Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம் நடுக்கடலில் படகு கவிழ்ந்து அகதிகள் 7 பேர் பலி

Featured Replies

செப்டம்பர் 13,2008,

ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில் சுற்றிய படகு மறுநாள் அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதிக்குச் சென்றபோது, பலத்த காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் வயதான ஒரு ஆண், நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகள் கடலில் மூழ்கி பலியாயினர். ஒரு பெண் உட்பட ஆறு பேர் நீந்தி தனுஷ்கோடி அருகில் உள்ள மூன்றாவது மணல் திட்டில் கரையேறினர். படகோட்டி தனுஷ்கோடியில் கரையேறினார்

பயந்து செல்பவர்களக்கும் பாதுகாப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: சனம் ஏதோ இந்தியா போனால் தப்பிவிடலாம் என்று போகுது. ஆனால் போற இடத்திலையும் நிம்மதியில்லை, போற வழியிலையும் நிம்மதியில்லை ! போற வழியிலையும் பிணம். போன பிறகும் "நடை" பிணம் !
  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர்

இராணுவ அட்டூளியத்தில் வாழ்ந்தாலும் பறவாயில்லை என்ற முடிவுக்கு அகதியாக வாழ்ந்த மக்கள் முடிவு எடுத்துள்ளார்கள் எனில் இந்தியாவில் அகதி வாழ்க்கையின் தாற்பரியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கூட சுதந்திரமாக வாழ்ந்திட முடியும் அனால் தமிழ்நாட்டில் ?????

அங்கிருந்து வரும் போதே அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது சுதந்திரமாக வாழலாம் என்று சென்று ஏமாந்தவர்களாக இருக்கலாம் இறந்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

எனது கண்ணீர் அஞ்சலிகள்.

இது தமிழக அரசின் மோசமான வெளிப்பாடு.எந்தளவு தரக்குறைவாய் ஈழத்தமிழர்களை நடத்துகின்றார்கள் என்பது?

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது மக்களும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் ஒரு இடத்துக்கு அகதியாக போக முதல் அந்த இடத்திலே எங்களுக்கு உயிர் உத்தரவாதம் உள்ளதா போதிய சுதந்திரம் உள்ளதா எங்களையும் மனிதர்களாக மதிப்பார்களா என்று கொஞ்சமாவது சிந்திக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் கெடுபிடிகள் காரணமாக அங்குள்ள அகதிகள் சிலர் தாயகத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள். அப்படிச்சென்றவர்களில் சிலர் தான் பலியாகி உள்ளார்கள்.

படகு விபத்தில் உயிர்தப்பிய ஈழத்தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்குத் தப்பி வந்தபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் உயிர் தப்பிய 6 தமிழர்களுக்கும் எதிராக தமிழக அரசு வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக தமிழக செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இந்தப் படகு நேற்று அதிகாலை நடுக்கடலில் கவிழ்ந்த போது அதில் பயணித்த 7 பேர் நீரிழ் மூழ்கினர் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழ்வின்

இந்தநிலையில் படகோட்டியுடன் சேர்த்து 6 பேர் சம்பவத்தில் உயிர்தப்பினர்.

இந்தநிலையில் இலங்கைக் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி பிரவேசித்ததாகக் குற்றம் சுமத்தி இவர்களுக்கு எதிராக தமிழக அரசு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.