Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''மாமியார் அல்ல.. தாயார்!''

Featured Replies

''மாமியார் அல்ல.. தாயார்!''

p16oc1.jpgp17zm8.jpg

சடசடவென காதல், படபடவென திருமணம், அதே வேகத்தோடு விவாகரத்து, பின் மீண்டும் இணைவு, ஜாம் ஜாமென்று மீண்டும் ஒரு கல்யாணம்! புருவங்கள் முடிச்சிடுகிறதுதானே? இந்தக் கதைக்கு சொந்தக்காரர்கள்.. கலாவும் பிரசாத்தும். ஆனால், சட்டமே பிரித்துவிட்ட அந்த பந்தத்தை மீண்டும் இழுத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை கலாவின் மாமியாருக்கே சமர்ப்பணம் என்பதுதான் நம் நெஞ்சைத் தொடுகிற ஆச்சர்ய சேதி!

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரசாத் வீட்டுக்கு சென்றபோது, தன் மருமகளுக்கு பூச்சூடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.. கலாவின் மாமியார்!

''அத்தை.. நீங்க பேசினாத்தான் சரியாயிருக்கும்..'' என்று கலா சொல்ல, இயல்பாக பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி.

''எங்களுக்கு கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சி தவமிருந்து பெத்த பிள்ளைங்கிறதால பிரசாத்தை ரொம்ப செல்லமா வளர்த்தோம். ஆனா, அதுக்குப் பரிசா எங்களுக்கு அவன் கொடுத்தது அவமானமும் அடி உதையும்தான்..'' என்று அந்த முக்கிய திருப்பத்துக்கு வெகு சீக்கிரத்திலேயே வந்தார் அவர்.

''அவன் பத்தாவது ஃபெயிலானதுக்கு அப்பறம், மூணு மாசம் வீட்டுலயே இருந்தான். அந்த சமயத்துலதான் எப்படியோ அவன் குடியைப் பழகிட்டான். விஷயம் என் காதுக்கு வர்றதுக்குள்ள, நிலைமை முத்திப் போச்சு.

அழுது, புரண்டு, கெஞ்சி, கூத்தாடினு எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கலை. 'குடிக்கலைன்னா சாகற மாதிரி வருதும்மா.. தயவுசெஞ்சு காசு கொடு..'னு உடம்புல கத்தியால கீறிக்கிட்டு அழுவான். 'பையன் உயிரோட இருந்தாலே போதும் சாமி'னு பதறி காசை எடுத்துக் கொடுக்கறதத் தவிர எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வழி தெரியல. இப்படியே திரிஞ்சவன், இருபது வயசு கூட ஆகல.. ஒரு நாள் இவளைக் கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்து நின்னான்..'' - சொல்லும்போது, அந்த நாளின் அதிர்ச்சி இப்போதும் அவர் கண்களில் ஜனிக்க, மாமியாரைத் தொடர்ந்து பேசினார் கலா..

''அப்போ எனக்கு பதினாறு வயசு. அப்பா, அம்மாவை சின்ன வயசுலயே இழந்துட்டு, அண்ணன் அண்ணியோட வளர்ந்துக் கிட்டிருந்தேன். மூணாவதுதான் என் படிப்பு. என்ன அறிவிருக்கும் சொல்லுங்க? நான் வேலை பார்த்த பெட்ரோல் பங்க் வாசல்ல நின்னு என்னையே பார்த்துக்கிட்டிருந்தவரை எனக்கும் பிடிச்சிருந்தது. லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆயிருக்காது.. உடனே கல்யாணம் பண்ணணும்னு வந்து நின்னார். அடுத்த நாளே தெருமுனை கோயில் வாசல்ல தாலி கட்டி, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார்.

எங்களைப் பார்த்த அத்தை, 'ஒரு பொண்ணோட வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டியேடா..'னு 'ஓ'னு அழுதாங்க. அப்போதான் அவரு குடிப்பாருங்கற விஷயமே எனக்குத் தெரியும். உள்ளுக்குள்ள இடியே விழுந்த மாதிரி இருந்தாலும், 'இனிமே குடிக்க மாட்டாரு'னு என்னை நானே சமாதானப்படுத்திட்டு, அவர நம்பினேன். ஆனா, அவரு திருந்தல. தினமும் குடிதான்.. அடி, உதைதான்.

