் தாய் மண்.

வருணா வருணா என்ற பாடல்களுடன்.

ஓடைகள் வற்றி

வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது

எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான்.

ஜாதிய அரக்கனுக்கெதிராக

நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில்

காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள்,

நாம் தரத் தவறிய இரத்ததுக்கு

அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு,

கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென்

வன்னிக் காட்டு வழிகளில்

தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும்

கோடை ஆறுகள் மீது அதிருது வானம்,

தட்டி எழுப்புது மின்னல்.

இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும்.

போர்கள் வென்ற கும்பகர்ணனாய்

வாகைகள் பூத்த

கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை

போருக்கெழுமென் பிள்ளைகள் கேட்கின்றனர்.

பண்டார வன்னியனின் போர்ப் பாடல்களை

பாடியபடி.

வற்றிய காட்டாறுகளின் தறியில்

மழைநீரால் வலை பின்னுகிறாள் என் தாய்

பிள்ளைகள் இரும்பு யானைகளைப் பிடிக்க.

இந்த மின்னலும் இடியும்

என் பிள்ளைகளுக்குப் பரணி

எதிரிகளுக்கோ அஞ்சலி.

[யாரும் மறு பிரசுரம் செய்யலாம்]

"பண்டாரவன்னியனின் படை நடந்த காடு

பணியாது ஒருபோதும் ஈழவர் எம் வீடு" என்கிற

பத்தாவது பாடலை தொடர்ந்து கேழுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வான் பரணி

-வ.ஐ.ச.ஜெயபாலன்

இந்த மின்னலும் இடியும்

என் பிள்ளைகளுக்குப் பரணி

எதிரிகளுக்கோ அஞ்சலி.

உண்மை கவிஞர் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் கவிஞ

நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில்

காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள்,

நாம் தரத் தவறிய இரத்ததுக்கு

அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு,

உன் மன உணர்வுகளை நான் அறிகிறேன். எப்பொழுது இங்கு வருகிறாய்?

அனஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கவிஞ

நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில்

காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள்,

நாம் தரத் தவறிய இரத்ததுக்கு

அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு,

உன் மன உணர்வுகளை நான் அறிகிறேன். எப்பொழுது இங்கு வருகிறாய்?

அனஸ்

நன்றி தமிழ்ச் சிறி,

பெரும்பாலும் என்னுடைய முதல் வாசகர்களில் ஒருவராக இருக்கிறவர் நீங்கள். அனஸ் நீ ஒடித் திரிந்த காடுகள் அல்லவா நீ நீர்விழையாடிய ஆறுகள் அல்லவா. என் மண் சுதந்திரமாகி உன்பிள்ளைகள் அங்கு ஆட்சிப் பங்காளராய்ச் செளிப்பதை பார்த்த பின்னரே கண்மூடுவேனடா.

இந்தக் கவிதை வன்னியில் ஈழ நாதத்தில் பிரசுரமாக உள்ள சேதி மகிழ்ச்சி தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென்

வன்னிக் காட்டு வழிகளில்

தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும்

கோடை ஆறுகள் மீது அதிருது வானம்,

தட்டி எழுப்புது மின்னல்.

இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும்.

போர்கள் வென்ற கும்பகர்ணனாய்

வாகைகள் பூத்த

கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை

போருக்கெழுமென் பிள்ளைகள் கேட்கின்றனர்.

உவமையோடு எழுதிய கவிவரிகள் அழகு.

தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும்

கோடை ஆறுகள் மீது அதிருது வானம்,

தட்டி எழுப்புது மின்னல்.

அற்புதம்.

வாழத்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி, வான் பரணி ஈழநாததில் பிரசுரக்கப் படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. வன்னி யாழ்கல நண்பர்கள் இயன்றால் ஸ்கான் பிரதி இணைக்க முடியுமா.

உவமையோடு எழுதிய கவிவரிகள் அழகு.

தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும்

கோடை ஆறுகள் மீது அதிருது வானம்,

தட்டி எழுப்புது மின்னல்.

அற்புதம்.

வாழத்துகள்.

அடடா

நீங்களும் கவிறஞரோ?

பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான உவமைகள் ஐய. எம்மான், நின் பணி தொடர வாழ்த்துக்கள்... :lol::o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவே

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையும் விடுதலைப்போரும் எதிர்வரும் வெற்றிகளும் பற்றிய என்னுடைய கவிதை 'வான்பரணி'

இவ்வார ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.

