Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை

Featured Replies

புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை

[வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 08:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார்.

"இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார்.

காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது.

வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார்.

காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஈழத்தமிழரின் மக்கள் பிரதிநிதிகள் அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆதரவற்று வாடும் ஈழத்தமிழர்களுக்கெதிராக இந்தியா மேற்கொள்ளும் ஈவு இரக்கமற்ற இத்தகைய ராணுவ நடவடிக்கைகளுக்கெதிரான அறிக்கையை இன்னும் ஏன் வெளியிடாதிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

நாம் எவ்வளவுதான் நமது அபயக் கரங்களை நீட்டினாலும் இந்தியா எம்மைக் கிஞ்சித்தும் ஆதரவோடு நோக்கப் போவதில்லை. இது எப்போதோ அறியப்பட்ட விடயம்.

கூட்டணியினர் தமிழர்களுக் கெதிரான இனக் கொலை நடவடிக்கைகளைச் செய்வதற்காக வந்துள்ள இந்திய ராணுவத்தின் பிரசன்னத்தை உலகறியச் செய்வதோடு ஐக்கிய நாடுகள் சபைக்கும் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவேண்டும்.

தனது தனிப்பட்ட தவறுகளால் இன்று வரை அடையாளங் காணப்படாத சிலரை ஆத்திரமூட்டி அதனால் மரணத்தைத் தழுவிக் கொண்ட தனிநபர் ஒருவரின் கொலையைக் காரணங்காட்டி முழுத் தமிழினத்தையும் பழிவாங்க முயலும் இந்தியாவின் பங்களிப்பு இனப் பிரச்சனைத் தீர்வில் அவசியமற்றது என்பதை சர்வதேசத்துக்கு அறியத் தருவதோடு மனித உரிமைகளுக்கான செயற்பாடுகளை இந்தியாவின் எவ்வித தலையீடுமின்றி முடுக்கிவிடச் சர்வதேசம் முயலவேண்டுமென்பதை தமிழர் கூட்டணி தம்பக்கத்து நியாயமாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலமாகும் போதெல்லாம் ஈழப் போராளிகளின் மேல் குற்றங்களைச் சாட்டி தமிழக மீனவர் கொலையிலும் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளிலும் அவர்களைத் தொடர்பு படுத்திச் சேற்றை வார முயலும் இந்தியப் புலனாய்வு அமைப்பினரின் கபடத்தனமான நடவடிக்கைகளுக்கெதிரான மறுப்பறிக்கைகளை தமிழர் கூட்டணியினர் வெளிவிடல் வேண்டும்.

எமக்குப் புத்தி சொல்ல யாரும் தேவையில்லையென்று இறுமாப்புத் தனமாகச் சிந்திக்க முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி இத்தகைய விடங்களையிட்டுக் கேள்வி எழுப்பவும், செயற்படுமாறு தூண்டவும் அனைவருக்கும் உரிமையுண்டு.

இலங்கையரசு இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு எங்களுக்குப் புத்தி சொல்லவோ எங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிடவோ எவரையும் அனுமதிக்கமாட்டோமென்று வெளிப்படையாகவே கூறும்போது, தெற்காசியாவின் ஒரு முக்கிய தேசிய இனத்தின் பிரதிநிதிகள் ஏன் துணிவோடு; இந்தியாவின் கபடத்தனங்களை வெளிக்கொண்டு வருவதிலும் கண்டன அறிக்கைகளை விடுவதிலும் பின் நிற்கிறார்களென்பது புரியவி;ல்லை.

இந்திய நாட்டைச் சேர்ந்த நெடுமாறன் ஐயா, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு உட்படப் பல தனிநபர்களும் மக்கள் அமைப்புக்களும் நேரடியாக இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும்போது நாம் மட்டும் தலையைச் சொறிந்தபடி மீண்டும் மீண்டும் இந்தியாவின் தயவை எதிர்பார்த்துப் பல்லிளிப்பதில் பலனொன்றும் வரப்போவதில்லை.

ஈழத்தமிழர் பாற்பட்ட நலன்களின் மீதான நடவடிக்கைகளிலோ, கரிசனையிலோ இந்தியாவின் பங்களிப்பில் எமக்கு ஐயப்பாடு தவிர்ந்த எதுவித நம்பிக்கைகளுமில்லை, சர்வதேசம் இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளினம் இனக்கொலைத்திட்டங்களிலிருந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி பலமோ

அடி பலமோ

கிலி கொண்டுள்ளார்கள். இனி வவுனியாவுக்கு...ஊகுமாம்..

அதுதான் கொழும்புக்கு ராடரை மாத்துறாங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.