அப்போல்லாம் அத்தைதான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க. அவங்களுக்கு பெண் குழந்தை இல்லாததால என்னை அவங்க பொண்ணாவே நினைப்பாங்க. 'கவலப்படாதம்மா.. நமக்கும் ஒரு நாள் விடியும்..'னு ஆறுதல் சொல்லுவாங்க.

நாலு மாச புள்ளத்தாச்சியா இருந்தப்போ ஒரு தடவை அவரு என்னை குடி போதையில எங்கண்ணன் வீட்டு வாசல்ல விட்டுட்டு வந்துட்டாரு. விஷயம் கேள்விப்பட்டு அத்தைதான் பதறியடிச்சுக்கிட்டு என்னைக் கூட்டிட்டு வந்தாங்க. 'இவன் எப்படியோ போகட்டும்மா.. நீ வேலைக்குப் போய் சொந்தக் கால்ல நில்லு..'னு சொல்லி ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில என்னை வேலைக்கு சேர்த்து விட்டாங்க. குழந்தை பிறந்தாலாவது அவரு திருந்துவாருனு காத்திருந்தாங்க. அப்படியும் அவரு மாறல.

'தனிக்குடித்தனம் வச்சாலாவது பொறுப்பு வந்து திருந்துவாரா'னு எங்களை தனியா வச்சாங்க. ஆனா, அங்க அவருக்கு சந்தேக புத்தியும் வந்துடுச்சு. கல்யாணமாகி மூணே வருஷத்துல என் வாழ்க்கை நரகமாயிடுச்சு. அதனால அவரைப் பிரியறதுனு முடிவெடுத்தேன். அத அத்தைகிட்டயும் சொன்னேன்..'' என்று கலா நிறுத்த, ஆறுதலாய் கைப்பிடித்து மீதிக் கதையை தொடர்ந்தார் கிருஷ்ணவேணி..

''பாவம் இவ.. பதினாறு வயசுல, அடியும் உதையும்தான் வாழ்க்கைனா யாருதான் பொறுத்துக்குவா? நானும் அவன் திருந்திடுவான்னு என்னன்னமோ செஞ்சு பார்த்தேன். நடக்கல. 'போறேன் அத்தை..'னு இவ சொன்னப்போ, 'கொஞ்சம் பொறுக்கலாமேமா..'னு சொல்ல எனக்கு வாய் வரல. ஏன்னா, என் மகனோட கொடுமை அவ்வளவு அதிகம்.

நமக்கொரு பொண்ணு இருந்தா, இப்படி ஒரு மிருகத்தோட 'போய் வாழு'னு மனசார அனுப்பி வைப்போமா? அதனால நானும் என் மருமக சொல்லுக்கு மறுசொல்லு பேசல.

கோர்ட்ல விவாகரத்துக்கு தாக்கல் செஞ்சாங்க. கண்ணு முன்னாடியே இப்படி குடியால எங்குடும்பம் சிதைஞ்சு போகுதேனு நாளெல்லாம் மனசு அடிச்சுக்கிச்சு. நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வழி கிடைச்சுடாதானு, அவன திருத்தறதுக்கு முழுமூச்சா ஓடினேன்.

குடியை மறக்கறதுக்காக அவனை மூணு தடவை ஆஸ்பத்திரியில சேர்த்து வைத்தியம் பார்த்தோம். அங்க இருக்கற வரைக்கும் நல்லா இருப்பான். வீட்டுக்கு வந்தா வேதாளம் முருங்க மரம் ஏறிடும். வேண்டாத சாமியில்ல.. அவன் கிட்ட வாங்காத பேச்சு இல்ல. குடிபோதையில அம்மானுகூட பார்க்காம காது கூசுறமாதிரி பேசுவான். 'ச்சீ.. நீ என் புள்ளயே இல்ல..'னு வெறுத்து உட்கார்ற மறு நிமிஷம், கலா ஞாபகம் வரும். எனக்கு புள்ள வேணாம்.. ஆனா, கலாவுக்கு புருஷன் வேணுமே.. அவ புள்ளைக்கு அப்பன் வேணுமேனு மறுபடியும் அழுகைய தொடச்சுட்டு கிளம்பிடுவேன்.