எனது பாலை இசைத் தொகுப்பு இறக்கி அதற்க்குப் பணம் அனுப்ப உத்தேசித்துள்ளவர்களின் கவனத்துக்கு. தற்போது எனது பணிகள் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதால் பணம் அனுப்பத் தீர்மானித்தவர்கள் இப்பவே அனுப்பினால் தொகை சிறிதெனினும் காலத்தால் செய்ததாக பயனுள்ளதாக அமையும்.

Edited by poet

ஜெயபாலன் அண்ணா, ஈழத்தின் புதிய பாரதியாய் உங்கள் வரிகளில் எத்தனை ஆழம்.

தொடர்கிற உங்கள் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் நீறு பூத்த நெருப்பாக உங்கள் கவிதைகள் பூக்கட்டும்

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களுமாய் மலர்ந்து உங்கள் படைப்பைப் போன்று இன்னும் எத்தனையோ படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தொடரட்டும் உங்கள் பணி. வடதுருவத்தில் உலாவும் வலி சுமந்து சிறு வண்டாக என்னுடைய வரிகளும் உங்கள் பின்னே நடை பயிலும்.

என்னுடைய ஈழத் தமிழனாய் வாழந்து பாருங்கள் கவிதை தமிழகத்தில் உள்ள பல இணையத் தளங்களிலும், இணைய வானொலிகளிலும் தமிழக உறவுகளின் செவிகள் நோக்கி சிறகு விரித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அண்ணா, ஈழத்தின் புதிய பாரதியாய் உங்கள் வரிகளில் எத்தனை ஆழம்.

தொடர்கிற உங்கள் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் நீறு பூத்த நெருப்பாக உங்கள் கவிதைகள் பூக்கட்டும்

என்னுடைய ஈழத் தமிழனாய் வாழந்து பாருங்கள் கவிதை தமிழகத்தில் உள்ள பல இணையத் தளங்களிலும், இணைய வானொலிகளிலும் தமிழக உறவுகளின் செவிகள் நோக்கி சிறகு விரித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி கவிஞா,

என்னுடைய வரலாற்றுக் கடமை என்பதற்க்காகவே இத்தனை ஆபத்துக்களுக்கும் முகம் கொடுத்து சமரசம் செய்துகொள்ளாமல் எமது விடுதலைப் பணிகளில் இருக்கிறேன். மற்றப்படி அடுத்த வருடம் தை மாதத்தில் போராளிகள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். அதன்பின்னர் பாலுமகேந்திராபோல முழுநேரக் கலைஞனாக தமிழகத்தில் வாழ முடிவெடுத்திருக்கிறேன். தமிழகம் தொடர்ந்தும் என்னை வாழவைக்கும்.

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் எனக்கு காகம் கறுப்பு என்று மட்டுமே எழுதத் தெரியும்.

ஈழத் தமிழர் மத்தியில் சிறந்திருக்கும் குஸ்புகள் போல என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. எப்பவும் ஈழத்தமிழர்களால் மிதிக்கப் பட்ட கவிஞன் நான். என்னுடைய இருப்பும் சிறப்பும் தமிழக கலை ஆர்வலர்களது ஆதரவினால்தான் உருவானது. எனது நூல்கலை பதிப்பித்தது அவற்றை வாங்கியது என்னைத் தாங்கியது எல்லாம் அவர்கள்தான். என்னுடைய ஒரே உழைப்பு கவிதையும் பாடல்களும் ஆய்வுகளும்தான்.

அவர்கள் ஒருபோதும் என் உழைப்பைச் சுரண்டியதில்லை. பாலை இசைத் தொகுப்பை அவர்களது வினியோகத்தர்களிடம் கொடுக்கப்படிருந்தால் இன்றைய பெரும் நெருக்கடி எனக்கு ஏற்படிருக்காது. வறுமையும் ஆபத்தான பணிகளும் யாருக்குமே தலைபணியா வாழ்வும் காலமும் என்னை நலியவைக்கப் பார்க்கிறது. ஆனால்ஒருபோதும் நலிவடைய மாட்டேன்.

இறுதிக் கணம் வரை மாநுடம் வாழ தமிழ் வழ வாழ்வேன்.

வேறு என்ன வசி. உன்னுடைய வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.