கடைசியா ஒரு குடிபோதை மறுவாழ்வு மையத்துல அவனை சேர்த்து விட்டோம். அங்கேயே ஒரு மாசம் தங்க வச்சு அவங்க வைத்தியம் பார்க்க, எந்த சாமி புண்ணியமோ.. என் புள்ள முழுசா குணமானான்!'' என்றவரின் கண்களில் தாரையாக வழிந்தது தண்ணீர்.

6 வயது மகன் ஜீவனோடு வெளியே சென்றிருந்த பிரசாத், அந்த உருக்கமான தருணத்தில் சரியாக வீட்டுக்குள் நுழைந்தார். 'இவரா அத்தனை மோசமாக நடந்து கொண்டவர்..' என்ற ஆச்சர்யம் எல்லோரையும் போல நமக்கும் வந்தது. ஆனால், அம்மாவும் மனைவியும் பேசுவதை முக அசைவால் ஆமோதித்துக் கொண்டு அருகிலேயே நின்றார் அவர்.

''அடுத்த நாளே இவனை நேரா கலாகிட்ட மன்னிப்பு கேட்டு, அவளை கூட்டிட்டு வரச் சொல்லி அனுப்பி வச்சேன். அவனும் போனான். ஆனா, அப்பவும் இவனை நம்பாம 'உண்மைதானா அத்தை?'னு எங்கிட்ட வந்து கேட்டா.. என் மருமக!'' என்றதும் தொடர்ந்தார் கலா.

''வார்த்தைக்காக சொல்லலைங்க.. அம்மா இல்லாத எனக்கு அத்தைதான் எல்லாமுமா இருந்திருக்காங்க. கோர்ட் எங்களுக்கு விவாகரத்து கொடுத்துட்டாலும் அத்தைதான் எனக்கு சுப்ரீம் கோர்ட். 'நான் பட்ட கஷ்டமெல்லாம் உனக்காகத்தாம்மா. ஒத்தைகட்டையா இருந்திருந்தா அவன் எங்களை படுத்தின பாட்டுக்கு 'எப்படியோ போய்த் தொலைடா'னு தலைமுழுகிஇருப்போம். இப்போ அவனைத் திருத்திட்டோம்'னு சொன்னாங்க. உடனே மறு பேச்சு பேசாம பெட்டியோட வந்துட்டேன்'' என்கிற கலாவும் பிரசாத்தும் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்து 10 மாதங்கள் ஆகின்றன. ஆனால், சென்ற மாதம்தான் இவர்களுக்கு ஊரைக் கூட்டி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் கிருஷ்ணவேணி!

'' 'எனக்கு தெரு கோயில்ல வச்சு தாலி கட்டிட்டாரு அத்தை..'னு ஒரு தடவ கலா, எங்கிட்ட வருத்தப் பட்டுச்சு. அது என் மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இவன் சரியானதுக்கு அப்பறம் ஊரைக் கூட்டி ஒரு நல்லது பண்ணணும்னு நெனச்சிருந்தேன். நேரம் காலம் கூடி வந்தப்போ செஞ்சுட்டேன். என் பையன் இப்போ வேலைக்குப் போறான். இன்னொண்ணு தெரியுமா.. கலா வயித்துல இப்போ என்னோட ரெண்டாவது பேரப் புள்ள வளருது..!'' என்கிறபோது அத்தனை சந்தோஷம் பொங்குகிறது அவர் கண்களில்.

''எனக்கு பையன் பொறந்தா வரப்போற மருமகள்களுக்கு நான் எங்க அத்தை மாதிரி பாசமான மாமியாரா இருக்கணும். பொண்ணு பொறந்தா அவளுக்கு எனக்குக் கிடைச்ச மாதிரி ஒரு மாமியார் கிடைக்கணும்.. அவ்வளவுதாங்க!'' - மனம் நிறைந்து கலா சொல்ல, மலைத்து விடைபெற்றோம்!

- லாவண்யா

படங்கள்: நாகமணி

நன்றி அவள் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

மாமியாரின் கொடுமைகள் தாங்காமல் தான் பல திருமணமான பெண்கள் ஓடுவதையும் சித்திரவதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதையும் பார்த்தும் இருக்கிறோம் கேட்டும் இருக்கிறோம் இது கொஞ்சம் வித்தியாசமாகதான் இருகிறது

ஆனால் ஈழத்தில் இப்படியான மாமிகளைதான் அதிகம் பார்த்திருக்கிறேன் அந்த கிருஸ்ர வேணி அம்மையாரை போல :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மாமியார் , மருமகள் பிரச்சினை பெரிதாக இருப்பதாக நான் கேள்விப்படவில்லை .

சில வேளை இந்த தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பதால் , எதிர்காலத்தில் அப்படியும் ஒரு புது பிரச்சினை உருவாகலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஈழத்தில் இப்படியான மாமிகளைதான் அதிகம் பார்த்திருக்கிறேன் அந்த கிருஸ்ர வேணி அம்மையாரை போல :D

அடேயப்பா.. இப்பத்தான் விளங்குது ஏன் ஒரு ஆசாமி சாமியானதெண்டு..! :lol::(

ஈழத்தில் மாமியார் , மருமகள் பிரச்சினை பெரிதாக இருப்பதாக நான் கேள்விப்படவில்லை .

சில வேளை இந்த தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பதால் , எதிர்காலத்தில் அப்படியும் ஒரு புது பிரச்சினை உருவாகலாம் .

அங்கதான் நாங்க நிக்கிறம்..! மாப்பிள்ளையை பாசல் பண்ணி பொம்பிளையோட தனியா எல்லே அனுப்பி வைச்சிடுவம்? பிறகு மாமியார் வந்து என்னத்தைக் கிழிக்கிறது? :(

  • கருத்துக்கள உறவுகள்

நமெ='Dஅஙுவார்' டடெ='ஸெப் 19 2008, 02:27 ஆM' பொச்ட்='447042']

அடேயப்பா.. இப்பத்தான் விளங்குது ஏன் ஒரு ஆசாமி சாமியானதெண்டு..! :( :லொல்:

சாமியாகிறதெண்டால் சும்மாவா டங்குவார் எத்தனை பேரை பார்த்திருப்போம் [மாமி,வுட்டி] :(:D:lol:

ஓ..அப்படியோ வசபண்ணா..ணா..!!

டகவலிற்கு நன்றி..றி..நானும் எல்லா மாமியாரும் "சீரியலில" வாறவா மாதிரி அல்லோ கற்பனை பண்ணி கொண்டிருந்தனான் இப்படியும் நல்லவையளும் இருக்கீனமோ..??.. :o

அப்ப சரி..ரி..ஆனா..னா எனகொரு சந்தேகம்..(பொதுவாக).. அதுவென்னவெண்டா..டா..கல்யாணம் கட்டினா பெறகு சில பேர் வந்து மனிசியின்ட சொல்ல மட்டும் தான் கேட்பீனம் சில பேர் வந்து மனிசியின்ட சொல்ல கேட்கமாட்டீனம்..ம் தன் அம்மா சொல்லுறதை தான் கேட்பீனம்..ம்..(அது பிழை எண்டு சொல்லல்ல).. :wub:

ஆனா இதனால் ஒரு பிரிவினர் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் அல்லோ..லோ..??..ஆனபடியா இப்படியான நிலமையை சமாளிக்க என்ன செய்வியள்..ள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ..!! :wub:

பிறகு என்ன தப்பா நெனைக்கிறதில்ல..ல அப்பப்ப எனக்கு இப்படி எல்லா மூள ஓடுது நான் என்ன செய்ய..ஓட வேண்டியதில மூளஓடுதில்ல..ல.. :(

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கை என்பது ஒரு வலி..அதில் கடக்க வேண்டியது பல வழி" :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.